Skip to main content

விடை 3492

இன்றைய வெடி:
காயப்போட்டு  திறமையான வழிமுறையில் பலர் தொடங்கவில்லை (5) 
இதற்கான விடை:  உலர்த்தி = உத்தி + (ப)லர்
புயலும் மழையும் கொட்டப்போகிறது என்று முன்னேற்பாடாகக் காலையிலேயே துவைத்துத் துணியைக் காயப்போட்ட சென்னைவாசிகளுக்காக இந்த புதிர்!

புயல் வந்தாலும் வராவிட்டாலும் வாடிக்கைபோல் காலை 6 மணியளவில்  நாளைய வெடி வீசப்படும் (120கிமீ வேகத்தில்,  ஜாக்கிரதை!)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (57):

1) 6:06:17 ராஜா ரங்கராஜன்
2) 6:07:03 எஸ்.பார்த்தசாரதி
3) 6:08:05 ராதா தேசிகன்
4) 6:08:07 இரா.செகு
5) 6:08:35 முத்துசுப்ரமண்யம்
6) 6:10:08 கேசவன்
7) 6:10:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:11:10 ரவி சுப்ரமணியன்
9) 6:11:34 சங்கரசுப்பிரமணியன்
10) 6:13:36 சதீஷ்பாலமுருகன்
11) 6:13:45 மு.க.இராகவன்.
12) 6:14:05 ரவி சுந்தரம்
13) 6:14:18 சங்கரசுப்பிரமணியன்
14) 6:14:27 நங்கநல்லூர் சித்தானந்தம்
15) 6:15:02 சுந்தர் வேதாந்தம்
16) 6:16:31 உஷா
17) 6:16:38 வி ன் கிருஷ்ணன்
18) 6:17:02 லதா
19) 6:17:04 K. R. Santhana.
20) 6:17:43 வி ன் கிருஷ்ணன்
21) 6:18:07 KB
22) 6:27:47 கி மூ சுரேஷ்
23) 6:36:59 லக்ஷ்மி ஷங்கர்
24) 6:38:48 சாந்தி நாராயணன்
25) 6:39:01 Siddhan Subramanian
26) 6:41:33 மு க பாரதி
27) 6:48:58 சந்திரசேகரன்
28) 6:51:48 ராஜி ஹரிஹரன்
29) 7:05:02 மடிப்பாக்கம் தயானந்தன்
30) 7:06:51 ஹரி பாலகிருஷ்ணன்
31) 7:11:02 ஆர்.நாராயணன்.
32) 7:12:15 பா நிரஞ்சன்
33) 7:17:25 மீ கண்ணன்
34) 7:21:09 புவனா சிவராமன்
35) 7:22:34 மாலதி
36) 7:28:12 அம்பிகா
37) 7:33:13 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
38) 7:51:48 ராமராவ்
39) 7:52:00 கு.கனகசபாபதி, மும்பை
40) 7:55:06 பினாத்தல்
41) 7:56:49 நாதன் நா தோ
42) 8:12:57 எஸ் பி சுரேஷ்
43) 8:26:41 பிரசாத் வேணுகோபால்
44) 8:31:46 தேன்மொழி
45) 8:38:13 மீனாக்ஷி கணபதி
46) 9:27:11 மீனாக்ஷி
47) 9:54:28 ஸௌதாமினி
48) 9:59:58 கோவிந்தராஜன்
49) 10:46:25 ருக்மணி கோபாலன்
50) 13:19:21 ஆர். பத்மா
51) 15:01:47 ரமணி பாலகிருஷ்ணன்
52) 15:02:04 நியாஸ்
53) 16:38:48 வானதி
54) 18:02:43 M baloo
55) 18:52:24 Sandhya
56) 19:14:19 மாதவ்
57) 19:35:03 ஶ்ரீவிநா
**********************
Raghavan MK said…



A peek into today's riddle!
**********************
*உத்தி* (இலக்கியம்)

உத்தி என்பதன் விளக்கம் என்னவென்று நன்னூல் விளக்குகிறது. ஒரு நூலால் அறிவிக்கப்படும் பொருளை உலக வழக்கு, நூல் வழக்கு ஆகிய வழக்குகளோடு பொருத்திக் காட்டவேண்டும். அப்பொருளை மற்ற நூல்களிலும் (குறிப்பாக இலக்கிய நூல்களில்) ஏற்ற இடமறிந்து இவ்விடத்திற்கு இப்படி எனத் தக்கபடி பொருத்திக் காட்டி நூலை நடத்திச் செல்ல வேண்டும். இதுவே தந்திர உத்தியாகும்.

_"நூற்பொருள்_ _வழக்கொடு வாய்ப்பக்_ _காட்டி, ஏற்புழி_ _அறிந்திதற்கு இவ்வகை யாமெனத் தகும்வகை_ _செலுத்துதல் தந்திர உத்தி."_

நன்னூல்(15)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*_உத்தி_*
பெயர்ச்சொல்

ஒரு செயல் அதிக அளவு பலனை அளிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்படும் _திறமையான வழிமுறை;_
ஒன்றைச் செயல்படுத்துவதற்கு உரிய திறமையான திட்டம்.
**********************
_காயப்போட்டு  திறமையான வழிமுறையில் பலர் தொடங்கவில்லை (5)_  

_திறமையான வழிமுறையில்_
= *உத்தி*

_பலர் தொடங்கவில்லை_
= *லர்*

_காயப்போட்டு_
= *உத்தி <----லர்*

= *உலர்த்தி*
**********************
சிவனடியார்களின் துணிகளை துவைத்து *காயப்போட்டு* தொண்டு செய்தார் ஒரு நாயன்மார், காஞ்சிபுரத்தில்!
இதோ அவரைப்பற்றிய சிறு குறிப்பு.

*_திருக்குறிப்புத் தொண்டர்:_*

63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப் படுபவர்.
சிவனடியார்களின் குறிப்பு அறிந்துத் தொண்டு செய்த தன்மையாளர்.
அடியவர்களின் உடையை துவைத்து *உலர்த்திக்* கொடுக்கும் புனிதமான திருத்தொண்டைப் புரிந்து வந்தார். அடியவர்களின் உடையில் உள்ள மாசை நெடுங்காலம் நீக்கிய பண்பால், ஆன்மாவில் படிந்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற முக்கறைகளும் நீங்கப் பெற்றார்
💐🙏🏼💐
Muthu said…
அருமையான, பயனளிக்கும் விளக்கங்கள். பணி தொடர வேண்டுகிறேன். நன்றி!
Chittanandam said…
120 கிலோமீட்டரா! பயமாக உள்ளதே. கருணை காட்டுங்கள்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.