Skip to main content

விடை 3499

இன்று காலை வெளியான வெடி:

கரைகளில்லாமல் வற்றும் ஒரு நதி புரண்டோடும் சந்துகளில் மக்களைச் சுமந்து (5)

இதற்கான விடை: சிற்றுந்து = சிந்து + ற்று



Comments

Ambika said…
This comment has been removed by the author.
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
_இளஞ்சிவப்பு  சூரியன்_
_அழகாக ஒளிர_
_ஓயாமல் கரையைத் தொடும்  அலை_ _*புரண்டோடும்* கடல் வியக்கிறேன் !_
_ரசிக்கிறேன்!_
**********************
_*வறண்டு* கிடக்கும் ஆற்றில் கரை_ _*புரண்டோடும்* வெயில் வெள்ளம்._

_மேலே பறந்து கொண்டிருக்கும்_ _தனித்தொரு பறவை வானில் ஒரு_ _குளிர்மேகம் தேடி!._

(கு.அழகர்சாமி)
🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
_கரைகளில்லாமல் வற்றும் ஒரு நதி புரண்டோடும் சந்துகளில் மக்களைச் சுமந்து (5)_

_கரைகளில்லாமல் வற்றும்_
= _[வ]ற்று[ம்]_
= *ற்று*

_ஒரு நதி_ = *சிந்து*

= *சி +ற்று+ந்து*
= *சிற்றுந்து*

_புரண்டோடும் சந்துகளில் மக்களைச் சுமந்து_

= _சந்துகளில் மக்களைச் சுமந்து புரண்டோடும்_

= *சிற்றுந்து*
🚌🚌🚌🚌🚌🚌🚌🚌
_சிற்றுந்து_
இருபத்தைந்து இருக்கைகள் கொண்ட வாகனம்.
சிற்றூர்க்கிடையே செல்லும் குறுந்தொலைவு வண்டி.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_தமிழ் இலக்கியம்_
_*சிந்து* பாடல்கள்_

சங்க இலக்கியம் இயல் இசை நாடகம் என மூன்று பிரிவில் அடக்கப் படுகிறது. *_அதில் இசை என்னும் பிரிவில் சிந்து பாடல்களும் உள்ளடங்குகின்றன._*
*சிந்து* என்பது நடைப்பாடல். பயணத்தின் போதோ, பயணத்துக்கு முன்னரோ உற்சாகம் பற்றிக் கொள்வதற்காகப் பாடுவது! காவடி எடுத்துப் பயணம் போகும் போது பாடுவது _காவடிச் சிந்து_ ! இவற்றுள் ஒரு பாடலை இங்கே பார்க்கலாம்.  

*யசோதை* :
_மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்_

*கண்ணன்* :
_போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே_

_காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன் கை நிறைய_ _வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்_

_காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்_ _உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில்_ _திரும்பிடுவேன் போக வேணும் தாயே –_

_கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள்_ _உண்டு கரடி புலியைக் கண்டால்_ _கலங்கிடுவாய் கண்மணியே_
_போக வேண்டாம்_

_காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும் கூட்டங் கூட்டமாக_ _வந்தால்_ _வேட்டை ஆடி ஜெயித்திடுவேன் போக வேணும் தாயே –_ _தடை சொல்லாதே நீயே_
💐🙏🏼💐
**********************
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (29):

1) 6:03:11 ராமராவ்
2) 6:05:03 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
3) 6:06:39 எஸ்.பார்த்தசாரதி
4) 6:09:49 ராஜா ரங்கராஜன்
5) 6:10:06 K.R.Santhanam
6) 6:13:21 ரவி சுந்தரம்
7) 6:14:04 ரவி சுப்ரமணியன்
8) 6:27:40 அம்பிகா
9) 6:35:01 இரா.செகு
10) 6:36:51 மீனாக்ஷி கணபதி
11) 6:55:02 நங்கநல்லூர் சித்தானந்தம்
12) 6:57:56 உஷா
13) 6:58:22 நாதன் நா தோ
14) 7:52:08 வி ன் கிருஷ்ணன்
15) 8:16:17 Siddhan Subramanian
16) 9:06:40 பினாத்தல் சுரேஷ்
17) 9:51:36 மாலதி
18) 10:21:09 லதா
19) 10:55:52 மீ கண்ணன்
20) 11:58:03 KB
21) 12:15:34 பிரசாத் வேணுகோபால்
22) 14:22:54 மு.க.இராகவன்.
23) 14:31:32 மடிப்பாக்கம் தயானந்தன்
24) 17:20:21 பாலு மீ
25) 17:52:41 மு க பாரதி
26) 18:34:13 சுந்தர் வேதாந்தம்
27) 18:35:35 மாயா வேதாந்தம்
28) 19:07:51 கோவிந்தராஜன்
29) 19:32:45 சுபா ஸ்ரீநிவாசன்
**********************
Raghavan MK said…
சிந்து சமவெளி திராவிடர்களின் கடவுள் முருகர் : பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஆய்வு கட்டுரையில் தகவல்

சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரிய கடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர் திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது, என்று “செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா சிந்துசமவெளி எழுத்துக்கள் குறித்து ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார்.

இப்புதிரின்அமைப்பு வழக்கமான சொற்சிக்கனத்தைக் கடைப்பிக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. 'எதிரும் புதிரும்' குழுவிலும் இது அலசப்பட்டது. Container construction என்பதால் 'புரண்டு'வின் நோக்கம் என்ன?
'சந்து' container indicatorஆ?
ஆசிரியரின் விளக்கத்தை அறிய விழைகிறேன்.
Vanchinathan said…
மாநகரப் போக்குவரத்துக் கழகம் சென்னையில் பேருந்துகள் பிரதான சாலைகளிலேயே செல்வதால் சில உள்ளடங்கிய பகுதிகளில் உள்ள மக்கள் வெகுதூரம் வந்து பேருந்தைப் பிடிக்க வேண்டியிருப்பதைக் கண்டு சந்துகள் சிறு தெருக்களிலும் செல்லும்படி 25 பேர் அமரும்படியான சிறிய வண்டிகளை சில ஆண்டுகளுக்கு முன் இயக்கத் தொடங்கியது. அதனால் "சந்து" என்று புதிரில் குறிப்பிட்டது, பேருந்தில்லைட, சிற்றுந்து என்பதை அடிக்கோடிட.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.