Skip to main content

தீபாவளிப் புதிருக்கான விடை:

புதிர் வாக்கியம்:
ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான தெய்வத்தின் ஊரிலுள்ள (A) தன் சொந்த வீட்டில்   பிறந்தநாளைக்  (B) கொண்டாட  அவன்   பளபளக்கும் ஆடையணிந்து (C)   மிடுக்குடன் நடந்து வந்த  போது  அவன் ஓரு  அக்பரின் பட்டம் (D) போல் இருந்தான்  என்பதில்  கொஞ்சங்கூட (E)  சந்தேகமில்லை.


விடை வாக்கியம்:
நாமக்கல்லிலிருக்கும் (A) தன் சொந்த வீட்டில்   ஜனனதினத்தைக் (B) கொண்டாட  அவன்   பட்டுடுத்தி (C)   மிடுக்குடன் நடந்து வந்த  போது  அவன் ஓரு  பேரரசன் (D) போல் இருந்தான்  என்பதில் எள்ளளவும் (E)  சந்தேகமில்லை.

ஜனனதினம் என்பதை பிறந்த திதி என்றும் நான் எண்ணாத மற்றொரு மாற்று சொல்லும் அளிக்கப்பட்டிருக்கிறது.

 ஒரே எழுத்து அடுத்தடுத்து ஒரே சொல்லில் இடம்பெறுவதுதான் விசேஷமான ஒற்றுமை. பார்க்கப்போனால் ஆங்கிலம் போல்  தமிழில் இயல்பாக எந்த எழுத்தும் இரட்டிப்பதில்லை (இருக்கிறதா? தெரிந்தால் சொல்லுங்கள், நான் பத்து ரூபாய்க்கு ஒன்று என்று பணங் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்).
 மற்றோர் சொல்லுடன் இணையும் போதுதான் தமிழில் எழுத்துகள் இரட்டிக்கின்றன.

ஜனனம், திதி -- இவை இரண்டும் வடமொழி
மற்றவையெல்லாம் ஒட்டு முறையில் ஜனனமானவை:
நாமக்கலில் இருக்கும்
பட்டு உடுத்தி
பெருமை அரசர் (மையீற்றுப் பண்புப் பெயர்களைத் தொடர்ந்து உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள் வர .... கொட்டாவி வரும் இலக்கணத்தை முழுதாகக் கூறினால்)

எள் அளவும்
-------------

புதிருக்கான விடையைக் கண்டு பிடித்தவர்கள்.
1. அம்பிகா  2. ஹரி பாலகிருஷ்ணன் (5 விடைகளும்)

நாமக்கல்லிருக்கும் என்ற முதல்விடையை அதிகப்படியான குறிப்பாகக் கொண்டு ம் மற்ற 4 விடைகளும் கண்டுபிடித்தவர்கள்:
3. ரவி சுப்ரமணியன்
4. கேசவன்
5. உஷா
6. பாலு மீ
7. சதீஷ்பாலமுருகன் 
8. மீனாக்ஷி




Comments


Repetition of a "sound" maybe harsh on the speaker and the listener. English spelling being a non-phonetic, repetition of letters often does not translate to repetition of sound. On the contrary Tamil spelling is phonetic. Several loan words from Sanskrit exhibit this repetition.
உஷா said…
பிறந்தநாள் என்பதற்கு நீங்கள் எதிர்பார்க்காத அந்த மாற்றுச் சொல்லையும் வெளியிடலாமே

"பிறந்ததிதி" என்பதுதான்.
Vanchinathan said…
This comment has been removed by the author.
Ambika said…
ககனம்‍‍‍‍ -- வடமொழி மூலம் வந்தது
Vanchinathan said…
ஆமாம். பிறந்ததிதி என்பதுதான் எதிர்பாராமல் வந்த விடை. சொல்ல மறந்துவிட்டேன்.
Vanchinathan said…
ஆமாம், மமதை என்று ஒன்று இருக்கிறது. பத்து ரூபாய் எடுத்து வைத்துவிட்டேன். வங்கிக் கணக்கெண்ணைச் சொல்லிவிடுங்கள். அனுப்பிவிடுகிறேன்.
உஷா said…

மனனம்-மனப்பாடம்
எனக்கும் ஒரு பத்து ரூபாய் எடுத்து வைத்துவிடுங்கள்
உஷா said…

பேரரவம் கேட்டிலையோ?
உஷா said…

மாமாங்கம்
Vanchinathan said…
பேரரவம், இயல்பான வகையில் சேராது என்று முன்பே சொல்லியிருக்கின்றேனே. (பேரரசன்=பெருமை அரசன்)
Ambika said…
மாமாங்கம் என்பது மஹா மஹம்

மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுகள் வடமொழி வழி வந்தவை அல்லது இரு சொற்களின் சேர்க்கையால் வந்தவை. "போதாதா?" என்ற ஒன்று மட்டுமே எனக்கு தோன்றுகிறது.
Ambika said…
கட்டடம்
Ambika said…

போதாது என்பதின் கேள்வி வடிவம்
Ambika said…

புக்ககம், இயக்ககம்...ஆனால் 2 வார்த்தைகள் சேர்ந்து வந்துள்ளன

அருமை. பத்து ரூபாய் வாங்கி விடுங்கள்.
உஷா said…

மனனம் சரிதானே?
உஷா said…

ஓருருவம்
Raji said…
This comment has been removed by the author.
Vanchinathan said…
திகில் கதைகளில் வருமே "இருட்டில் ஓருருவம் அங்கே பதுங்கி நின்றதை அவன் கவனிக்கவில்லை". அதுவா? பயமாயிருக்கிறதே!
Raji said…

தங்ககம்பி
Raji said…

பாருருவம் ( பாருருவாய பிறப்பற வேண்டும்)
Senthil said…
This comment has been removed by the author.
Senthil said…
கொள்ளளவு
Vanchinathan said…
அடுத்த பதில் யாருருவாக்கினாலும் பத்து ரூபாய் கிடையாது. ஓருரூபாதான்! (ஓர் உரூபா) கஜானா காலியாகிக் கொண்டிருக்கிறது!
Vanchinathan said…
நல்ல நல்ல வார்த்தைகளைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். இதை நான் உள்ளளவும் மறக்கமாட்டேன்!
உஷா said…

சொல்லலங்காரம் செய்துவிட்டோம்.
சொன்னேனே, சொக்கினேனே, சிந்தினேனே, பற்றினேனே, கடத்தினேனே என பல நூறு
வார்த்தைகள் கூறலாமே!
Vanchinathan said…
இதுவும் நல்ல உத்தி. ஏ என்று சேர்த்து. அதேபோல் ஆ சேர்த்து கேள்வியாகவும் பல நூறு ஆக்கலாம். சொன்னானா? சொக்கினானா? சிந்தினானா? கடத்தினானா?
Vanchinathan said…
சொல்லலங்காரத்தைக் காட்டித் தமிழழகை விளங்கவைத்தீர்களே பாராட்டுகள்!
உஷா said…

ஆமாம். கண்டிடின் தேடிடின் ஓடிடின் சாடிடின் என்றும் வரிசை கட்டலாம்
Raghavan MK said…


The answers submitted by me 👇🏽

A.கும்பகோணத்தில்
B. ஜன்மதினத்தைக்
C.பட்டாடையணிந்து
D.சக்ரவர்த்திப்
E.இம்மியளவுகூட

The common factor being the number of lettets in each word being (8).

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்