** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா? இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு சொந்தக்காரர்கள் எல்லோரும் உடந்தையா? இது புதிருங்க. படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான சூத்திரம். சுற்றமும், நட்பும் சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள் சுற்ற : வட்டமிட ம் : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள் = வட்டமிட ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "=" குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...
Comments
*_புதிருக்குள் புகுவோம்!_*
************************
_கட்டிவைத்து ஒரு மணிக்குள் அகப்பட்ட பண்டாரம் ஆடவன் இல்லை (4)_
_ஒரு மணிக்குள் அகப்பட்ட_
= *முத்து*
_பண்டாரம் ஆடவன் இல்லை_
= *ஆண்டி - ஆண்*
= *டி*
_கட்டிவைத்து_ = *முத்து* க்குள் *டி*
= *முடித்து*
**********************
*_ASIDE...._*
_பவளங்கள் எல்லாம்_ _மலையில் பிறந்தும்_
_மலைக்கவை சொந்தம் இல்லை_
_ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும்_
_அதில் ஒரு தவறும் இல்லை_
🌺🌺🌺🌺🌺🌺🌺
_மலைகளில் சிறந்த மலை மருதமலை!_
_சிவன் மகன் வந்து விளையாடும் அழகு_ _மலை!_
_ஆகா இதற்கு மிஞ்சி_ _மலையும் இல்லை!_
_பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை!_
_அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை!_ _பெற்ற_
_அப்பனுக்கே பாடம்_ _சொன்ன மகனும்_ _இல்லை!_
_பிஞ்சிலே பழுத்தாலும்_ _துவர்ப்பும்_ இல்லை! _இனி_
_பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை!_
_மலைகளில் சிறந்த மலை மருதமலை!_
💐🙏🏼💐
1) 6:02:59 முத்துசுப்ரமண்யம்
2) 6:04:26 ராஜா ரங்கராஜன்
3) 6:08:58 ஆர்.நாராயணன்.
4) 6:13:08 எஸ்.பார்த்தசாரதி
5) 6:17:45 கேசவன்
6) 6:18:06 லதா
7) 6:22:57 ரவி சுப்ரமணியன்
8) 6:23:06 KB
9) 6:32:18 ராமராவ்
10) 6:35:23 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:41:04 நாதன் நா தோ
12) 7:17:55 அம்பிகா
13) 7:18:34 வானதி
14) 7:27:39 மாதவ்
15) 7:32:18 ரவி சுந்தரம்
16) 7:52:12 மாலதி
17) 7:59:02 எஸ் பி சுரேஷ்
18) 8:14:28 திருக்குமரன் தங்கராஜ்
19) 8:14:38 மீ கண்ணன்
20) 8:23:34 தேன்மொழி
21) 8:26:25 Siddhan Subramanian
22) 8:30:54 மு க பாரதி
23) 8:33:00 பாலு மீ
24) 8:45:56 லட்சுமி சங்கர்
25) 9:13:28 மீனாக்ஷி
26) 10:07:34 பிரசாத் வேணுகோபால்
27) 10:11:10 பினாத்தல் சுரேஷ்
28) 10:28:13 ஆர். பத்மா
29) 10:59:55 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
30) 11:11:45 வி ன் கிருஷ்ணன்
31) 11:44:40 ராஜி ஹரிஹரன்
32) 11:49:42 ருக்மணி கோபாலன்
33) 11:57:18 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
34) 13:04:36 புவனா சிவராமன்
35) 13:36:09 மு.க.இராகவன்.
36) 16:54:48 சங்கரசுப்பிரமணியன்
37) 17:41:03 மீனாக்ஷி கணபதி
38) 19:15:07 பாலா
**********************
முத்தான சொற்கொண்டு
கட்டிவைத்த புதிரின்று,
கட்டழகியின் கட்டிவைத்த
குழலில் *முடித்து* வைத்த
முத்துப்போல் உயர்ந்துநின்று
அழகு காட்டியது!
முத்து, சிப்பிக்குள் அகப்பட்டதல்லவா, மணிக்குள் முத்து பொருந்துமா?
முத்து ஒரு மணி தானே...
Precious stone.