Skip to main content

சீரமைத்த உதிரிவெடி 3485


இன்றைய வெடிக்கு விடைகள் அனுப்பியவர்களே மாலை ஏழு மணிவரை வெறும்  20 பேர்தான்.  அதில் கேசவன் ஒருவர் மட்டும்தான் சரியான விடையை அனுப்பியிருந்தார்.  ஏன் நிலைமை இப்படியிருக்கிறது என்று நினைத்துப் பார்த்ததில் நான் செய்தது சரியில்லை என்று தெரிகிறது.
நான் நீளமான வெடியாயிருந்தால் சுருக்க முடியுமா என்று யோசிப்பேன். இன்று அதைச் செய்யாததால் காலந்தாழ்த்திச் செய்கிறேன்.

புதிர் மிகவும் நீளமாக இருக்கிறது. எதை எங்கே போய் முட்டிப் பார்ப்பது என்றால் சிக்கலாகிக் குழப்பமாகிவிடுகிறது. ஒத்துக் கொள்கிறேன், இது போன்ற புதிரை நான் ரசிக்க மாட்டேன்.

பழைய வடிவம்: தைரியம், மன வலிமை உடையவன் இல்லாமல் போக மன நீக்கத்தால் இருக்கிறான் (3)  

இப்படி மனக் கலக்கத்தை உண்டு பண்ணிய புதிரிலிருந்து மனங்களை விரட்டிச் சீரமைத்த புதிய வடிவம்:
தைரியம் உடையவன் இல்லாமல் போக கடைசியாய் இருக்கிறான் (3) 

இப்போது இரவு 10 மணிவரை முயலுங்கள்.

Comments

Chittanandam said…
Right from morning I was struggling with the Puzzle. I could not 'read' it properly. The revised one not only gave me the right answer but also clarified the mystery behind the original.

Thank you.
Ramiah said…
தீரன்
Ramiah said…
could not understand the mystery behind the original , Please explain the method of arriving at answer for the original puzzle >
M k Bharathi said…

Not much difference between original and revised.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.