Skip to main content

விடை 3481


இன்று காலை வெளியான வெடி:
ஒடுக்கப்பட்டோர்  இசைக்கருவி மழையால் நடுவில் ஒதுங்கிய  குந்தவை இருந்த இடம் (4) 

இதற்கான விடை:  பழையாறை = பறை + ழையா  ("மழையால்" நடு)
கும்பகோணத்துக்கு மேற்கே 10 கிமீ தொலைவில் அரசலாற்றங்கரையில் உள்ள ஊர். ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை அங்கே ஒரு மாளிகையில் இருந்து வந்தார். பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
(அங்கே ஒரு கிராமத்துக்கு இப்போதுள்ள பெயரே "சோழன் மாளிகை")

Comments

Raghavan MK said…
*இன்றைய புதிரை அவிழ்ப்போம்!*
************************
தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி *பறை* . அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது. பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையர்குடியின்குறயீடாகவும், தொழிலாகவும் அமைந்தது. பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் ' *பறை* ' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. 
************************

_ஒடுக்கப்பட்டோர்  இசைக்கருவி மழையால் நடுவில் ஒதுங்கிய  குந்தவை இருந்த இடம் (4)_ 

_ஒடுக்கப்பட்டோர்  இசைக்கருவி_

= *பறை*

_மழையால் நடுவில் ஒதுங்கிய_
=
[ம ] *ழையா* [ல்]

_குந்தவை இருந்த இடம்_
=
*பறை+ழையா*

= *பழையாறை*

******************


கல்கியால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலில் *பழையாறையின்* சிறப்புக்கள் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ராஜராஜனின் தமக்கை குந்தவை
வசித்த இடமாக *பழையாறை* குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ராஜராஜனின் முதல் மனைவியான வானதியும் பழையாறை நகரத்தில் தான் வசித்து வந்தார்.  
ராஜராஜனின் தமக்கை குந்தவை பிராட்டியார் பழையாறை நகரத்தில் வசித்து வந்ததால் அரசு விஷயங்கள் பலவும் அங்கே முடிவெடுக்கப்பட்டன.
இதனை சோழ அரசின் முக்கிய பல முடிவுகள் அனைத்தும் பழையாறையில் எடுக்கப்படுவதாக அவரது கதாபாத்திரங்கள் பல முறை கூறுகின்றன.
💐🙏🏼💐
***************
Vanchinathan said…
இன்று விடையளித்தவர்கள்:
1 ) 6:06:50 எஸ்.பார்த்தசாரதி
2 ) 6:07:07 முத்துசுப்ரமண்யம்
3 ) 6:07:28 லட்சுமி சங்கர்
4 ) 6:08:10 வானதி
5 ) 6:08:45 இரா.செகு
6 ) 6:08:57 பானுமதி
7 ) 6:10:19 கேசவன்
8 ) 6:13:12 மீ கண்ணன்
9 ) 6:14:34 நங்கநல்லூர் சித்தானந்தம்
10 ) 6:15:36 லதா
11 ) 6:19:16 தி. பொ. இராமநாதன்
12 ) 6:20:39 ராஜி ஹரிஹரன்
13 ) 6:25:58 ஆர் .பத்மா
14 ) 6:31:53 உஷா
15 ) 6:35:57 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
16 ) 6:36:31 சுபா ஸ்ரீநிவாசன்
17 ) 6:40:49 ரவி சுந்தரம்
18 ) 6:43:15 K.R.Santhanam
19 ) 6:43:25 சங்கரசுப்பிரமணியன்
20 ) 6:43:31 பாலு மீ
21 ) 6:45:25 வி.ஜயா
22 ) 6:45:51 அம்பிகா
23 ) 6:51:12 மாலதி
24 ) 6:58:16 மைத்ரேயி
25 ) 7:01:46 ராமராவ்
26 ) 7:05:17 எஸ் பி சுரேஷ்
27 ) 7:06:21 மீனாக்ஷி
28 ) 7:06:44 ஸௌதாமினி
29 ) 7:13:14 Siddhan Subramanian
30 ) 7:13:50 கோவிந்தராஜன்
31 ) 7:15:31 பானுபாலு
32 ) 7:16:22 ரங்கராஜன் யமுனாச்சாரி
33 ) 7:26:34 திருக்குமரன் தங்கராஜ்
34 ) 7:29:48 மு.க.இராகவன்.
35 ) 7:34:43 மீனாக்ஷி கணபதி
36 ) 7:44:32 புவனா சிவராமன்
37 ) 7:47:23 KB
38 ) 7:52:01 வி ன் கிருஷ்ணன்
39 ) 7:55:21 சதீஷ்பாலமுருகன்
40 ) 7:55:23 ஶ்ரீதரன்
41 ) 8:04:44 பினாத்தல் சுரேஷ்
42 ) 8:09:28 கலாராணி
43 ) 8:13:43 மாதவ்
44 ) 8:39:45 ஏ.டி.வேதாந்தம்
45 ) 8:40:20 பத்மாசனி
46 ) 8:41:47 அனுராதா ஜெயந்த்
47 ) 8:59:59 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
48 ) 9:10:40 மீ கண்ணன்
49 ) 9:12:21 ஆர்.நாராயணன்.
50 ) 9:35:38 மடிப்பாக்கம் தயானந்தன்
51 ) 9:55:50 பிரசாத் வேணுகோபால்
52 ) 10:29:28 கு. கனகசபாபதி, மும்பை
53 ) 10:34:00 ராஜா ரங்கராஜன்
54 ) 11:03:35 லதா
55 ) 11:37:47 சாந்தி நாராயணன்
56 ) 13:17:11 மு க பாரதி
57 ) 15:59:07 ரமணி பாலகிருஷ்ணன்
58 ) 19:53:50 சுந்தர் வேதாந்தம்
59 ) 20:29:10 பாலா
Chittanandam said…
பொனௌனியின் செல்வன் புதினத்தைப் பல முறை படித்திருக்கின்றேன். வந்தியத்தேவன்-குந்தவை ஜோடியின் ரசிகன் நான். ஆகவே புதிரைப் படித்தவுடனேயே தெரிந்துவிட்டது விடை. பின்னர்தான் வழிமுறையைக் ககண்டுபிடித்து உறுதிப்படுத்திக்கொண்டேன். நன்றி.
Chittanandam said…
பொன்னியின்
Muthu said…
ஒடுக்கப்பட்டோர் இசைக்கருவி (2) + மழையால் நடுவில் (2) {ஒதுங்கிய} = குந்தவை இருந்த இடம் (4) ஒடுக்கப்பட்டோர் இசைக்கருவி (2) = பறை; ம*ழையா*ல் நடுவில் (2) = ழையா; ஒதுங்கிய: ப-ழையா-றை (4) = குந்தவை இருந்த இடம் (4)
பழையாறை இன்று பட்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறதா?

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்