Skip to main content

விடை 3500



இன்று காலை வெளியான வெடி:
திரும்பப் பெற்றது மேல் நாட்டம் நடுவில் குறைந்து கொள்ளும் (4)
இதற்கான விடை:  மீட்டது 

விடைக்கான விளக்கத்தை ஆர்வமுள்ளவர்கள்  கருத்துரையாக இடலாம்.

தமிழில் "ள்" என்ற எழுத்தில் முடியும் வினைச் சொற்கள் எளிதில் புலப்படாதவிதமாய் மாற்றமடைகின்றன.  நீள், வறள், புறள் என்பவை நீண்டு, வறண்டு, புரண்டு என்று என்றும், பெயர்ச்சொல்லாகும்போது  நீட்சி, வறட்சி, புரட்சி என்றும்  உருமாறுகின்றன.  ஏற்கனெவே தோசையைப்  புரட்சியால் (புரளவைத்து) விளைந்த தின்பண்டம் என்று புதிரமைத்திருக்கிறேன்.

இன்றைய வெடிக்கு வேரான வினைச்சொல் "மீள்". அது மீண்டு, மீட்டு (தன்வினை, பிறவினை)  என்று  இறந்தகால எச்சமாக வரும். மீட்சி என்ற சொல்லை பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் அழகாகக் கையாண்டுள்ளார்கள். ("மீட்பர் ஏசு").

  மீட்டு என்பது வினையாக வீணையின் கம்பிகளில் விரலால்  அதிரவைப்பதைக் குறிக்கும். என்றாவது அதை வைத்தும் உங்களை  மீளாத் தொல்லையில் ஆழ்த்தும்படி ஒரு புதிர் செய்துவிட வேண்டும். 


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (35):

1) 6:07:37 முத்துசுப்ரமண்யம்
2) 6:08:45 அம்பிகா
3) 6:10:28 கேசவன்
4) 6:16:30 K.R.Santhanam
5) 6:17:15 எஸ்.பார்த்தசாரதி
6) 6:21:46 லட்சுமி சங்கர்
7) 6:37:02 உஷா
8) 6:42:12 மடிப்பாக்கம் தயானந்தன்
9) 7:01:42 பிரசாத் வேணுகோபால்
10) 7:12:49 சுபா ஸ்ரீநிவாசன்
11) 7:14:52 ரவி சுப்ரமணியன்
12) 7:19:25 ராதா தேசிகன்
13) 7:24:28 ஆர்.நாராயணன்.
14) 7:50:36 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 7:51:09 Siddhan Subramanian
16) 8:02:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 8:12:04 மீ கண்ணன்
18) 8:23:26 சங்கரசுப்பிரமணியன்
19) 8:53:45 தி. பொ. இராமநாதன்.
20) 8:57:08 KB
21) 9:39:24 மீனாக்ஷி
22) 10:45:38 இரா.செகு
23) 10:58:09 கோவிந்தராஜன்
24) 11:17:24 ஆர்.பத்மா
25) 11:52:44 மாலதி
26) 12:16:05 மு க பாரதி
27) 13:29:22 மு.க.இராகவன்.
28) 15:00:49 ராஜி ஹரிஹரன்
29) 15:49:13 ரமணி பாலகிருஷ்ணன்
30) 17:40:21 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
31) 19:55:07 கேசவன்
32) 20:22:28 ரவி சுந்தரம்
33) 20:33:23 சுந்தர் வேதாந்தம்
34) 20:43:29 ஏ.டி.வேதாந்தம்
35) 20:43:52 பத்மாசனி
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
_பாரதியார் பக்தி பாடல் பராசக்தி_

_ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்-_
_அதை அன்னை எனப்பணிதல் ஆக்கம்;_
_சூதில்லை காணுமிந்த நாட்டீர்!மற்றத்_ _தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்._
_மூலப் பழம்பொருளின் *நாட்டம்* -_
_இந்த மூன்று_ _புவியுமதன் ஆட்டம்;_ _காலப் பெருங்கள்ததின் மீதே எங்கள் காளி_ _நடமுலகக் கூட்டம்_

💐💐💐💐💐💐💐💐
_திரும்பப் பெற்றது மேல் நாட்டம் நடுவில் குறைந்து கொள்ளும் (4)_

_மேல்_ = *மீது*

_நாட்டம் நடுவில் குறைந்து_

=[நா] *ட்ட* [ம்] = *ட்ட*

_கொள்ளும்_
= *மீது <--- ட்ட*
= *மீட்டது*

= _திரும்பப் பெற்றது_
************************
" _அன்பே_ 
_நம் வீட்டு மூலையிலே_ 
_அமைதியான இரவின்_
_இன்ப நினைவுகளைப்​ போலும்_ 
_அழிக்க முடியாத அமைதியின்_ 
_ஆழமானதோர் புத்தொளிபோலும்_ 
_வந்தமர்திருக்கும்_ 
_அந்தப்​ பேர்யாழை உன்_ _மடியெடுத்து_ *_மீட்டு_* 
_உலகில் மறைந்து_ _கிடக்கும் பேரிசையை_ 
_அது *மீட்கட்டும்* ... "_ 

_(தேவதேவன்)_
********************
வர வர எதிலுமே ஆசை குறைகிறது
வயதானதாலா? அனுபவத்தாலா?

நாடியது நல்காமல் நசுங்கியே வாழ்ந்தால்
நாட்டம் குறைந்து தான் விடுமோ?🤔🤔🤔
************************
Muthu said…
நன்றி!
மார்வாடியிடம் நகை அடகு வைத்த ஏழைகள் வட்டி முதல் கட்டி மூழ்காமல் மூட்டது என்பார்கள்!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.