Skip to main content

விடை 3501

இன்று காலை வெளியான வெடி
கண்ணைத் திறந்து இரண்டாம் நாழிகை வெளியே சென்ற தாவரத்தின் கரு (4)

இதற்கான விடை: விழித்து  = ழி இருக்க, வெளியே சென்றது வித்து.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (64):

1) 6:01:15 ராதா தேசிகன்
2) 6:01:30 ரவி சுப்ரமணியன்
3) 6:02:06 முத்துசுப்ரமண்யம்
4) 6:02:17 உஷா
5) 6:02:22 அம்பிகா
6) 6:02:48 இரா.செகு
7) 6:03:39 K.R.Santhanam
8) 6:03:50 வி ன் கிருஷ்ணன்
9) 6:04:43 ரமணி பாலகிருஷ்ணன்
10) 6:04:48 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:05:27 லட்சுமி சங்கர்
12) 6:05:58 ரவி சுந்தரம்
13) 6:06:20 சாந்திநாராயணன்
14) 6:07:03 ஶ்ரீவிநா
15) 6:07:08 ஆர்.நாராயணன்.
16) 6:08:08 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
17) 6:10:35 வானதி
18) 6:10:58 ராஜா ரங்கராஜன்
19) 6:11:54 Sandhya
20) 6:13:06 சுந்தர் வேதாந்தம்
21) 6:15:10 லதா
22) 6:15:51 Siddhan Subramanian
23) 6:16:09 KB
24) 6:18:11 மு.க.இராகவன்.
25) 6:21:19 கேசவன்
26) 6:21:22 மடிப்பாக்கம் தயானந்தன்
27) 6:28:44 சதீஷ்பாலமுருகன்
28) 6:31:22 பாலு மீ
29) 6:36:12 ராஜி ஹரிஹரன்
30) 6:37:06 நாதன் நா தோ
31) 6:40:22 ராமராவ்
32) 6:54:00 ஸௌதாமினி
33) 6:57:29 பா நடராஜன்
34) 6:59:28 எஸ் பி சுரேஷ்
35) 7:04:50 பிரசாத் வேணுகோபால்
36) 7:08:57 மு க பாரதி
37) 7:09:57 மீ கண்ணன்
38) 7:14:10 வி.ஜயா
39) 7:16:22 மாதவ்
40) 7:18:04 மும்பை ஹரிஹரன்
41) 7:25:30 ரங்கராஜன் யமுனாச்சாரி
42) 7:28:12 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
43) 7:43:41 கி மூ சுரேஷ்
44) 7:51:37 மாலதி
45) 8:09:02 பினாத்தல் சுரேஷ்
46) 8:19:11 திருக்குமரன் தங்கராஜ்
47) 8:22:27 தி. பொ. இராமநாதன்
48) 8:34:30 பூமா பார்த்த சாரதி
49) 8:46:56 கு.கனகசபாபதி, மும்பை
50) 8:49:11 கலாராணி
51) 8:50:20 மீனாக்ஷி
52) 8:58:21 Suba Srinivasan
53) 9:02:40 செந்தில் சௌரிராஜன்
54) 9:16:43 மீனாக்ஷி கணபதி
55) 9:18:33 சங்கரசுப்பிரமணியன்
56) 10:11:53 கோவிந்தராஜன்
57) 11:05:54 தேன்மொழி
58) 11:29:53 ஆர். பத்மா
59) 12:31:02 ஏ.டி.வேதாந்தம்
60) 12:31:23 பத்மாசனி
61) 12:32:00 அனுராதா ஜெயந்த்
62) 16:33:10 புவனா சுவராமன்
63) 18:23:18 பாலா
64) 20:33:49 ஹரி பாலகிருஷ்ணன்
**********************
Ambika said…
Both tamil and english clue has seeds in it today ;)
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*வித்து* அல்லது விதை (Seed) என்பது சில தாவரங்கள் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்ள, தம்முள்ளே உருவாக்கும் ஓர் தாவர அங்கமாகும். இந்த வித்தானது விழுந்து அல்லது விதைக்கப்பட்டு முளைப்பதன் மூலம் அவ்வினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் உருவாகும்.
🌱🌱🌱🌱🌱🌱🌱
*_வித்து_*

முயற்சிகள் யாவும் வெற்றி தருவதில்லை ஆனால்
வெற்றியின் வித்து முயற்சியின்றி வேறில்லை

சொற்கள் யாவும் கவிதை ஆவதில்லை ஆனால்
கவிதையின் வித்து
சொற்களின்றி வேறில்லை

பார்வைகள் யாவும் காதல் கொள்வதில்லை ஆனால்
காதலின் வித்து பார்வையின்றி வேறில்லை

அணுக்கள் யாவும் கரு ஆவதில்லை ஆனால்
கருவின் வித்து அணுவின்றி வேறில்லை

பக்தி யாவும் முக்தி பெறுவதில்லை ஆனால்
முக்தியின் வித்து பக்தியின்றி வேறில்லை
(ச. சந்திரசேகரன்)
************************
_கண்ணைத் திறந்து இரண்டாம் நாழிகை வெளியே சென்ற தாவரத்தின் கரு (4)_

_இரண்டாம் நாழிகை_
= *ழி*

_தாவரத்தின் கரு_
= *வித்து*

_வெளியே சென்ற_
= *(நா)ழி(கை)--->ழி*

_கண்ணைத் திறந்து_
= *வித்து+ழி*
= *விழித்து*
************************
_நெடுஞ்சாலையில்_ 
_எம் கல்லூரி சோலை._

_சிட்டுக்கள் சிறகடிப்பதும்_ 
_மொட்டுக்கள் மலரதுடிப்பதும்_ 
_இங்கேதான்_

_*வித்துக்களே* வாருங்கள்_ 
_நல் விளைநிலம் இங்கே._ 

_நல் எண்ணம் விதைப்போம்,_ 
_பார் எங்கும் உயர்வோம்._ 
_நாளைய பாரதத்தின்_ 
_ஒலியாவோம்_ .

_வன் களை எடுப்போம்,_ 
_நல் கலையோடு_ 
_பல்கலை கற்போம்._ 

_வாருங்கள்_ 
_வழிகாட்டுகிறோம்._ 
_*விழித்து* எழுங்கள்_ 
_உயர்வை காட்டுகிறோம்._

( ரா .ஸ்ரீனிவாசன் )
********************
_' விழித்து எழு, வெளிச்சம் வரும்!_

_மனக்குப்பைகளை வெளியேற்று!_

_நிம்மதி உன்னில்.!_

(Shiva Lachiya)
💐🙏🏼💐
M k Bharathi said…
*விழித்து*எழும்போது
தழைத்து நிற்கும் புதிரில்
செழித்து நிற்கும் எம்தமிழ்
செந்தமிழில் செதுக்கும்
*புதிர் சிற்பியே* வாழி, வாழி!
Raghavan MK said…


TOP SEED PUZZLES!
Chittanandam said…
அது எப்படீங்க ஒரு நிமிடத்திற்குள் புதிரைக் கைப்பற்றி சரியான விடையையும் அளிக்கிறீர்கள்?

உங்கள் வெற்றியின் ரகசியம்தான் என்ன?

நங்கநல்லூர் சித்தானந்தம்
Raghavan MK said…


*விழித்துக் கொள்*


அழித்து வாழ நினைப்போர் பலர்
அவனியில் நிறைந்தார் இன்று

பேராசைக்கொண்டு பிழைப்பதற்கே
ஆளாய்ப் பறக்கிறார் அசுரா் பலர்

மண் அழித்து, நீர் அழித்து,
வனம் அழித்து, வளி அழித்து

வாழும் உயிர்க்கு வரமாய் வாழும்
வளம் அழிக்கும் வன்மம் கண்டு

எது நிகழ்ந்தால் எனக்கென்ன
எனும் போக்கை புறம் தள்ளி

*விழித்து* க்கொள்ளுங்கள் மாந்தரே
வீணர்களை வதைத்து வீசுங்கள்

மறுத்தால் பழித்துவிடும் நம் பண்பை
அடுத்து வரும் அரும்புத் தலைமுறை!
Raghavan MK said…



[11/24, 21:44] ‪+91 97394 87774‬: இரண்டாம் நாழிகை - ழி

தாவரத்தின் கரு - வித்து

வெளியே சென்ற - வித்து இரு புறமாக வெளியே சென்றது - வி - ழி - த்து

கண்ணைத் திறந்து - விழித்து

இவ்வாறு தான் நான் விளங்கிக் கொண்டேன் ஐயா
[11/24, 22:24] Ravi Sundaram: கண்ணைத் திறந்து = விழித்து. இரண்டாம் நாழிகை = ழி. விழித்து, அதிலிருந்து ழி வெளியே செல்ல வித்து = தாவரத்தின் கரு. எனவே மூன்று எழித்து விடையோ என்ற ஐயம் நேற்று சிலருக்கு தோன்றியது. விடை நான்கெழுத்து என்று சொல்லப்பட்டுள்ளதால் விழித்து என்ற விடை மட்டுமே சரி என்று சொல்லப்பட்டது. எனக்கு இந்த புதிருக்கு 4 எழுத்து விடை மட்டுமே சரி என்று தோன்றுகிறது. _கண்ணைத் திறந்து இரண்டாம் நாழிகை வெளியே *செல்ல* தாவரத்தின் கரு ​​​ _ என்று இருந்தால் வித்து விடை ஆகும் என நினைக்கிறேன்.
[11/24, 22:27] ‪+91 97394 87774‬: உண்மை ஐயா... முதலில் இவ்வாறு தான் குழம்பினேன்...

பிறகு தான் வெளியே சென்றவுக்கும், வெளியே செல்லவுக்குமான வித்தியாசம் விளங்க நான்கெழுத்து மட்டுமே சரி என ஊர்ஜிதம் செய்து கொண்டேன்
[11/24, 22:34] chithanandam: Mr.Ravi Sundaram,

தாவரத்தின் கரு = வித்து

இரண்டாம் நாழிகை = ழி

That's all. It's as simple as that.
[11/24, 22:38] ‪+91 97394 87774‬: கண்டுபிடிக்க வேண்டியது வாக்கியத்தின் முதல் என முடிவெடுத்திருந்தால் இவ்வாறு எளிமையாக எடுத்திருக்கலாம் ஐயா...

கண்டுபிடிக்க வேண்டியது, வாக்கியத்தின் கடைசியாகவும் இருக்கலாம் என்னும் போது, பிற வார்த்தைகள் வெளியே சென்ற அல்லது வெளியே செல்ல முக்கியத்துவம் பெறுகிறது என்பது எனது எண்ணம் ஐயா
[11/24, 22:38] Ravi Sundaram: வித்து + ழி = விழித்து (4). விழித்து - ழி = வித்து (3). இந்த வெடிக்கு எது மிகவும் சரியான விடை? இந்த ஐயம் நெற்று சிலருக்கு வந்தது.
[11/24, 22:55] M K Raghavan: இரண்டாம் நாழிகையில் (ழி) வெளியே சென்றது என்று நான் புரிந்துகொண்ட விதம்!
[11/24, 22:59] M K Raghavan: இரண்டாம் நாழிகையில் (ழி) விழித்திலிருந்து வெளியே சென்றது என்றால் வித்து விடையாக வரும்!
வித்தா, விழித்தா என தீர்மானித்தது 4 என்ற எண்ணிக்கையே!
Raghavan MK said…


👆by Bharathy M.K

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.