Skip to main content

விடை 3484

இன்று காலை வெளியான வெடி:
விலங்குக்கு முன்னே ஒரு விலங்கு பின்னே   தலையில்லாப் பிணம் ஒரு கோணம் (5)
இதற்கான விடை:
பரிமாணம் = பரி + மா +  (பி) ணம்
 பரிமாணம், கோணம் என்ற இரு சொற்களிம் கணிதத்தில் இரு மிகவும் வேறுபட்ட பொருளைத் தருகின்றன (dimension and angle). அப்படியிருக்கையில் எப்படி ஒன்றுக்கு மற்றது பொருளாகும்?
கணிதத்தை விட்டு வெளியே வந்தால் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டும் ஒரே பொருளைத் தருகின்றன. ஆங்கிலத்தில் aspect என்ற சொல்.
உதாரணம்: இந்த விஷயத்திற்கு வேறு பரிமாணங்கள் உள்ளன.

இன்று ஏழெட்டு பேர் விரிகோணம் என்ற விடையை அளித்திருந்தார்கள்.

(தீபாவளிக்கான விசேஷப்புதிர் விடை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும்).

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (23):

1) 6:05:36 லதா
2) 6:10:25 முத்துசுப்ரமண்யம்
3) 6:22:34 எஸ்.பார்த்தசாரதி
4) 6:28:17 கு. கனகசபாபதி, மும்பை
5) 6:30:42 லட்சுமி சங்கர்
6) 6:47:23 Siddhan Subramanian
7) 6:52:08 மீ கண்ணன்
8) 7:10:31 உஷா
9) 7:37:23 நாதன் நா தோ
10) 7:40:03 தி. பொ. இராமநாதன்
11) 7:57:04 கேசவன்
12) 8:03:22 ஆர்.நாராயணன்
13) 8:17:48 மாலதி
14) 8:59:40 KB
15) 9:30:01 மீனாக்ஷி கணபதி
16) 9:53:39 மீனாக்ஷி
17) 9:55:26 ரவி சுப்ரமணியன்
18) 10:43:32 வி ஜயா
19) 12:28:27 அம்பிகா
20) 13:47:26 பாலு மீ
21) 17:12:26 ஆர். பத்மா
22) 18:13:27 வானதி
23) 19:42:22 பாலா
**********************
Muthu said…
விலங்கு (2) {க்கு முன்னே ஒரு} + விலங்கு (1) {பின்னே } + தலையில்லாப் பிணம்(2) = ஒரு கோணம் (5)
http://crea.in/search.php?startwort=பரிமாணம்
பெயர்ச்சொல்

1. நீளம், அகலம், உயரம் அல்லது காலம் ஆகிய அளவுகளுள் ஒன்று; dimension. கோட்டிற்கு ஒரு பரிமாணம் மட்டுமே உண்டு./ செவ்வகத்துக்கு இரண்டு பரிமாணம்/ சிறையில் இருந்தவனுக்குக் காலப் பரிமாணத்தைப்பற்றிய அக்கறையே இல்லாமல்போனது.
2. ஒன்று இயங்கும் பரப்பின் விரிவு; மொத்த அல்லது முழு அம்சங்கள்; dimensions. அவர்கள் பிரச்சினையின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை./ வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தை அறிவதற்குப் பல காலம் ஆகும்.
3. (குறிப்பிட்ட) *கோணம்*; aspect; angle; perspective. இந்த ஓவியங்களை நீங்கள் புதிய *பரிமாண*த்தில் பார்க்க முயல வேண்டும்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதா ராராயாதா காயாகாழீ யாகாயா
Vanchinathan said…
திருஞானசம்பந்தரின் மாலைமாற்றுப்பதிகம் palindromic verse என்று இதைப் படித்திருக்கிறேன். ஆனால் பொருள் புரிந்துகொள்ள திண்டாட வேண்டியிருக்கிறது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...