Skip to main content

விடை 3484

இன்று காலை வெளியான வெடி:
விலங்குக்கு முன்னே ஒரு விலங்கு பின்னே   தலையில்லாப் பிணம் ஒரு கோணம் (5)
இதற்கான விடை:
பரிமாணம் = பரி + மா +  (பி) ணம்
 பரிமாணம், கோணம் என்ற இரு சொற்களிம் கணிதத்தில் இரு மிகவும் வேறுபட்ட பொருளைத் தருகின்றன (dimension and angle). அப்படியிருக்கையில் எப்படி ஒன்றுக்கு மற்றது பொருளாகும்?
கணிதத்தை விட்டு வெளியே வந்தால் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டும் ஒரே பொருளைத் தருகின்றன. ஆங்கிலத்தில் aspect என்ற சொல்.
உதாரணம்: இந்த விஷயத்திற்கு வேறு பரிமாணங்கள் உள்ளன.

இன்று ஏழெட்டு பேர் விரிகோணம் என்ற விடையை அளித்திருந்தார்கள்.

(தீபாவளிக்கான விசேஷப்புதிர் விடை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும்).

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (23):

1) 6:05:36 லதா
2) 6:10:25 முத்துசுப்ரமண்யம்
3) 6:22:34 எஸ்.பார்த்தசாரதி
4) 6:28:17 கு. கனகசபாபதி, மும்பை
5) 6:30:42 லட்சுமி சங்கர்
6) 6:47:23 Siddhan Subramanian
7) 6:52:08 மீ கண்ணன்
8) 7:10:31 உஷா
9) 7:37:23 நாதன் நா தோ
10) 7:40:03 தி. பொ. இராமநாதன்
11) 7:57:04 கேசவன்
12) 8:03:22 ஆர்.நாராயணன்
13) 8:17:48 மாலதி
14) 8:59:40 KB
15) 9:30:01 மீனாக்ஷி கணபதி
16) 9:53:39 மீனாக்ஷி
17) 9:55:26 ரவி சுப்ரமணியன்
18) 10:43:32 வி ஜயா
19) 12:28:27 அம்பிகா
20) 13:47:26 பாலு மீ
21) 17:12:26 ஆர். பத்மா
22) 18:13:27 வானதி
23) 19:42:22 பாலா
**********************
Muthu said…
விலங்கு (2) {க்கு முன்னே ஒரு} + விலங்கு (1) {பின்னே } + தலையில்லாப் பிணம்(2) = ஒரு கோணம் (5)
http://crea.in/search.php?startwort=பரிமாணம்
பெயர்ச்சொல்

1. நீளம், அகலம், உயரம் அல்லது காலம் ஆகிய அளவுகளுள் ஒன்று; dimension. கோட்டிற்கு ஒரு பரிமாணம் மட்டுமே உண்டு./ செவ்வகத்துக்கு இரண்டு பரிமாணம்/ சிறையில் இருந்தவனுக்குக் காலப் பரிமாணத்தைப்பற்றிய அக்கறையே இல்லாமல்போனது.
2. ஒன்று இயங்கும் பரப்பின் விரிவு; மொத்த அல்லது முழு அம்சங்கள்; dimensions. அவர்கள் பிரச்சினையின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை./ வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தை அறிவதற்குப் பல காலம் ஆகும்.
3. (குறிப்பிட்ட) *கோணம்*; aspect; angle; perspective. இந்த ஓவியங்களை நீங்கள் புதிய *பரிமாண*த்தில் பார்க்க முயல வேண்டும்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதா ராராயாதா காயாகாழீ யாகாயா
Vanchinathan said…
திருஞானசம்பந்தரின் மாலைமாற்றுப்பதிகம் palindromic verse என்று இதைப் படித்திருக்கிறேன். ஆனால் பொருள் புரிந்துகொள்ள திண்டாட வேண்டியிருக்கிறது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.