Skip to main content

விடை 3484

இன்று காலை வெளியான வெடி:
விலங்குக்கு முன்னே ஒரு விலங்கு பின்னே   தலையில்லாப் பிணம் ஒரு கோணம் (5)
இதற்கான விடை:
பரிமாணம் = பரி + மா +  (பி) ணம்
 பரிமாணம், கோணம் என்ற இரு சொற்களிம் கணிதத்தில் இரு மிகவும் வேறுபட்ட பொருளைத் தருகின்றன (dimension and angle). அப்படியிருக்கையில் எப்படி ஒன்றுக்கு மற்றது பொருளாகும்?
கணிதத்தை விட்டு வெளியே வந்தால் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டும் ஒரே பொருளைத் தருகின்றன. ஆங்கிலத்தில் aspect என்ற சொல்.
உதாரணம்: இந்த விஷயத்திற்கு வேறு பரிமாணங்கள் உள்ளன.

இன்று ஏழெட்டு பேர் விரிகோணம் என்ற விடையை அளித்திருந்தார்கள்.

(தீபாவளிக்கான விசேஷப்புதிர் விடை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும்).

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (23):

1) 6:05:36 லதா
2) 6:10:25 முத்துசுப்ரமண்யம்
3) 6:22:34 எஸ்.பார்த்தசாரதி
4) 6:28:17 கு. கனகசபாபதி, மும்பை
5) 6:30:42 லட்சுமி சங்கர்
6) 6:47:23 Siddhan Subramanian
7) 6:52:08 மீ கண்ணன்
8) 7:10:31 உஷா
9) 7:37:23 நாதன் நா தோ
10) 7:40:03 தி. பொ. இராமநாதன்
11) 7:57:04 கேசவன்
12) 8:03:22 ஆர்.நாராயணன்
13) 8:17:48 மாலதி
14) 8:59:40 KB
15) 9:30:01 மீனாக்ஷி கணபதி
16) 9:53:39 மீனாக்ஷி
17) 9:55:26 ரவி சுப்ரமணியன்
18) 10:43:32 வி ஜயா
19) 12:28:27 அம்பிகா
20) 13:47:26 பாலு மீ
21) 17:12:26 ஆர். பத்மா
22) 18:13:27 வானதி
23) 19:42:22 பாலா
**********************
Muthu said…
விலங்கு (2) {க்கு முன்னே ஒரு} + விலங்கு (1) {பின்னே } + தலையில்லாப் பிணம்(2) = ஒரு கோணம் (5)
http://crea.in/search.php?startwort=பரிமாணம்
பெயர்ச்சொல்

1. நீளம், அகலம், உயரம் அல்லது காலம் ஆகிய அளவுகளுள் ஒன்று; dimension. கோட்டிற்கு ஒரு பரிமாணம் மட்டுமே உண்டு./ செவ்வகத்துக்கு இரண்டு பரிமாணம்/ சிறையில் இருந்தவனுக்குக் காலப் பரிமாணத்தைப்பற்றிய அக்கறையே இல்லாமல்போனது.
2. ஒன்று இயங்கும் பரப்பின் விரிவு; மொத்த அல்லது முழு அம்சங்கள்; dimensions. அவர்கள் பிரச்சினையின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை./ வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தை அறிவதற்குப் பல காலம் ஆகும்.
3. (குறிப்பிட்ட) *கோணம்*; aspect; angle; perspective. இந்த ஓவியங்களை நீங்கள் புதிய *பரிமாண*த்தில் பார்க்க முயல வேண்டும்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதா ராராயாதா காயாகாழீ யாகாயா
Vanchinathan said…
திருஞானசம்பந்தரின் மாலைமாற்றுப்பதிகம் palindromic verse என்று இதைப் படித்திருக்கிறேன். ஆனால் பொருள் புரிந்துகொள்ள திண்டாட வேண்டியிருக்கிறது.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்