Skip to main content

Posts

Showing posts with the label வெண்பா

விடை 4082

இன்று காலை வெளியான வெடி: ஏகப்பட்ட அறிவுடன் பெறும் பரிசு (4) அதற்கான விடை: வெகுமதி  = வெகு+ மதி  மீண்டும் விடை கண்டவர்கள் எண்ணிக்கை அறுபதைத் தாண்டியுள்ளது. இதோ வெகுமதி: அறிவுடை மாந்தர் புதிரினில்  ஆழ்ந்து செறிவுற்ற சிந்தனையால் கண்ட விடைகள் குறிதவறா வில்லாளன் கூர்கணையாய்ச் சாய்த்து த்     தெறித்திட வைத்திடும்  தேர்ந்து. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

மார்ச் 2020 சரவெடிக்கான விடைகள்

பொங்கலுக்குப் பிறகு தமிழ் வருஷப் பிறப்புக்கு ஒரு சரவெடி என்று திட்டமிட்டிருந்தேன். ஊரடங்கு உத்தரவால்  நேரம்  கிடைத்து  திடீரென இது சாத்தியமானது. ஆனால் இந்த வைரசால் நேரம் கிடைக்காமற் போனவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு மேலே தொடர்கிறேன்: நள்ளிர வென்றாலும் நாட்டிற் குழைத்திடுவார் தள்ளி விலகாத தன்னார்வத் தொண்டர்கள் அஞ்சிநாம் வீட்டில் அடங்கி இருக்கையில் நெஞ்சில் நினைத்திடு நீ. (இது கவிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் உந்துதலால் எழுதப்பட்டது). இப்போது விடைகளுக்கு வருவோம். குறுக்காக  5. வாலில்லாக் காளை  சாணி? (2)  எரு [ எருது-து]  6. கூராக்கி தலை சீவி உலகத்தில் நுழையும் மன உறுதி (6)   வைராக்கியம் =  (கூ) ராக்கி + வையம்  7. அழகான  காட்டுப்புற மார்வாடி  பாதியாய் எதிர்த்துப் புகுந்தான் (4)   வடிவான = வன (காட்டுப்புற) + டிவா (மார்வாடி - மார்)  8.  ஒரு நாய் விளையாட்டில் வெல்வது  சிம்ம  இடை பரிமாற்றம் (3) கோம்பை = கோப்பை - ப் + ம்  (கோம்பை, ஒரு நாய் இனம்).  9....

விடை 4010

இன்று காலை வெளியான வெடி: காலில்லாக் கோழி வளர்க்குமிடம் தடி சுழற்றிய  சண்டியர் கடைசியாகப் படித்தவர் (5) அதற்கான விடை: பண்டிதர் = பண் + டித + ர் பண் = பண்ணை - ணை (பண்ணை = கோழி வளர்க்குமிடம்) டித = சுழற்றிய தடி ர் = கடைசியாக, சண்டியர் தடி சுழற்றிய  சண்டியரைக் கண்டு பயப்படாமல்  புதிரில் இறங்கி 50க்கும் மேற்பட்டவர்கள் விடைகளைக் கண்டு பிடித்து விட்டீர்கள். பாராட்டுகள். யாரந்த 50 பேர்? இங்கே சென்று பார்க்கவும். சண்டியர் கையில் தடியெடுத்து வந்தாலும்   உண்டில்லை யென்றிவ் வுதிரி வெடியதில்  அஞ்சாது நாள்தோறும் பங்கேற்போர் ஆர்வம் பஞ்சிலே  பற்றிய தீ.

விடை 3981

விடை 3952 இன்று காலை வெளியான வெடி: மற்றவர்களைவிடப்  பணக்காரர்களுக்கு செல்வமளிக்கும் பல்லில் புரண்ட குறை (4) அதற்கான விடை: பணிதல் = பல் + ணித; ணித  = புரண்ட "தணி";  தணிவது என்றால் குறைவது: (காய்ச்சல் தணிந்த பின்னர் பள்ளிக்குச் செல்லலாம்.)   எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து  என்ற குறளில் பணிவான குணம் எல்லாருக்கும் நல்லதுதான் என்றாலும் செல்வந்தர்களுக்கு அதுவும் ஒரு செல்வமாகும் என்கிறார் வள்ளுவர். தணி = குறை என்பதுடன், இக்குறளைச் சுட்டிக் காட்டி விளக்கமளித்தவர்கள்தான்  இந்தவெடியை முழுதும் உணர்ந்தவர் எனலாம்.  முத்துசுப்ரமணியம்  திருக்குறளைக் குற்ப்பிடாமல் ஒரு குறளுண்டு என்ற சொன்னதற்கு 90 மதிப்பெண். அதன் படி 7.22க்கு உஷா அவர்கள் மட்டும்தான் முழுவிடையுணர்ந்தவராகத் தகுதி பெறுகிறார், 100/100. அவருக்குப் பாராட்டுகள். அதற்கு முன்பு பதிலளித்த கு. கனகசபாபதி, லட்சுமி மீனாட்சி இருவரும் இக் குறளைப் பிடித்துவிட்டாலும் "தணியை"ப் பிடித்ததாக விளக்கத்தில் காட்டவில்லை. அவர்களுக்கு 80 மதிப்பெண்கள்.   "பணிதல் ...

விடை 3978

இன்று காலை வெளியான வெடி: இவருக்கு முன் கால் போன திசை சண்டித்தனம் (4) அதற்கான விடை:   இடக்கு (சண்டித்தனம்) = இ + டக்கு இ = இவருக்கு முன் (எழுத்து) டக்கு  = வடக்கு (திசை) என்பதில்   வ (1/4)   போய்விட்டது இடக்கு செய்யும் காளை மாட்டை வாங்கி அல்லலுற்ற ஒருவரின் சோகக்கதை: வண்டியில்  பூட்டினால்  வாலை மறைத்துபின் நொண்டிபோல்  செல்லும் நுகத்தடியில்   முண்டிடும் சண்டித் தனத்தால்    சறுக்கிடும் முன்காலை கண்டதுண்டோ  இப்படியோர் காளை இன்றைய வெடிக்கு விளக்கங்களுடன் அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

விடை 3962

இன்று காலை வெளியான வெடி: சுவர் மறைக்கா வீட்டின் பகுதி உயரம் குறைவா? பாரம் குறைவு (5) அதற்கான விடை:  தாழ்வாரம் = தாழ்வா + ரம் தாழ்வா = உய்ரம குறைவா? ரம் = (பா) ரம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். தாழ்வார மெங்கிலும்  தங்கம் மினுமினுக்கும் கீழ்வான் கதிரொளியின் கீற்று.

விடை 3960

இன்று காலை வெளியான வெடி: ஒப்பற்ற மதியால் யானையை அடக்கலாம் (4)  அதற்கான விடை:   நிகரிலா = நிலா + கரி மதி = நிலா யானை =  கரி ஒப்பற்ற = நிகரிலா இன்றைய வெடிக்கு வழக்கத்திற்கு அதிகமாக கருத்துரைகள் காலையிலே வந்திருப்பதைப் பார்த்தேன். இது விசேஷமான சிக்கல்களேதும் இல்லாமல் அமைக்கப்பட்டதுதான்.  வழக்கமான வழிமுறைகள் கொண்டுதான் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மேலெழுந்தவாரியாகப் படிக்கையில் தோன்றும் பொருளால் இதற்கு அதிக வரவேற்பு. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய பின்னர் சிலர் இன்றைய புதிரைப் படித்து யானையை அடக்க நினைத்தால் விபரீதம் நிகழலாம்.  அதற்கு நான் பொறுப்பல்ல. மதியால் அடங்கும் மதயானை என்று புதிரின் பொருளை மனதில் பதிந்தோர் அதிராது அமர்ந்தனர் தோற்றபின் சொல்வர் விதியால் நிகழ்ந்த வினை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

விடை 3956

இன்று காலை வெளியான வெடி: பயந்தவனுக்கு முன் பாதி பாதுகாப்பு (3) அதற்கான விடை:   அரண் = அரண்(டவன்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம் நேற்று இலுப்பைப் பூவின் இனிப்போடு புளிப்பும் சுவை என்று சொல்லியிருந்தேன். அதானல் புளிப்பான ரசத்தின் பெருமையைக் கூற பெரும்பாலும்  (15இல் 12) "புளிமா"  சீர்களைக் கொண்டு சமைக்கப்பட்ட வெண்பா இதோ: அளிய வடித்த அமுதில்  ரசத்தைத் தெளியக் கலந்து புசித்தால் தெரியும் துளித்தேனில்   தோய்ந்த  பலாவும்  தொடாது புளியில் பொதிந்த சுவை

விடை 3955

இன்று காலை வெளியான வெடி: தீனி  போகுமிடம் இனிய பூமரத்தில் அலமேலுவும் துரையும் இறுதிப் பரிமாற்றம் (4) அதற்கான விடை: இரைப்பை = இலுப்பை -லு + ரை ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை என்பது ஒரு பழமொழி. இலுப்பையின் பூவில் கொஞ்சம் இனிப்பு இருப்பதால் இப்படிச் சொல்லப்படுகிறது.   இம்மரத்தைப் பற்றி அறியவும்  பூ, காய் இவற்றின் அழகான படங்களைப் பார்க்கவும் இவ்வலைப்பக்கத்திற்குச்  செல்லவும். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். அலுப்பின்றி இப்பக்கம் அன்றாடம் வந்தீர் இலுப்பம்பூச் சர்க்கரையை  இந்நாளில் கண்டீர் புளிப்போ டினிப்பும் புதிர்வெடியில் பாங்காய் அளிப்பேன் அறுசுவையு மிங்கு

விடை 3954

இன்று காலை வெளியான வெடி: மார் தட்டி வெளியே மாடு சாப்பிடுவது பற்றி முடிவு செய் (4) அதற்கான விடை:  தீர்மானி   = தீனி + ர்மா ர்மா = மார்  "தட்டி" தீனி = மாடு சாப்பிடுவது. தீவனம்தான் மாடு சாப்பிடும் உணவுக்குப் பொருத்தமான சொல், தீனி மனிதர்கள் சாப்பிடுவது என்று டாக்டர் ராமகிருஷ்ணா ஈஸ்வரன்  கேட்டுள்ளார். தீனி மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கூறப்படுவது. (மன்னரே நீங்கள் பாட்டுக்கு எனக்கு ஒரு யானையைப் பரிசாகக் கொடுத்து விட்டீர்கள்,  அதற்கு நான் எப்படித் தீனி வாங்கிப் போடுவேன்?) நான் மாடு சாப்பிடுவது என்று போட்டதற்கு வேறொரு  காரணமும் இருக்கிறது. "வெளியே மாடு சாப்பிடுவது பற்றி" என்பதை "ஓட்டலுக்குச் சென்று மாட்டுக் கறி சாப்பிடுவது" என்றும்  சிலரைத் தடுமாறி யோசிக்க வைக்கலாமே! இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். அது சரி இன்றைய புதிர்ச் சொற்களைக் கொண்டு ஒரு கற்பனை.  உடல் பருத்திடக் கூடாதென்று  கனியிருப்பத் தோல் கவர்ந்தாரைப் பற்றி ஒரு வெண்பா: மார்தட்டிச் சொல்வரோ மாடுபோல் தம்பசியென்(று) ஊர்வாய்ப் பழியஞ்சி உண்பார் ஒரேகவளம் ந...

விடை 3953

இன்று காலை வெளியான வெடி: ஒளியில்லாக் கோள வடிவம் உடை களைந்து நுழைந்த இடம் முழுதுமில்லை (4)  அதற்கான விடை:  இருண்ட =  ருண் + இட ருண் = உடை களைந்த  உருண்டை (கோள வடிவம்) இட = இடம் முழுதுமில்லை சும்மாவாது புதிரில் உள்ள சொற்களைக் கொத்து ஒரு வெட்டி வெண்பா: உருண்டையாய் வானில் உலவுகதிர்க்(கு) எட்டா இருண்ட  இடத்தில் ஒளித்தாலும்  நீவிர் திரண்டு  விடைகண்டு   தேர்ச்சி அடைந்தீர் புரண்டுநான் செய்த புதிர். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்  

விடை 3805

இன்று காலை வெளியான வெடி: இனிமை மது கொட்டி உள்ளே ஒழுக வெளியே தெரியாதது (5) இதன் விடை : ரகசியம் டாஸ்மாக் கடைக்குப் போய் சரக்கை  வாங்கி, பிளாஸ்டிக் பையில் எடுத்து வருவதுதான் சரியாக இருக்கும். கண்ணாடி பாட்டில், வழியில் எங்கேயாவது இடித்தாலும்  மது உள்ளே கொட்டி ஒழுகுவது, வெளியே தெரியாமல் இருக்கும். இப்படி வாழ்க்கைக்கு முக்கியமான தத்துவத்தை அடக்கிய இன்றைய வெடியை விளக்கி ஒரு மூன்றடி வெண்பா. ஒழுகாப்பை  உள்வைத்த  ஓர்சரக்கு காப்பாம் விழுந்தால் கசிந்து வெளிக்கொட்டும்  பையால் இழுக்குண்டு கெட்டார் குடி.   இந்த ஒப்பரிய தத்துவத்தைப் புரிந்து விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம் .

விடை 3776

இன்று காலை வெளியான வெடி: அதற்கான விடை:  கழிமுகம், ஆறு கடலில் சேருமிடம். இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம். வாட்டும் வறட்சியால் வற்றிய பொன்னியின்று மேட்டூர் நிரம்பிடவே மேல்வழிந்து பாய்ந்து சுழித்து நுரைபொங்க சோலைவழி சென்று கழிமுகம் சேர்ந்தது காண்.

விடை 3751

இன்று காலை வெளியான புதிர்: உள்ளுக்குள் சுவர் உள்ளுக்குள் சீனர் ஒழுங்கில்லை (4) அதற்கான விடை:   மனதில் ; சீர் = ஒழுங்கு; சுவர் = மதில்; சீரில்லாச் சீனர் மதில் உள்ளே  வர,  மனதில் (=உள்ளுக்குள்). இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம். சீரான ஆங்காங்கை சீனா அடக்கிடவே நேராகக் கைக்கொளுஞ் சட்டமாம் -- போராடி வீழ்ந்திடாமல் நாள்தோறும் வீறுகொண்ட மாந்தரவர்   சூழ்ந்ததால் சாயும் சுவர்.

விடை 3730

இன்று காலை வெளியான  வெடி: மரியாதையான போக்கு முதலில் இல்லாவிட்டாலும் இறுதியாக அன்பு அங்கே செய்த நல்ல காரியம் (5) இதற்கான விடை:  புண்ணியம் = கண்ணியம் - க + (அன்) பு இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம். புதிர்ப்பக்கத்தில் கருத்தளித்த ராமையா நாராயணனுக்கு: அன்பே சிவம் போன்ற தத்துவம் போதிப்பது எனது எண்ணமில்லை. வாஞ்சிநாதன்  என்று பெயர் வைத்ததற்கு, வார்த்தை வெடிகளையாவது வீச வேண்டுமென்பதுதான் திட்டம். மண்ணில் புதைந்து மறைந்து வெடித்திட்டு கண்ணிவெடி தாக்கிடும் கால்களை --  உண்மை உதிரிவெடி  என்றுமுமை உள்ளுக்குள் தாக்கி கதிகலங்க வைத்திடுங்  காண்

விடை 3711

இன்று காலை வெளியான  வெடி குளத்தில் இருக்கும் கடல் ஊடுருவிய பகுதியில்  அண்டா விளிம்பு உடைந்து சிதைந்தது  (3) இதற்கான விடை : குவளை (அல்லிப்பூ) =  வளைகுடா - டா (வளைகுடா = கடல் ஊடுருவிய பகுதி) இக்கோடையில் மே மாதம் முழுவதும் சென்னை வெயிலை அனுபவித்த பிறகு ஜூன் மாதம் பிறந்ததிலிருந்து  இது வரை ஜெர்மனி தேசத்தின் பெர்லின் நகரில் இருந்துவிட்டு  இன்று திரும்பி வந்தேன்.  இத்தனை நாட்கள் பெர்லினில் அண்டா அளவு தண்ணீரில்  குளித்துவிட்டு கடல் தாண்டி வளைகுடா நாடுகள் மேல் பறந்து  மீண்டும் சென்னைக்கு  வந்த பின் சிக்கனமாக ஒரு குவளை நீரில் குளித்து விட்டேன்! (இப்படம் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது) தண்டின்மேல் அல்லி குளம்விரிய  தான்சிரிக்கும் பெண்டிரின்  பிச்சிப்பூ கூந்தலில்  வண்டுறையும் கொண்டாடி என்வெண்பா  கொப்பளிக்க,  நீராட அண்டா அளவின்றேல் என்? (பிச்சிப்பூ = ஜாதி மல்லிகை) தமிழ்நாட்டுக்கு வந் தா ச்சு! வெண்பாவும் திரும்பி வந்திடுச்சு!! இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

விடை 3682

இன்று காலை வெளியான வெடி: இணையற்ற அமாவாசை வந்ததால் வெளிப்பட்ட ஒரு மிருகம் !  (2) இதற்கான விடை:  கரி (யானை) (இணையற்ற = ) நிகரிலா என்பதில் நிலா போய்விட்டால் அமாவாசைதானே! குகையிலே ஒளிந்து வாழ்ந்துகொண்டு  அமாவாசைக்கு மட்டும் வெளியே வரும் மிருகம் பற்றி புதிர் அமைக்க ஆசைதான், ஆனால்   நேஷனல் ஜியாக்ரபி தொலைக்காட்சியை நான் பார்ப்பதில்லையென்பதால், அது பற்றிய விஷய ஞானம் இல்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அமாவாசை இருட்டில்  அட்டைக் கரியாகத் தோன்றும் யானைதான். இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட  விடைகள் இங்கே. அமாவாசையில் ஆனை வரியோடு  காட்டில் வளையவரும்  வேங்கை அரிதாகத் தென்படுமாம் ஆங்கு    நரியும் திரிவதற்கு அஞ்சும்  திசையறியா நேரம் கரிவரும் கானகத்தில்  காண் இதற்கு அர்த்தமெல்லாம் கேட்கக் கூடாது. சும்மா பொழுது போக்குக்காக  கரி, நரி, வரி என்று எதுகையாக சொற்களை யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு நேரிசை வெண்பாவைக் கோத்துவிடலாம் என்று  தோன்றியது. அவ்வளவுதான்.

விடை 3670

இன்றைய வெடி: மாறா விரோதத்தையொழித்து  பண்டிகை  கொண்டாட பாயா? (4) இதற்கு விடையைப் பின்வரும் பாடலிலிருந்து தோண்டி எடுத்திடுவீர் தொட்டு  தாண்டிப் பலகாதம் தாவிடும் மூளைக்கு வேண்டும்  புதிரால் விருந்தென்றோர்க்(கு)  ஆண்டிரண்டாய் தூண்டிடும் சிந்தனை தூய  தமிழ்வெடி பாண்டியா  ஆராய்ந்து பார். ஏனிப்படி வெண்பா என்று கேட்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை.முன்பொருமுறை நான் சொல்லியிருந்த வெண்பா வாட்ஸ ப் குழுவில்  பலரும் பங்கேற்று இட்ட வெண்பாக்களில் அபுல் கலாம்  ஆசாத்  தன்னுடைய பாக்களைத் திரட்டி   மின்னூலாக அளித்துள்ளார்.  அதைக் கேள்விப்பட்ட விளைவுதான். இன்று  வளைகுடா நாட்டில் எப்போது பணி பறிபோய்விடுமோ என்ற  இக்கட்டான நிலையைச் சித்தரிக்க அவர் எழுதியது: ஓலை  வரவெண்ணி ஒவ்வொருநாள் காத்திருக்கும் வேலை நிலவரம் வீற்றிருக்கும் -- பாலையினில் புற்களும் பூதமெனப் புன்னகைப்ப தாய்த்தோன்றும் நிற்கத் துணிவிருந்தால் நில்.       - --  அபுல் கலாம் ஆசாத் ஈற்றடி என்றும் இனிப்பு என்ற அந்த  மின்னூல் kindle...

விடை 3653

இன்று காலை வெளியான வெடி: அழகை வெளியேற்றிய  ரகளை  வெளியே விட்டு வெளியேறச் செய் (4) வெடியிதற்கு  எச்சொல் விடையென்று கேட்போர் படித்திடுவீர்  வெண்பாவைப் பாங்காய் ‍‍-- ‍‍துடிப்பாய் விரட்டிப் பிடித்தோர்க்கு வெற்றியாம்  வீணாய்த் துரத்தியோர் வாய்ப்பிழந்தார் தோற்று.

விடை 3650

இன்று காலை வெளியான புதிர்: பொறுப்பின்றி வயலின் வாசித்தவன் அரை ஆடையுடன் குளிக்க வந்த இடம்? (3) இதற்கான விடை: நீரோடை;  ரோமாபுரியின் அரசன் நீரோ, ரோம் நாட்கணக்காக எரிந்து கொண்டிருந்த போது கவலைப்படாமல்  வயலின் வாசித்ததாகப் பரவலாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையாக இருக்க முடியாது என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். நீரோவின் காலத்தில் வயலின் (பிடில்) இல்லையென்பதை ஒரு காரணமாகக் கூறுகிறார்கள்.  ரோம் எரிந்தது ஏசு கிறிஸ்துவின் காலத்திற்குப் பின்னர் ஒரு நூற்றாண்டுக்குள் நடந்தது. நம்முடைய புதிரில் இன்று வந்திருக்கும் நீரோவை அப்படிப் பொறுப்பில்லாதவர் என்று கூற முடியாது.   ஏன்? பின்வரும் வெண்பாவில் தெரியும்:   ஊரெல்லாம் பற்றியெரிய ஓடைக்கு வந்தங்கு நீரெடுத்தான் நீரோ நெருப்பை அணைத்திடவே பாரெங்கும் ஏனோ பழி. இப்புதிருக்கு அனுப்பபட்ட விடைகளின் பட்டியல் இங்கே.