Skip to main content

விடை 3954


இன்று காலை வெளியான வெடி:

மார் தட்டி வெளியே மாடு சாப்பிடுவது பற்றி முடிவு செய் (4)

அதற்கான விடை:  தீர்மானி  = தீனி + ர்மா

ர்மா = மார்  "தட்டி"
தீனி = மாடு சாப்பிடுவது.

தீவனம்தான் மாடு சாப்பிடும் உணவுக்குப் பொருத்தமான சொல், தீனி மனிதர்கள் சாப்பிடுவது என்று டாக்டர் ராமகிருஷ்ணா ஈஸ்வரன்  கேட்டுள்ளார்.

தீனி மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கூறப்படுவது. (மன்னரே நீங்கள் பாட்டுக்கு எனக்கு ஒரு யானையைப் பரிசாகக் கொடுத்து விட்டீர்கள்,  அதற்கு நான் எப்படித் தீனி வாங்கிப் போடுவேன்?)

நான் மாடு சாப்பிடுவது என்று போட்டதற்கு வேறொரு  காரணமும் இருக்கிறது.
"வெளியே மாடு சாப்பிடுவது பற்றி" என்பதை "ஓட்டலுக்குச் சென்று மாட்டுக் கறி சாப்பிடுவது" என்றும்  சிலரைத் தடுமாறி யோசிக்க வைக்கலாமே!


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

அது சரி இன்றைய புதிர்ச் சொற்களைக் கொண்டு ஒரு கற்பனை.  உடல் பருத்திடக் கூடாதென்று  கனியிருப்பத் தோல் கவர்ந்தாரைப் பற்றி ஒரு வெண்பா:

மார்தட்டிச் சொல்வரோ மாடுபோல் தம்பசியென்(று)
ஊர்வாய்ப் பழியஞ்சி உண்பார் ஒரேகவளம்
நார்ச்சத்தே  நன்றாம்  கனியெறிந்து  தோலுண்ணத்
தீர்மானம்  செய்தார் தெரிந்து.

Comments

RKE said…
+1 வெண்பாவிற்கு.
தீவனம்= கால்நடைகள் உணவு என்று கழகத் தமிழ் அகராதி கூறுகிறது.
தீனி = உணவு according to the same source. So theevanam is cattle feed while all the rest are theeni, be it you, your pet elephant or tiger!😊. I rest my case.

Appreciate the vile stratagem of "deliberate misdirection" about beef. But be careful of the lynching brigade!!!.

Incidentally, I do not know the Tamil word for lynching. There was never a need for it as it is not a practice in Thamizhagam, I suppose.

Sorry about slipping into English, just for speed of typing



Vanchinathan said…
இக்காலத்தில் பொது மக்கள் சேர்ந்து தண்டனை அளிப்பதை "தர்ம அடி" என்கிறோம். பழங்காலத்தில் கழுவேற்றல் என்பது இருந்தது. அது மன்னர் அளித்த தண்டனையாக இருக்கலாம். lynching என்று கூற முடியாது. அது கொடுமையான சாவு, மேலை நாட்டில் burning at stakes போல.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.