Skip to main content

விடை 3926

புது வருஷம் பிறந்தவுடன் தினசரி கிழிக்கும் ராணி முத்து காலண்டர் வாங்குவது பல வருஷங்களாகப் பழக்கம்.  வருஷம் தவறாமல் ராணி முத்து காலண்டரில்  அதே முருகன் புன்முறுகிக் கொண்டிருப்பார்.

அழகென்றால் முருகனே என்ற பக்திப்பாடல் வேறு இரண்டு நாட்களுக்கு முன் கேட்டேன். இரண்டையும் பயன்படுத்தி தயார் செய்துதான் இன்றைய புதிர்.

முருகன் கதற காலை மறைத்தது வாமனனாக இருக்கலாம் (7)

இதற்கான விடை:  அழகுள்ளவன்.

இதைத் தவிர இன்னொரு விடையும் ஓரளவு பொருத்தமாக இருப்பதைக் குறிப்பிடவேண்டும். 
கேசவன்தான்  நான் நினைத்ததிலிருந்து மாறுபட்டு  அழகுடையவன்  என்று விடையனுப்பியுள்ளார். ஆவணி மாதத்தில் பருவமழை போது   ஓணம் கொண்டாடப்படும்  நாட்டில்  வாமனன்   மரக்குடையுடனே    காட்சி தருகிறார்.
(மரக்குடை கேரளாவில் மிகவும் பிரபலம் போலும். மரக்குடையென்று தொடங்கும் ஓர் இனிமையான பாட்டு இதோ. ) இந்தியாவின் மற்ற பகுதிகளிலும்   வாமனன் குடையுடன் சித்தரிக்கப்படுகிறாரா?

ஆனால் நான் மனதில் அமைத்த விடைக்கு முழு விளக்கத்தையறிய ராம்கி கிருஷ்ணனின் விடையிலுள்ள விவரங்களைப் பார்க்கவும். ஹிந்து ஆங்கில நாளேட்டிற்குப் புதிரமைக்கும் ஆசிரியர்களில் ஒருவரான  அவர் தமிழ்ப் புதிர்களில் ஆர்வம் காட்டுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

விடைகளின் பட்டியலைக்  காண இங்கே செல்லவும்.

Comments

Ambika said…
முருகன்=அழகன், கந்தன், கம்பன், குமரன்
கதற=அழ, கத்த, அலற
கால்=வ,பாதம்
வாமனன்=அவதாரம்,குள்ளன்
இப்படி எல்லாம் போட்டு கலக்கி போட்டு கலக்கி பாத்தேன், பிடிபடலை:(
வாமனனாக இருக்கலாம் தான் பொருள் னு ஏமாந்துட்டேன்
Kesavan said…
All dasavatharam images I have seen show Vaman with an umbrella. I did not think much of the shortness since he is a little boy anyway!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.