தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
**************************
நேற்றைய திருப்பாவை பாடலின் எதிரொலியோ, இன்றைய புதிரில் ஒலித்தது! ?
நேற்று முழங்கை வரை நெய் வழிய அனைவரும் கூடி அருந்தி உள்ளம் குளிர்ந்தோம் !
அருமையான புதிர் அமைத்த ஆசிரியருக்கு பாராட்டுகள் 💐
அக்காரவடிசில் அருந்திய திருப்தி! !🙌
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
திருப்பாவை
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!
*****************
உடலில் இருப்பது நாளைய மலர் சூடிய கிழங்குத் துண்டு (4)
நாளைய மலர்
= இன்றைய மொட்டு
= முகை
கிழங்குத் துண்டு
= [கி]ழங்[கு] = ழங்
நாளைய மலர் சூடிய
= முகை உள்ளே ழங்
= முழங்கை
உடலில் இருப்பது
= முழங்கை
******************
பொதுவாக மாலை 7 - 9 மணி இடைவேளையில் எப்போதாவது விடைக்கான பதிவை எழுதிவிட்டு 9 மணிக்கு வெடிக்கும்படி டைம்பாம்ப் வைத்துவிட்டுச் சென்றுவிடுவேன். நேற்றிரவு மிகுந்த அசதியோடு செய்ததால் கைவெடிகுண்டாக வீசிவிட்டேன். மன்னிக்கவும்.
@ராகவன்: ஆமாம். முந்தாநாள் அத்திருப்பாவைப் பாடலைப் படிக்கும்படி நேரிட்டது. அதிலிருந்து சுட்டுவிட்டேன். தேனெடுத்தவன் புறங்கை நக்காமல் இருக்க முடியுமா? நான் முழங்கை வரை சென்றுவிட்டேன்.