Skip to main content

விடை 3961


இன்று காலை வெளியான வெடி:

வளம் கொழிக்கும்  குருகும் பறந்த பின் நுழையச் சொல் (4)
அதற்கான விடை:  செழிப்பு = செப்பு + ழி

செப்பு = சொல்  (லு)
ழி = கொழிக்கும் - குருகும்
குருகு = கொக்கு

கபிலரின் குறுந்தொகைப் பாடல்:
யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”

ஏ கே ராமனுஜன் மொழிபெயர்ப்பு: (The Interior Landscape)
Only the thief was there,no one else
and if he should lie, what can I do?
There was only
a thin legged heron standing
on legs as millet stems
and looking
for lampreys
in the running water
when he took me.

திருவெம்பாவையில் குறிப்பிடப்படும் குருகு இந்த திரைப்படப்பாடலில் தொடக்கத்தில் இடம் பெறுகிறது.


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
குருகு

பொருள்
பெயர்ச்சொல்.

வெண்நிற கொக்கு வகை ஆகும்.
***********************
வளம் கொழிக்கும்  குருகும் பறந்த பின் நுழையச் சொல் (4)

குருகு = கொக்கு
குருகும் = கொக்கும்
பறந்த பின்
= கொழிக்கும்− கொக்கும்
= *ழி*

சொல்= செப்பு

நுழைய = ழி inside செப்பு

வளம் = *செழிப்பு*
***********************
Raghavan MK said…
குறுந்தொகையில் குருகு!

குறுந்தொகையின் 25 ஆவது பாடல்.

பிறரறியாமல் தலைவனும் தலைவியும் காதலிக்கின்றனர். ஊரறிய மணம் செய்துகொள்ள நினைக்கின்றாள் தலைவி. ஆனால், தலைவனோ, மணம் புரியக் காலம் நீட்டிக்கின்றான். தலைவிக்கோ, மனதில் குழப்பம். காதலித்தவன் ஒருவேளை தன்னை கைவிட்டு விட்டால் என்ன செய்வது? என்று! இப்படிப் பதறுகின்ற பெண்ணின் இயல்பான புலம்பலைப் பதிவு செய்திருக்கின்றார் புலவர்.
இது கபிலரின் பாடல்.


கருத்துரை:

தலைவன் என்னைப் பிறர் அறியாதவாறு காண வந்தபோது என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான். அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்? நான் அவனோடு கூடியிருந்த நாளில், அங்கே ஓடிக்கொண்டிருந்த நீரிலே ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது.
வில்லி பாரதம்


புலர்ந்தன கங்குற் போதும்
பொழிதரு பனியும் சேர

மலர்ந்தன மனமும் கண்ணும்
வயங்கின திசையும் பாரும்

அலர்ந்தன தடமும் காவும்
ஆர்த்தன புள்ளும் மாவும்!!

கலந்தன குருகும் பேடும்
கலித்தன முரசும் சங்கும்!

🙏🙏
Vanchinathan said…
வில்லி பாரதத்தில் இப்பாடல் அழகான ஓசைநயத்துடன் இருக்கிறது. நன்றி

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.