Skip to main content

விடை 3650

இன்று காலை வெளியான புதிர்:

பொறுப்பின்றி வயலின் வாசித்தவன் அரை ஆடையுடன் குளிக்க வந்த இடம்? (3)

இதற்கான விடை: நீரோடை;  ரோமாபுரியின் அரசன் நீரோ, ரோம் நாட்கணக்காக எரிந்து கொண்டிருந்த போது கவலைப்படாமல்  வயலின் வாசித்ததாகப் பரவலாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையாக இருக்க முடியாது என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். நீரோவின் காலத்தில் வயலின் (பிடில்) இல்லையென்பதை ஒரு காரணமாகக் கூறுகிறார்கள்.  ரோம் எரிந்தது ஏசு கிறிஸ்துவின் காலத்திற்குப் பின்னர் ஒரு நூற்றாண்டுக்குள் நடந்தது.

நம்முடைய புதிரில் இன்று வந்திருக்கும் நீரோவை அப்படிப் பொறுப்பில்லாதவர் என்று கூற முடியாது.   ஏன்? பின்வரும் வெண்பாவில் தெரியும்: 

 ஊரெல்லாம் பற்றியெரிய ஓடைக்கு வந்தங்கு
நீரெடுத்தான் நீரோ நெருப்பை அணைத்திடவே
பாரெங்கும் ஏனோ பழி.


இப்புதிருக்கு அனுப்பபட்ட விடைகளின் பட்டியல் இங்கே.

Comments

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.