Skip to main content

விடை 3635

பாரதப் போரில் துரோணரைக்  கொல்ல கண்ணன் செய்த திட்டப்படி யுதிஷ்டிரர்  அசுவத்தாமன் பற்றி அரைப்பொய் கூறுகிறார்.
அதுதான் அவர் சொன்ன  அரையே பொய் என்று பரவலாக நம்பப்படுகிறது. அதை நான் ஏற்க மாட்டேன். அதைத் தவிர ஒரு கால் பொய் சொல்லியிருக்கிறார்.  சில நாட்கள் முன்பு நகுலன், நச்சு கலந்த ஏரித் தண்ணீரைக் குடித்த  பூங்கோதை வழிப் புதிரை வெளியிட்ட இரவு யுதிஷ்டிரர் என் கனவில் வந்து எனக்கு நன்றி தெரிவித்தார்.   அப்போது தனக்கு இன்னொரு பேர் இருக்கிறது, அது "தருமுன்" என்று சொன்னார். அவர் இப்படிப் பொய் சொல்வார் என்று நான் எண்ணியிராததால் இன்று காலை ஒரு புதிர் அமைக்கும்போது  அதை நம்பி மோசம் போய்விட்டேன். பலரும் என்னிடம் அப்பிழையைச் சுட்டிக் காட்டிய பின்தான் அவர் செய்த‌ விஷமம் புரிந்தது. அதற்காகத்  தரையில்  உருண்டு புரள முடியுமா? அது நன்றாக இருக்காது என்று  புல்வெளியில் போய் உருண்டு புரண்டு  வேறு புதிர் செய்து வந்தேன். அப்புல்வெளியில் கொட்டியிருந்த கல்வெட்டியதைப் பொருட்படுத்தாமல் அரை மணி நேரத்தில் மாற்று வெடியைத் தயாரித்து வெளியிட்டேன்.

நம்பி மோசம் போன புதிர்:
வானொலியில் தன்னை மற‌ந்த யுதிஷ்டிரன் பக்தர்களின் சுமை (4)
இப்ப்புதிருக்கு உளறலாக நான் எண்ணிய விடை:  இருமுடி= இடி + ருமு

மாற்றுப் புதிர்:
கட்டுக்குள் அடங்கிய மாடு மேயுமிடத்தில் புளியெடுத்த வரலாற்றை உரைக்கும் (5)
இதற்கான விடை: கல்வெட்டு =  கட்டு + புல்வெளி ‍- புளி

விடையளித்தவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

Comments

Muthu said…
புல்வெளியில் புரண்டாலும் மீசையில் மண் ஒட்டவில்லை!
Vanchinathan said…

அதற்காகத்தானே மண்தரையை விட்டு புல்வெளியில் விழுந்தேன்!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்