Skip to main content

விடை 3637

விடை 3637
இன்றைய வெடி:
சம்பாதித்துத்  தம்பியிடம் கொடுத்திருக்கும் மாதவிக்கு ரிஷபம் (4)
இதன் விடை: துத்தம். (புதிரின் முதலிரு சொற்களில் இவ்விடை ஒளிந்துள்ளது).

மக்களைப் பெற்ற மகராசி என்ற திரைப்படத்திற்கு மருதகாசியார் "மணப்பாறை மாடுகட்டி"  என்ற  பாடலில்   சம்பாதிச்ச காசை அம்மா கையில் கொடுத்தால் ஆறு ரூபாயை நூறாக்கித் தருவார்கள் என்று கூறியிருப்பார்.  அக்கா மாதவி,  த‌ம்பியிடம்  ச‌ம்பளத்தைக்  கொடுத்தால் ஒரு மணப்பாறைக் காளையை (ரிஷபம்) தருவான் என்று  நம்பிக் கொடுத்தாளா எனக்குத் தெரியாது. நான் சொல்வது  சிலப்பதிகாரத்து மாதவி.  அந்த காலத்தில் ஏழிசையை
இப்போதுள்ளவாறு  ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், என்ற சொல்லாமல் வேறு பெயர் வைத்திருந்தனர்.  அந்த ஸ்வர வரிசையில் இரண்டாவதாக ரிஷபத்துக்கு நிகராக வருவது "துத்தம்".  இதற்குமேலே இதைப் பற்றி விஷயம் தெரியாத நான் பேசினால் சரியாக இருக்காது. "சிலப்பதிகாரத்தில் இசை" என்று ஆழ்ந்து ஆராய்ந்து நூலெழுதி வெளியிட்டுள்ள  இசைய‌றிஞர் குடும்பத்தினர் இந்த உதிரிவெடிப் பக்கங்களுக்கு வாடிக்கையாக வருகின்றனர். அவர்களை,   கருத்துரைப் பகுதியில்  விவரங்களை அளிக்க அழைக்கிறேன்.

இப்புதிருக்கு எல்லோரும் அனுப்பிய விடைகளைக் காண இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.                  


Comments

Raghavan MK said…


*ஏழு சுரங்கள்*
இந்த ஏழு சுரங்களின் பெயர்கள் பண்டைக்காலத்தில் _குரல், *துத்தம்* , கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்_ என அழைக்கப்பட்டன.

இன்று இப்பெயர்கள் சட்ஜமம், *ரிஷபம்* , காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற வடமொழிப் பெயர்களாக வழங்குகின்றன. தூய தமிழாக இருந்த பண்களின் பெயர்கள் பல இன்று வடமொழிப் பெயர்களாக மாறியுள்ளன.🤔
*************************
_சம்பாதித்துத்  தம்பியிடம் கொடுத்திருக்கும்  மாதவிக்கு ரிஷபம் (4)_ 

_சம்பாதித்துத்  தம்பியிடம் கொடுத்திருக்கும்_
= _[சம்பாதித்] *துத்தம்* [பியிடம்]_
= *துத்தம்*

_மாதவிக்கு ரிஷபம்_
= *துத்தம்*
Muthu said…
என் தங்கை Meenakshi Subramanian சொல்வது: 'குரலே துத்தம் கைக்கிளை உழையே

இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே'[13]



தமிழிசையில் ஏழிசைச் சுரங்களாகக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, இசைக்குரிய எழுத்துகள் ஏழு - ச,ரி,க,ம,ப,த,நி - இதனை ஏழிசை என்பர். தமிழிசையில் இது பறவை, விலங்கினங்களின் குரல்களோடு ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது. தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.

“வேண்டிய வண்டும்மாண்டகு கிளியு

குதிரையும் யானையும்குயிலும் தேனுவும்

ஆடும் என்றிவை ஏழிசை ஓசை [14]
சிலப்பதிகாரத்தில் 7சுரங்கள்
Muthu said…
புதிய சொல்லும், செய்தியும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி!
உஷா said…
நானும் அவ்வண்ணமே

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.