Skip to main content

விடை 3637

விடை 3637
இன்றைய வெடி:
சம்பாதித்துத்  தம்பியிடம் கொடுத்திருக்கும் மாதவிக்கு ரிஷபம் (4)
இதன் விடை: துத்தம். (புதிரின் முதலிரு சொற்களில் இவ்விடை ஒளிந்துள்ளது).

மக்களைப் பெற்ற மகராசி என்ற திரைப்படத்திற்கு மருதகாசியார் "மணப்பாறை மாடுகட்டி"  என்ற  பாடலில்   சம்பாதிச்ச காசை அம்மா கையில் கொடுத்தால் ஆறு ரூபாயை நூறாக்கித் தருவார்கள் என்று கூறியிருப்பார்.  அக்கா மாதவி,  த‌ம்பியிடம்  ச‌ம்பளத்தைக்  கொடுத்தால் ஒரு மணப்பாறைக் காளையை (ரிஷபம்) தருவான் என்று  நம்பிக் கொடுத்தாளா எனக்குத் தெரியாது. நான் சொல்வது  சிலப்பதிகாரத்து மாதவி.  அந்த காலத்தில் ஏழிசையை
இப்போதுள்ளவாறு  ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், என்ற சொல்லாமல் வேறு பெயர் வைத்திருந்தனர்.  அந்த ஸ்வர வரிசையில் இரண்டாவதாக ரிஷபத்துக்கு நிகராக வருவது "துத்தம்".  இதற்குமேலே இதைப் பற்றி விஷயம் தெரியாத நான் பேசினால் சரியாக இருக்காது. "சிலப்பதிகாரத்தில் இசை" என்று ஆழ்ந்து ஆராய்ந்து நூலெழுதி வெளியிட்டுள்ள  இசைய‌றிஞர் குடும்பத்தினர் இந்த உதிரிவெடிப் பக்கங்களுக்கு வாடிக்கையாக வருகின்றனர். அவர்களை,   கருத்துரைப் பகுதியில்  விவரங்களை அளிக்க அழைக்கிறேன்.

இப்புதிருக்கு எல்லோரும் அனுப்பிய விடைகளைக் காண இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.                  


Comments

Raghavan MK said…


*ஏழு சுரங்கள்*
இந்த ஏழு சுரங்களின் பெயர்கள் பண்டைக்காலத்தில் _குரல், *துத்தம்* , கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்_ என அழைக்கப்பட்டன.

இன்று இப்பெயர்கள் சட்ஜமம், *ரிஷபம்* , காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற வடமொழிப் பெயர்களாக வழங்குகின்றன. தூய தமிழாக இருந்த பண்களின் பெயர்கள் பல இன்று வடமொழிப் பெயர்களாக மாறியுள்ளன.🤔
*************************
_சம்பாதித்துத்  தம்பியிடம் கொடுத்திருக்கும்  மாதவிக்கு ரிஷபம் (4)_ 

_சம்பாதித்துத்  தம்பியிடம் கொடுத்திருக்கும்_
= _[சம்பாதித்] *துத்தம்* [பியிடம்]_
= *துத்தம்*

_மாதவிக்கு ரிஷபம்_
= *துத்தம்*
Muthu said…
என் தங்கை Meenakshi Subramanian சொல்வது: 'குரலே துத்தம் கைக்கிளை உழையே

இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே'[13]



தமிழிசையில் ஏழிசைச் சுரங்களாகக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, இசைக்குரிய எழுத்துகள் ஏழு - ச,ரி,க,ம,ப,த,நி - இதனை ஏழிசை என்பர். தமிழிசையில் இது பறவை, விலங்கினங்களின் குரல்களோடு ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது. தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.

“வேண்டிய வண்டும்மாண்டகு கிளியு

குதிரையும் யானையும்குயிலும் தேனுவும்

ஆடும் என்றிவை ஏழிசை ஓசை [14]
சிலப்பதிகாரத்தில் 7சுரங்கள்
Muthu said…
புதிய சொல்லும், செய்தியும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி!
உஷா said…
நானும் அவ்வண்ணமே

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்