Skip to main content

விடை 3656

இன்று காலை வெளியான வெடி:
தலையோடு வந்தால் விதி என்பதைக் கையோடு ஒப்புக்கொள்ளும் (4)

இதற்கான விடை: எழுத்து  (தலையெழுத்து = விதி;  கையெழுத்து = ஒப்புதல்)

இப்புதிருக்கு அனுப்பட்ட விடைகளின் பட்டியல்.

 

Comments

இன்றைய புதிர் கொஞ்சம் மாறுபட்டது. இது இரட்டை விளக்கம் ( double definition ) வகையை சார்ந்தது. ஆனால், விளக்கம் நேரடியாக இல்லை. உதாரணமாக எதிர்காலத்தில் அந்தப் பையன்தான் கெட்ட பையன் இல்லை (7) = இனியவன்தான். இனிமேல் அவன்தான் = எதிர்காலத்தில் அந்தப் பையன் தான். கெட்ட பையன் இல்லை = இனிமையான பையன் தான். இது இரட்டை விளக்கம் வகை புதிர். இதில் கட்டுமான (construction) இல்லை.

ஆனால் இன்றைய புதிரில் விளக்கம் நேராக இல்லை, தலை+எழுத்து = விதி. கை + எழுத்து = ஒப்புக்கொள்ளுதல். இது indirect double definition வகை புதிர் ஆகிறது.

கொஞ்சம் இல்லை நிறையவே மாறுபட்ட அமைப்பு.
Vanchinathan said…
நன்றி ரவி சுந்தரம், இனியவனுக்கு நல்ல குறிப்பைக் கொடுத்ததற்கு. வழக்கமான பாதயிலிருந்து விலகிச் சென்றது வேண்டுமென்றே செய்ததுதான். ஆனால் உங்கள் கருத்து இது ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பதைச் சந்தேகமாகச் சொல்வதாக இருக்கிறது.

ஒரு முறை இதே பாணியை முன்பு கையாண்டிருக்கிறேன்.
Raghavan MK said…
எழுத்து என்ற சொல் மனதில் பட்டது , ஆனால் *சரியாக இனைக்க முடியவில்லை.!*
கபாலமும் அப்படித்தான்!
So l preferred the later one!
*************
_தலையோடு வந்தால் விதி என்பதைக் கையோடு ஒப்புக்கொள்ளும் (4)_

_தலையோடு வந்தால்_
= _மண்டை ஓடு_
= *கபாலம்*

_விதி என்பதைக் கையோடு ஒப்புக்கொள்ளும்_

_கையிலிருக்கும் ஓடு_
= _திருவோடு_
= *கபாலம்*
××××××××××××××××××××
வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் *கைகளில்* கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை *திருவோடு* , அட்சய பாத்திரம், *கபாலம்* என்ற பெயர்களில் அழைப்பார்கள்.
Vanchinathan said…
தலையோடு--> மண்டையோடு --> கபாலம் ---> திருவோடு.

ஒரு ரசிக்கும்படியான வேற்றுப்ப்பார்வையை, ராகவன் முன் வைக்கிறார். இங்கே ஒரு சொல் (எழுத்து),தலை, கை இரண்டுடன் சேர்த்துக் கூறப்படும்போது ஏற்படும் சம்பந்தமில்லா அர்த்தங்களைக் கொண்டு வருகிறது. இதில் புத்ருக்கு சுவாரசியமாகக் கிடைத்த அம்சம் என்னவெண்ரால் அந்த இரண்டு ஒட்டுச் சொற்களும் (தலை, கை) உடலின் பாகங்களாக அமைந்ததுதான்.
உஷா said…
இன்றைய புதிர் கிட்டத்தட்ட விடுகதை போலிருக்கிறது
புதிர் சரியாகவே அமைக்கப்பட்டுள்ளது, அதில் சந்தேகம் எதுவுமில்லை.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.