தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
ஆனால் இன்றைய புதிரில் விளக்கம் நேராக இல்லை, தலை+எழுத்து = விதி. கை + எழுத்து = ஒப்புக்கொள்ளுதல். இது indirect double definition வகை புதிர் ஆகிறது.
கொஞ்சம் இல்லை நிறையவே மாறுபட்ட அமைப்பு.
ஒரு முறை இதே பாணியை முன்பு கையாண்டிருக்கிறேன்.
கபாலமும் அப்படித்தான்!
So l preferred the later one!
*************
_தலையோடு வந்தால் விதி என்பதைக் கையோடு ஒப்புக்கொள்ளும் (4)_
_தலையோடு வந்தால்_
= _மண்டை ஓடு_
= *கபாலம்*
_விதி என்பதைக் கையோடு ஒப்புக்கொள்ளும்_
_கையிலிருக்கும் ஓடு_
= _திருவோடு_
= *கபாலம்*
××××××××××××××××××××
வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் *கைகளில்* கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை *திருவோடு* , அட்சய பாத்திரம், *கபாலம்* என்ற பெயர்களில் அழைப்பார்கள்.
ஒரு ரசிக்கும்படியான வேற்றுப்ப்பார்வையை, ராகவன் முன் வைக்கிறார். இங்கே ஒரு சொல் (எழுத்து),தலை, கை இரண்டுடன் சேர்த்துக் கூறப்படும்போது ஏற்படும் சம்பந்தமில்லா அர்த்தங்களைக் கொண்டு வருகிறது. இதில் புத்ருக்கு சுவாரசியமாகக் கிடைத்த அம்சம் என்னவெண்ரால் அந்த இரண்டு ஒட்டுச் சொற்களும் (தலை, கை) உடலின் பாகங்களாக அமைந்ததுதான்.