Skip to main content

உதிரிவெடி 3651

உதிரிவெடி 3651 (ஏப்ரல் 24, 2019)
வாஞ்சிநாதன்
*****************

. இரண்டாண்டுகள் தினம் புதிரையளித்ததைப் பாராட்டி
ரவி சுப்ரமணியனும், புதியதாக  வந்துள்ள ராம்கி கிருஷ்ணன் என்பவரும் பாராட்டுகளை நேற்று இவ்வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.   இந்த ரீதியில் வரும் 2021 ஏப்ரலில் இல்   சமூகத்தில் நாலு பேர் பாராட்டும்படி  பேர் பெற்றவனாகிவிடுவேன்!

ரோம் எரிந்த போது வயலின் வாசித்த மனிதனைப் பற்றி நேற்று புதிர் பேசியது, ஒரு மிருகத்தைப் பற்றி இன்று:

ஒரு விலங்கிடம் கருணை காட்டும் குணம்  (4)




Comments

Sundar said…
எப்போதோ ஒருமுறை சுஜாதா தனக்கு வரும் வாசகர் கடிதங்களைப் பற்றி எழுதியது ஞாபகம் வருகிறது. I am paraphrasing a bit.
--------------------------------------
நேராக பார்க்கும் ஆண்கள், “என் வைப்தான் உங்க கதையெல்லாம் படிப்பா. எனக்கு அதுக்கெல்லாம் நேரம் கிடையாது”. மற்றபடி எனக்கு வரும் வாசகர் கடிதங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. சமீபத்தில் முடிந்த தங்களது கணேஷ்/வசந்த் தொடர்கதையை குமுதத்தில் படித்தேன். அற்புதம். நானும் தற்சமயம் வெல்டிங் டிப்ளோமா முடித்திருக்கிறேன். BELல் ஒரு வேலை வாங்கித்தர முடியுமா?

2. நானும் உங்கள் கதைகளை மிகவும் ரசித்து படித்து வருகிறேன். இக்கடிதத்துடன் வரசித்தி விநாயகர் கோவிலில் உங்களுக்காக அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி இருக்கிறேன். சாய் பாபா படமும் இணைத்திருக்கிறேன். தினமும் வைத்துப் பூஜிக்கவும். உங்களுக்கும், உங்கள் மனைவி குழந்தைகளுக்கும் நல்லது நடக்கும்.

உண்மையான வாசகர்கள் கடிதங்கள் எழுதுவதில்லை.
-------------------------------------
மின் அஞ்சலும், வலைப்பக்கங்களும் கருத்துத் தெரிவிப்பதை மிகவும் எளிதாக்கி இருந்தாலும், உருப்படியான பின்னூட்டங்களை அளிப்பவர்கள் எண்ணிக்கை குறைவுதான். நானும் கூடத் திருந்த வேண்டும். :-)

இன்னும் நூறாண்டுகள் வெடிகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டிருக்க வாழ்த்துக்கள். இவ்வெடிகள் மூலம் உறவுகளுடன் உறவாட அடிக்கடி ஒரு வாய்ப்பு உருவாவதால் நன்றிகளும் பல. :-)
Vanchinathan said…
ஆமாம் சுஜாதாவின் அந்த கட்டுரையைப் படித்திருக்கிறேன்.
"என் வைஃப்தான் படிப்பா" என்று நீங்கள் குறிப்பிட்டதில் சுஜாதா இன்னமும் அவருக்கே உரித்தான பாணியில் சொல்லியிருப்பார்: " கொஞ்சம் தட்டினால் என்னுடைய கதைகள் விவரம் எல்லாம் சொல்லிவிடுவார்"
M k Bharathi said…
புதிர் களத்தில் வரலாறு படைத்த வாஞ்சியை வாழ்த்தி 22ம் நாள் நான்
வலைதளத்தில் வெளியிட்ட
செய்தி பின் காணப்படவில்லை
அச்செய்தி����


*உதிரிவெடி இரண்டாம் ஆண்டு நிறைவு*
***********************************************

*கதிர்கூட பலகாலை முகிலின்பின்*
*முகம்மறைக்கும்*

*புதிரின்றி புலராது ஒருநாளும்−புதிர்வெடி*

*வனப்புடன் அவதாரம் எடுக்கவே ;*
**வாஞ்சி*

*முனைப்புடன் செதுக்கிடுவார்*
*முகமலர்ந்து!*
Vanchinathan said…
இந்த புதிர் செய்ய அவதாரம் எல்லாம் தேவையில்லை, மு க பாரதி அவர்களே. காலையில் காபி குடித்துவிட்டு கணினி முன் ஐந்தேமுக்காலுக்கு உட்கார்ந்தால் போதும்.
Siddhan Subramanian said…
Vanchi has been doing a phenomenal job in presenting these puzzles and making us get deeper in our thinking and the lateral way to look at words and their context. Thoroughly enjoybakle and educative at the same - Wish him a long run and readers for doing your end of the bargain - solving them - God bless
Vanchinathan said…
நன்றி சித்தன்.
பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள வாழ்க பல்லாண்டு!

நாங்கள் பாராட்டுவதா பெரிது? உங்களை பாராட்டி வானுலகம் வான் மழை பெய்ததாக படித்தேன்!

வள்ர்க உங்கள். புதிரான பணி!

Raghavan MK said…
நீர் உதிர்க்கும் வெடிகளில்
சதிராடும் கூட்டம் நாங்கள்
ஈரடி வைத்து நடை பயின்று
முற்றத்தில் முத்தாடி பின்
மூவர் உலா காண வரும்
வாஞ்சியின் குழவி உதிரிவெடி
வாழ்க வளர்க என வாழ்த்துகிறேன்!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.