தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
இலக்கியத்தைப் பாடும் புலவர்கள் *உள்ளதை உள்ளவாறே பாடுவது இல்லை* . உள்ளதில் சிறிது குறைத்தும் சிறிது கூட்டியும் பாடுகிறார்கள். அதனால்தான் இலக்கியம் என்பது கலை ஆகிறது. கற்பனையைச் சேர்த்துக் குழைத்துத் தரும் இலக்கியத்தைத்தான் வாசகன் விரும்பிச் சென்று படிக்கிறான். உள்ளம் விரும்புமாறு அமையும் கற்பனைக்கும் வாழ்க்கையே அடிப்படையாகிறது. வாழ்க்கையின் அனுபவமே அத்தகைய கற்பனையைத் தூண்டுகிறது.
*************************
_கற்பனை கை வெட்டி ஊற்று (2)_
_ஊற்று_
= *பொய்கை*
_கை வெட்டி ஊற்று_
= *பொய்கை - கை*
= *பொய்*
_கற்பனை_
= *பொய்*