Skip to main content

விடை 3653

இன்று காலை வெளியான வெடி:
அழகை வெளியேற்றிய  ரகளை  வெளியே விட்டு வெளியேறச் செய் (4)

வெடியிதற்கு  எச்சொல் விடையென்று கேட்போர்
படித்திடுவீர்  வெண்பாவைப் பாங்காய் ‍‍-- ‍‍துடிப்பாய்
விரட்டிப் பிடித்தோர்க்கு வெற்றியாம்  வீணாய்த்
துரத்தியோர் வாய்ப்பிழந்தார் தோற்று.


Comments

Raghavan MK said…




அழகு

அழகை போற்றாதவர், பாடாதவர்,ஆராதிக்காதவர் எத்தனை பேர் இருக்கின்றனர்?.
ரகளை செய்து அழகை வெளியேற்ற இயலுமா?
ரகளையில் சில சமயம் புறவழகு தேயலாம். ஆனால் அகவழகை ரகளை என் செய்யும்!
🌺🌺🌺🌺🌺🌺🌺
_அழகை வெளியேற்றிய  ரகளை  வெளியே விட்டு வெளியேறச் செய் (4)_ 
_அழகு_ = *களை*

_வெளியேற்றிய  ரகளை_
= *ரகளை - களை*
= *ர*

_வெளியே விட்டு_
= _*ர* விற்கு வெளியே *விட்டு*_
= *ர --> விட்டு*
= *விரட்டு*

_வெளியேறச் செய்_
= *விரட்டு*
************************
Raghavan MK said…
*********************
கம்பரின் நோக்கில் இராமனின் அழகு

மையோ மரகதமோ

கம்பரே சொற்கள் கிடைக்காமல் தடுமாறிய இடம் உண்டு. இராமன் அழகைக் கம்பர் வருணிக்கிறார். கவிதையால் வடிக்க இயலாத அழகு இராமனின் அழகு. இராமனின் அழகுக்குப் பல உவமைகளை வரிசையாகக் கூறுகிறார். என்றாலும் அந்த அழகை
வார்த்தைக்குள் கொண்டு வரமுடியவில்லை. இறுதியில் *‘ஐயோ’* என்கிறார்.

பாடல் இதோ:

வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோஎனும் இடையாள்ஓடும் இளையான்ஓடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோஇவன் வடிவுஎன்பதோர் அழியாஅழகு உடையான்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.