Skip to main content

விடை 4010


இன்று காலை வெளியான வெடி:
காலில்லாக் கோழி வளர்க்குமிடம் தடி சுழற்றிய  சண்டியர் கடைசியாகப் படித்தவர் (5)
அதற்கான விடை: பண்டிதர் = பண் + டித + ர்

பண் = பண்ணை - ணை (பண்ணை = கோழி வளர்க்குமிடம்)
டித = சுழற்றிய தடி
ர் = கடைசியாக, சண்டியர்
தடி சுழற்றிய  சண்டியரைக் கண்டு பயப்படாமல்  புதிரில் இறங்கி 50க்கும் மேற்பட்டவர்கள் விடைகளைக் கண்டு பிடித்து விட்டீர்கள். பாராட்டுகள்.
யாரந்த 50 பேர்? இங்கே சென்று பார்க்கவும்.

சண்டியர் கையில் தடியெடுத்து வந்தாலும்  
உண்டில்லை யென்றிவ் வுதிரி வெடியதில் 
அஞ்சாது நாள்தோறும் பங்கேற்போர் ஆர்வம்
பஞ்சிலே  பற்றிய தீ.



Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*_கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்--_*

_பழமொழி_
***********************
"கண்டதை கற்பவன் *பண்டிதன்* ஆவான்” என்ற தொடரில் கண்டதை கற்கும் ஒருவன் எப்படி வல்லுனன் ஆக முடியும்? கண்ணால் மட்டுமே கண்ட ஒரு செயலை, அல்லது கலையை கற்று கொள்பவன் *பண்டிதன்* ஆகி விடுவான் என்றே பொருள் கொள்ள வேண்டும். 
*************************
_காலில்லாக் கோழி வளர்க்குமிடம் தடி சுழற்றிய  சண்டியர் கடைசியாகப் படித்தவர் (5)_

_காலில்லா_
= _அடிப்பகுதி இல்லாத_
= _*கடைசியெழுத்து* இல்லாத_

_கோழி வளர்க்குமிடம்_
= *பண்ணை*

_காலில்லாக் கோழி வளர்க்குமிடம்_
= *பண்ணை-ணை*
= *பண்*

_தடி சுழற்ற_ = *டித*

_சண்டியர் கடைசியாக_ = *ர்*

_படித்தவர்_
= *பண்+டித+ர்*
= *பண்டிதர்*
*************************
It’s such a delight to solve these vedis everyday. There were days when I couldn’t even understand the format and now a days am able to solve them by myself. It has become an everyday family affair for us. Kudos to you!

If possible please give us a crossword during this lockdown period. We will have something interesting to keep ourselves busy!
Vanchinathan said…
நன்றி ஶ்ரீகிருபா: தமிழ்ப்புத்தாண்டுக்கு முழுப்புதிர் செய்யலாம் என்று எண்ணம். எஅன்க்கும் வீட்டில் அடைபடும் கதி நேரிட்டால் நிச்சயம் அப்போதே முழுப் புதிர் கிடைக்கும்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.