Skip to main content

விடை 4008


இன்று காலை வெளியான வெடி:

படித்தவள் அனுபவித்த ஒரு ஸ்வரத்திற்கு முன்பே கொடு (5)

அதற்கான விடை: பட்டதாரி = பட்ட + தா + ரி

பட்ட = அனுபவித்த
தா  = கொடு
ரி = ஒரு ஸ்வரம்

ரவி சுந்தரம் இலக்கண நூலில் தா, கொடு இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்கிறார்.  ஒப்போர், உயர்ந்தோர் என்று யார் எச்சொல்லைப் பயன்படுத்தலாம் என விதி இருப்பதைக் குறிப்பிடுகிறார்.

ஆனால் இக்காலத்தில் இரண்டையும் சமமாகவே பயன்படுத்துகிறோம். சிறுவர்கள், "கொடுடா, தாடா" என்று பேசுகிறார்கள்.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

I submitted the answer today but It’s not there in the list.
Vanathy said…
Even my name is not there
Vanathy said…
Even my name is not there
Vanchinathan said…
I am surprised by this report about missing names. I do not edit this spreadsheet containing the answers. I simply provide a link to the list created by solvers.
சுஜாதா எழுதிய விஞ்ஞான சிறுகதைகளில் ஒன்று. கால இயந்திரம் பாவித்து எதிர்கால மனிதன் ஒருவன் பழைய காலத்துக்கு சென்றுவிடுகிறான்.

அங்கே ஒரு ஆற்றின் கரையில் (பஃற்றுளி) ஒரு முனிவரை சந்திக்கிறான்.

"நீவிர் யார்?"

"நான் எதிர்காலத்திலிருந்து வருகிறேன்."

"ஓ அப்படியா ?"

அவரிடம் ஒரு மாணவன் வந்து, "ஐயா ஈ தா கொடு பற்றிய விவரம் விளக்க வேண்டுகிறேன் !"

"உம் காலத்தில் இந்த சொற்கள் வழக்கில் உள்ளனவா ?"

"ஈ வழக்கொழிந்து விட்டது. தா சாதாரணமாக கேட்பது. கொடு அதிகாரமாக கேட்பது"

மாணவனை நோக்கி "எழுதிக்கொள். ஈ தா என்பதொப்போர் கூற்றே, கொடு என்பது உயர்ந்தோர் கூற்றே "

பள்ளிக்கூடத்தில் பரீட்ச்சைக்கு படித்த இலக்கணம் மறந்து விட்டது, இது மட்டும் நினைவில் நிற்கிறது. (நினைவிலிருந்து எழுதுகிறேன். குற்றம் குறைகள் எனக்கே சொந்தம். கற்பனை திறன் அவருக்கு சொந்தம் )
பட்டியல் வெட்டிவிட்டது. முழு வரி:

பட்ட = அனுபவித்த ; ஸ்வரம் = ரி ; கொடு = தா (ஈ தா என்பது ஒப்போர் கூற்றே! கொடு என்பது உயர்ந்தோர் கூற்றே! நன்னூல் சூத்திரமோ தொல்காப்பியமோ சுஜாதா கதையில படிச்ச ஞாபகம் ). முன்பே கட்டமைப்பு குறியீடு பட்டதாரி பெண்ணாகவும் இருக்கலாம்
I am surprised by this report about missing names. I do not edit this spreadsheet containing the answers. I simply provide a link to the list created by solvers.

May be those names are in the quarantine due to coronavirus....
கொஞ்சம் கூகிளினேன்.

ஈ தா கொடு என்று கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகிடன் உடைய

----

ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே
தாவென் கிளவி ஓப்போன் கூற்றே
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே

-----

ஆனால் இப்போதெல்லாம் இந்த வித்தியாசங்கள் பார்க்கப்படுவதில்லை
Vanchinathan said…
தெலுங்கில் "ஈ" பேச்சு வழக்கிலேயே இருக்கிறது, கொடு/தா என்ற பொருளில். பழைய செய்யுள்கலில் "ஈயென இரத்தல்" இழிந்தது என்றே இருக்கிறது.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.