Skip to main content

விடை 4008


இன்று காலை வெளியான வெடி:

படித்தவள் அனுபவித்த ஒரு ஸ்வரத்திற்கு முன்பே கொடு (5)

அதற்கான விடை: பட்டதாரி = பட்ட + தா + ரி

பட்ட = அனுபவித்த
தா  = கொடு
ரி = ஒரு ஸ்வரம்

ரவி சுந்தரம் இலக்கண நூலில் தா, கொடு இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்கிறார்.  ஒப்போர், உயர்ந்தோர் என்று யார் எச்சொல்லைப் பயன்படுத்தலாம் என விதி இருப்பதைக் குறிப்பிடுகிறார்.

ஆனால் இக்காலத்தில் இரண்டையும் சமமாகவே பயன்படுத்துகிறோம். சிறுவர்கள், "கொடுடா, தாடா" என்று பேசுகிறார்கள்.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

I submitted the answer today but It’s not there in the list.
Vanathy said…
Even my name is not there
Vanathy said…
Even my name is not there
Vanchinathan said…
I am surprised by this report about missing names. I do not edit this spreadsheet containing the answers. I simply provide a link to the list created by solvers.
சுஜாதா எழுதிய விஞ்ஞான சிறுகதைகளில் ஒன்று. கால இயந்திரம் பாவித்து எதிர்கால மனிதன் ஒருவன் பழைய காலத்துக்கு சென்றுவிடுகிறான்.

அங்கே ஒரு ஆற்றின் கரையில் (பஃற்றுளி) ஒரு முனிவரை சந்திக்கிறான்.

"நீவிர் யார்?"

"நான் எதிர்காலத்திலிருந்து வருகிறேன்."

"ஓ அப்படியா ?"

அவரிடம் ஒரு மாணவன் வந்து, "ஐயா ஈ தா கொடு பற்றிய விவரம் விளக்க வேண்டுகிறேன் !"

"உம் காலத்தில் இந்த சொற்கள் வழக்கில் உள்ளனவா ?"

"ஈ வழக்கொழிந்து விட்டது. தா சாதாரணமாக கேட்பது. கொடு அதிகாரமாக கேட்பது"

மாணவனை நோக்கி "எழுதிக்கொள். ஈ தா என்பதொப்போர் கூற்றே, கொடு என்பது உயர்ந்தோர் கூற்றே "

பள்ளிக்கூடத்தில் பரீட்ச்சைக்கு படித்த இலக்கணம் மறந்து விட்டது, இது மட்டும் நினைவில் நிற்கிறது. (நினைவிலிருந்து எழுதுகிறேன். குற்றம் குறைகள் எனக்கே சொந்தம். கற்பனை திறன் அவருக்கு சொந்தம் )
பட்டியல் வெட்டிவிட்டது. முழு வரி:

பட்ட = அனுபவித்த ; ஸ்வரம் = ரி ; கொடு = தா (ஈ தா என்பது ஒப்போர் கூற்றே! கொடு என்பது உயர்ந்தோர் கூற்றே! நன்னூல் சூத்திரமோ தொல்காப்பியமோ சுஜாதா கதையில படிச்ச ஞாபகம் ). முன்பே கட்டமைப்பு குறியீடு பட்டதாரி பெண்ணாகவும் இருக்கலாம்
I am surprised by this report about missing names. I do not edit this spreadsheet containing the answers. I simply provide a link to the list created by solvers.

May be those names are in the quarantine due to coronavirus....
கொஞ்சம் கூகிளினேன்.

ஈ தா கொடு என்று கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகிடன் உடைய

----

ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே
தாவென் கிளவி ஓப்போன் கூற்றே
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே

-----

ஆனால் இப்போதெல்லாம் இந்த வித்தியாசங்கள் பார்க்கப்படுவதில்லை
Vanchinathan said…
தெலுங்கில் "ஈ" பேச்சு வழக்கிலேயே இருக்கிறது, கொடு/தா என்ற பொருளில். பழைய செய்யுள்கலில் "ஈயென இரத்தல்" இழிந்தது என்றே இருக்கிறது.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்