Skip to main content

விடை 4000


இன்று காலை வெளியான வெடி:

பெண்கள் சட்டங்கள் செய்ய வந்தனர் என்று எழுதியது உலகிலே மிகவும் அழகானவளா? (5)
அதற்கான விடை: பாரதியார் = பார் + ரதியா
பார் = உலகு
ரதியா = மிகவும் அழகானவளா

"உலகிலே" என்றது "பார்" என்ற சொல்லுக்குள் "ரதியா" என்ற சொல்லை இட வேண்டும் என்பதற்கு

பாரதியார் பெண்விடுதலையைக் கொண்டாடும் கும்மிப் பாட்டில்
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்" என்று எழுதியுள்ளார்.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம.

இன்று எண் வரிசையில் புதிர் நாலாயிரத்தை எட்டியுள்ளது.
இப்படி எண்ணிட  ஆரம்பித்தது  ரவி சுந்தரத்தின் உந்துதலால் ஜூலை 2017இல்.
அன்று வரிசை எண் 3000 என்று குறிப்பிட்டேன்.

அதற்கு முன் 3 மாதங்கள் தினசரி வாட்ஸப்பில் வந்த புதிர்களையும்,  தென்றல் பத்திரிகையிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் 1999லிருந்து 2012 முடிவு வரை வெளிவந்த    210க்கும் மேற்பட்ட முழு வலைக்கட்டப் புதிர்களையும் தோராயமாக 2999 என்று வைத்துக் கொண்டேன்.

இன்று 4000 என்ற எண்ணை எட்டியதைச் சற்றே அடக்கமின்றி  பொன்னெழுத்துகளில் காட்டியதைக் கூர்ந்து கவனித்து அதற்குப் பாராட்டு தெரிவித்துக் கருத்து வெளியிட்ட  சித்தானந்தம்,  நா.தோ. நாதன், அம்பிகா,  பெயரிலி,  ஆர்கே இ,  ரவி சுந்தரம்  ஆகிய   ஏழு பேருக்கும் நன்றி.

ஒரு பழைய ஆனந்த விகடன் ஜோக்:
நள்ளிரவில் மனைவி: என்னங்க அடுப்பங்கறையில் ஏதோ சத்தம் கேக்குதே, திருடனா என்னன்னு போய் பாத்துட்டு வாங்க.

கணவன்: அது ஏதாவது பூனை பாத்திரத்தைத் தட்டி விட்டிருக்கும். திருடன் எவனாவது இப்படி சத்தத்தைக் கிளப்புவானா?

மனைவி (அரை மணி கழித்து):  என்னங்க அரை மணியா ஒரு சத்தமும் வரலையே, திருடன் வந்திருக்கானான்னு பாத்துட்டு வாங்க



Comments

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.