தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
*************************
எதிர்மறையான பொருள் கொண்ட விடையுடன் அமைக்கப்பட்ட
புதுமையான புதிர் இன்று! 👏
*******************************
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
(குறள்)
மழை பெய்வதால் உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.
*************************
அம்(உ)
=அழகிய
அங்கயற்கண்ணி=அம்+கயல்+கண்ணி
*************************
அழகிய மொழியொன்று கலந்தது மிகக் குறைவான அளவு நஞ்சு! (5)
அழகிய = அம்
மொழியொன்று
= தமிழ்
கலந்தது = அம்+தமிழ் = அமிழ்தம்
=மிகக் குறைவான அளவு நஞ்சு!
[அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு (பழமொழி)]
*************************
அமிழ்தம்
தேவர் உணவு,அமுதம்,அமிழ்தம்.
அழியாத அமரத்துவம் தரவல்லது; அழிவின்மை அமிர்தா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்த அயற்சொல் ஆகும்.
*************************
அளவு மீறாவிட்டால் நஞ்சும் அமிர்தம்?
கணித பேராசிரியருக்கு தெரியும் If A then B implies If !B then !A. அனால் பெரும்பாலோனோர் If A then B implies If !A then !B என்று தவாறாக எண்ணுவார்கள். அதை வைத்து வேடிக்கை காட்டுகிறார்.
இது தெரிந்து என்ன பயன்? பெயிலாயிட்டு இப்படை சப்பை கட்டு கட்டுகிறேன்
ஆழ்ந்துக் கலந்து
*அமிழ்தம்* படைத்து
அவையோர் அருந்த
அரும்பணிச் செய்து
திறன்மிகு கலைஞர்
தீட்டியப் புதிர்
தீஞ்சுவைக் கொண்டது!
ரவி சுந்தரம் லாஜிக் மிகவும் சரியானது.