Skip to main content

உதிரிவெடி 4000

*************************************
* உதிரிவெடி 4000  (மார்ச் 8, 2020)   *
*************************************
வாஞ்சிநாதன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
         
பெண்கள் சட்டங்கள் செய்ய வந்தனர் என்று எழுதியது உலகிலே மிகவும் அழகானவளா? (5)


Comments

Chittanandam said…
இன்று மிகவும் சிறப்பான நாள். இன்று வாஞ்சியாரின் 4000-வது புதிர் வெளிவந்துள்ளது. 4000 புதிர்கள் அமைப்பது என்பது மிகவும் அசாத்தியமானதொன்று.

அனைத்துப் புதிர்களுமே ஒன்றையொன்று சளைத்ததல்ல.
இப்புதிர்களை அமைப்பதற்கு எல்லையற்ற கற்பனை வளமும், தமிழ்ச் சொல்லாற்றலும் வேண்டும். இவை வாஞ்சியாரிடம் பொதிந்துள்ளது.

அவருக்கு எனது மனமுவந்த பாராட்டுகள்.
Nathan NT said…
உண்மை, எங்கள் ஒவ்வொரு நாளும் தீபாவளி ஆனது வாஞ்சிநாதன் உதிரி வெடியால் தான்!
Vanchinathan said…
நன்றி சித்தானந்தம் அவர்களே. சொற்களில் அவ்வளவு அழகு ஏற்கனவே ஒளிந்திருப்பதைப்
பலர் கதை கவிதைகளில் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அதையே நான் மறு சுழற்சி செய்கிறேன்.
Ambika said…
மிக அருமையான புதிர்! 4000 திவ்ய புதிர்கள்!!!
Anonymous said…
வாஞ்சியாழ்வாரின் நாலாயிர திவ்ய பிரபந்தம்?
RKE said…
Appropriate for International Women's Day today
நாலாயிரம்! பாராட்டுக்கள் !!!
Nagarajan said…
வாவ். 4000... அருமை... பாராட்டுக்கள்-ங்க வாஞ்சி.
Joseph said…
மிகவும் சிறந்த சாதனை. பாராட்டுகள்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.