Skip to main content

உதிரிவெடி 3286

உதிரிவெடி 3286 (23/04/2018)
வாஞ்சிநாதன்
*******************
உதிரிவெடியின் பிறந்த நாளான இன்று முதல் நாள் வீசப்பட்ட வெடியை மீண்டும் கொளுத்திப் போடுகிறேன். அன்று 20 உறுப்பினர்கள்தான் இருந்ததால் புதியவர்களுக்காக  இது:

சுழி தொடர்ந்த சுடர் படர்ந்த கொடி எதனோடும் சேராத் தனி (3)

சரி இன்றைய வெடி

தோண்டுபவர் அவர்  கால் வெட்டிப் புதைத்தார் சிதைத்தார் வாழ்க (5)




Comments

Unknown said…
Congratulations sir on the first year anniversary. Thanks for entertaining us with your amazing puzzles. நன்றி.
Dear Mr Vanchinathan,
Happy anniversary to all.
It has been an exciting experience.
Thanks for making people like me again a student of Tamil.
Regards,
KSabapathy
Unknown said…
உங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்
முதல் உதிரி வெடி வந்தபோது நான் அந்த குழுவில் இல்லை. இப்போதுதான் பார்க்கிறேன். ஒழுங்கா முறையா பிள்ளையார் சுழி போட்டுத்தான் தொடங்கி இருக்கிறார். நிறைய தமிழ் படங்களில் சாமி படத்துக்கு சூடம் காட்டறதுதான் முதல் காட்சியா இருக்கும். அது போலவோ?
Vanchinathan said…

சுழி மட்டுமா போட்டிருக்கு, மங்கலகரமாக சுடரும்தான்!
ஆமாம்! விளக்கும் சுடரும் இருந்தும் பாக்காம விட்டுட்டேனே!

Ambika said…
அன்று சரியான விடை அளித்தது நான் மட்டும் தான் :)
Sundar said…
இருபது பேரில் தொடங்கி, உதிரிவெடி குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்குள் ஏறக்குறைய இருநூறு விசிறிகள் என்று ஞாபகம். இரண்டாம் வயதை எட்டும்போது விசிறிகளின் எண்ணிக்கை இன்னும் பத்து மடங்கு உயர்ந்து இரண்டாயிரமாக வளர வாழ்த்துக்கள்!! :-)
பிள்ளையார் சுழி மட்டுமில்லை, விடையை கண்ணெதிரே வைத்து தலையை சுற்ற வைத்த திறன்! ஒரு நாள் ஆகிவிட்டது, எனவே விடையை சொல்லலாம். முதல் உதிரி வெடியின் விடை: உதிரி.
Raji said…
அட ராமா!! யோசிச்சு யோசிச்சு மண்டை இடி தான்.... கை புண்ணுக்கு கண்ணாடி தேடினா மாறி.....🙏🙏🙏🙏
Vanchinathan said…
ஆமாம். அந்த சமயம் புதிருக்கு ஒரு வாட்சப் குழு ஆரம்பிப்பது என்று தீர்மானித்தவுடன் நல்ல பெயர் தேடினேன். அதுவரை முழுக்கட்டவலையில் போட்டதற்கு மாறாக, ஒற்றை ஒற்றையாய்ப் புதிர் என்பதல் பொருத்தமாய் "உதிரிவெடி" என்று குழுவுக்குப் பெயரும் வைத்துவிட்டேன். முதல்நாள் நல்லதாக வெடி வேண்டும் என்று யோசித்தபோது அதையே புதிராக்கினாலென்ன என்று தோன்றியது.
Raji said…
கல்கியின் பரம விசிறி நான். அவர் எழுதிய "சிவகாமியின் சபதம்" புத்தகத்தில் , மஹேந்திரவர்ம பல்லவர் அன்றைய மாமல்லபுரத்தில், ஒவ்வொரு பாறையிலும் ஒரு சிற்பத்தை பார்த்தார் என்று கல்கி சிலாகித்து எழுதி இருப்பார். "பார்த்திபன் கனவு " புத்தகத்தில் நரசிம்மபல்லவர் ஒரு மொட்டை பாறையை ஓடக்கார பொன்னனுக்கு காமித்து அதில் என்ன சிற்பங்கள் எல்லாம் தெரிகிறது என்று சொல்லுவார். நமக்கு மொட்டையாக தெரிவது, இவருக்கு எப்படி சிற்பமாக தெரிகிறது என்று கல்கியும் நம்மோடு சேர்ந்து வியந்து , நம்மை வியக்கவும் வைப்பார்.

இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், நமக்கு வெறும் ஒரு சொல்லாக தெரிவது, இவருக்கு பல சொற்களாக தெரிகின்றன. அந்த சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவையே இல்லை என்று என்னும்போதே , அதை வைத்து ஒரு வாக்கியம் அமைத்து விடுகிறார். அந்த வாக்கியமும் ஒரு தனி அர்த்தத்தை தருகிறது. இலக்கணம், செய்யுள், கர்நாடக ராகம், மஹாபாரதம், பழைய கருப்பு வெள்ளை படம் , அபூர்வ மலர்கள், செடி இவை எல்லாவற்றையும் கலந்து சில சமயம் ஸ்டான்போர்ட் கணித மேதைகளும் , தமிழ் பேராசிரியர்களும் கூடி நம்மை யோசிக்க வைக்கிறார்கள்.

அல்லியிடம் பொலிவு குறைய டக்டக் டக்டக் , ஊர் கண்டித்த முதல் குற்றம், குருவம்சம் ஒன்றுகூடி அழகியை எதிர்த்து , வெளிறிய/வெளியேரிய
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நான் குழுவில் சேர்ந்த அன்று, பூம்புகார் வணிகர் கையில் இருப்பது என்ற புதிர். கரும்புள் என்பது தான் விடை. அன்று 5-6 பேர் தான் விடை சரியாக சொல்லி இருந்தார்கள். கரும்புள் என்ற வார்த்தையில் க,கரு,கரும்,கரும்பு,கரும்புள் என ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு என்று சொன்ன போது, "அட! நம்ம தமிழ்" என்று குதூகலிக்க தோன்றியது.

முன்னாடியும் தமிழ் பிடிக்கும். ஆனா இப்போ எல்லாம் ரொம்ப பிடிக்கறது, அதற்க்கு கட்டாயம் வாஞ்சி சாரோட உதிரிவெடி முக்கியமான காரணம். "கல்லிலே கலைவண்ணம் கண்டார்" போல "சொல்லிலே சொக்கப்பானை வைத்தார்" என்று சொன்னால் மிகை ஆகாது. மிக்க நன்றி சார்.
Vanchinathan said…
This comment has been removed by the author.
Vanchinathan said…
ராஜிஹரிஹரன் மகாபலிபுரம், மகேந்திரவர்மர் சிற்பம் என்றெல்லாம் சொல்லியதால் இதை எழுதும்படி ஆகிவிட்டது.

நேற்று கணிதம் பற்றி உரையாற்றும்போது எனக்குப் பிடித்த டென்னிஸ் துணுக்கை மேற்கோள் காட்டினேன்: (ஒரு சிற்பி வேலை செய்யும்போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்) டென்னிஸ் ஜோயியிடம் சொன்னது: ஜோயி, ஒரு குதிரை சிலை செய்ற‌து கஷ்டமே இல்லை. ஒரு பெரிய கல்லை எடுத்துக்கிட்டு எந்த எடமெல்லாம் குதிரை மாதிரி இல்லையோ அதெல்லாம் வெட்டி எடுத்துடணும் அவ்வளவுதான்.

அந்த வேலைதான் நான் செய்கிறேன். ஒரு வார்த்தையை எடுத்து அப்படி சரியா இல்லாததை வெட்டி எடுக்கிறேன். கொஞ்சம் மசாலா சேர்க்கிறேன்.
Nathan NT said…
எனக்கு ஒரு சந்தேகம் - ஆரம்பித்து ஒரே வருடத்தில் எப்படி 3200 எண்ணிக்கையை எட்டினோம்?
Vanchinathan said…
Reply is in the comments here: https://udhirivedi.blogspot.com/2018/04/blog-post_24.html

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.