Skip to main content

விடை 3268

இன்று (05/04/2018) காலை வெளியான வெடி
ரஷ்யத் தலைவரை அடியில் விழ வைத்த நாடு (4)
இதற்கான  விடை: பாரதம் = ர +  பாதம்

டிரம்ப் ஆளும் அமெரிக்காவாலோ,  நச்சுப் பொருளை சாலிஸ்பரியில் வீசிக் கொலை முயற்சி செய்தார் என்று கூறிய இங்கிலாந்தாலோ   விளாதிமிர் புடினை அடி பணிய வைக்க முடியவில்லை. என்னவோ புதிரில் அவரைத் தந்திரமாகக் கவிழ்த்திடலாம்.

இதைத்தான் திருவள்ளுவர் தீர்க்கதரிசனமாக அன்றே கூறினார்:

எதிரி ஒருவன் எவர்க்கும் வணங்கான்
புதிரில்  புரட்டல் தலை  (அதிகாரம்: 134: பகையடக்கல், குறள் எண்: 1334)

விளாசி அடிப்பினும் வீழாதாம் தென்னை
விழாத்திமிர் வேர்வெட்ட போம் (அதிகாரம்: 134: பகையடக்கல், குறள் எண்: 1339 )

பரிமேலழகர்  உரை: சாட்டையால் பலமுறை விளாசி அடித்தாலும் தென்னை மரம் விழாமல் திமிரோடு நிற்கும். ஆனால் வேரினை வெட்டினால் சாய்ந்துவிடும்.

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (33):

1) 6:01:53 ராமராவ்
2) 6:02:17 எஸ்.பார்த்தசாரதி
3) 6:04:09 கி. பாலசுப்ரமணியன்
4) 6:06:09 ரா. ரவிஷங்கர்..
5) 6:07:25 ராஜா ரங்கராஜன்
6) 6:07:58 விஜயா ரவிஷங்கர்
7) 6:07:59 மீனாக்ஷி கணபதி
8) 6:11:49 ஶ்ரீவிநா
9) 6:14:57 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 6:15:32 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:19:50 கேசவன்
12) 6:20:06 ரவி சுப்ரமணியன்
13) 6:25:16 தி பாெ இராமநாதன்
14) 6:28:18 முத்துசுப்ரமண்யம்
15) 6:30:16 ரவி சுந்தரம்
16) 6:36:25 நாதன் நா தோ
17) 6:44:27 சுந்தர் வேதாந்தம்
18) 6:55:06 ரமணி பாலகிருஷ்ணன்
19) 6:56:01 எஸ் பி சுரேஷ்
20) 7:10:45 சித்தன்
21) 7:18:14 வி ன் கிருஷ்ணன்
22) 7:22:36 அம்பிகா
23) 7:25:40 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
24) 7:43:29 மு க பாரதி
25) 9:33:53 சுபா ஸ்ரீநிவாசன்
26) 9:43:39 ரங்கராஜன் யமுனாச்சாரி
27) 10:19:11 மீ பாலு
28) 11:20:04 மீனாக்ஷி
29) 14:40:57 மைத்ரேயி சிவகுமார்
30) 17:43:49 ஆர்.நாராயணன்.
31) 20:29:28 வேதாந்தம்
32) 20:30:08 பத்மாசனி
33) 20:33:06 ராஜி ஹரிஹரன்
************************
Unknown said…
ரஷ்யத் தலைவர் என்று சொல்லித் தலையைக் குழப்பி விட்டிர்கள் :-)
புடின் கொண்ட ஒரு நாடு "புருன்டி"
சோ சாண்டியரின் அர்த்த சாஸ்திரம் ன்னு ஒரு சுலோகம் போட்டார் ஒவ்வொரு வாரமும் எங்கே பிராமணன் துக்ளக்கில் தொடர்கதையா வந்த பொது. அந்த சம்பவம் ஏனோ ஞாபகம் வருது ;-)
சாண்டில்யர்
Raji said…
நானும் புடின் லெனின் கோபர்சேவ் ஸ்டாலின் என்று ஊர் சுற்றி விட்டு பாரதம் வந்தடைந்தேன்.
Vanchinathan said…
@ ராஜி ஹரிஹரன்: இப்படி விசா இல்லாமல் பல ஊர்களைச் சுற்றிப் பார்க்கும்போது மாட்டினால் என்னால்தான் என்று என் தலையை உருட்டாமலிருந்தால் சரி.
Sundar said…
"கௌடில்யர்" என்று ஞாபகம். பின்னால் சோ அதைப்பற்றி எழுதும் வரை யாருக்கும் சந்தேகம் வரவில்லை! :-)
கௌடில்யர் தான், சாண்டில்யர் இல்லை. கொஞ்சம் கவன பிசகு.
இப்போ கூட யாருக்கும் சந்தேகம் வரவில்லை போல இருக்கு.
Muthu said…
கௌடில்யரையும் சாணக்கியரையும் கலந்து சாண்டில்யர் உருவானார்!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்