Skip to main content

விடை 3265

இன்று (02/04/2018) காலை வெளியான வெடி
மெழுகு உள்ளே வர மஞ்சளாய் மலரும் மரம் (4)
இதற்கான விடை:  பூவரசு = பூசு + வர ; பூசு = மெழுகு (வினைச் சொல்லாய்)

அரசமரத்தின் இலைகளைபோன்ற அமைப்புடன் ஆனால் அழகான மஞ்சள் நிறப் பூக்கள் கொண்டதால் இம்மரம் பூவரசு என்று சொல்லப்படுகிறது.
சிறுவயதில் கிராமத்திற்கு விடுமுறைகளில் சித்தப்பா வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் கொல்லைப் பக்கத்தில் இதன் இலைகளைப் பறித்து ஊதல் செய்து விளையாடுவோம்.

விசேஷம் வந்தால் அக்கா, அண்ணி எல்லாம் எங்களையெல்லாம் கூப்பிட்டு  தம்பிகளா நெறைய பூவரச எலை பறிச்சிட்டு வாங்கப்பா கொழுக்கட்டை சுடுவோம் என்று சொல்லுவோர்கள். அதிக உயரமில்லாத மரமாதலால்  எளிதில் பறித்துவிடுவோம். ஒவ்வொரு இலையிலும் எள்ளு பூரணமும் பருப்பு பூரணமும் வைத்து மடித்து இட்லிப்பானையில் வேக வைத்து கொழுக்கட்டையை சுடுவார்கள். பச்சையான இலை வெந்தபின் திட்டுதிட்டாய் சாம்பல் நிறமாகி  அதைப் பிரித்து நாங்களும் ஆவலாய் இலை வாசனை கொண்ட கொழுக்கட்டையைச் சாப்பிடுவோம்.

 நான் பணிபுரியும் பல்கலைக் கழக வளாகத்தில் பூவரச மரம்.

பின்வரும் காணொளியில் முதல் 10-12 வினாடிகள் அழகான நிறத்தில் பார்க்கலாம்:  https://www.youtube.com/watch?v=3FQWrc80nL0

மற்ற பூக்களைவிட இதில் வித்தியாசமான குணம் ஒன்று. வாடும்போது அதன் மஞ்சள் தன்மை குறைந்து சிவக்க ஆரம்பித்து இன்னமும் அழகாகி  சில நாட்கள் மரத்தில் இருந்த பின்தான் உதிரும்! 

இப்படிப்பட்டப்  பூவரசை வியந்து ஓர் அறுசீர் ஆசிரிய விருத்தம் (டக்கு டக்கு கடிகாரம் என்ற அழ. வள்ளியப்பாவின் பாப்பாப் பாட்டு நினைவிருக்கிறதா? அதே சந்தத்தில்)

புசித்து மகிழுங் கொழுக்கட்டைப்
        பூரணந் தாங்கத் தந்திடுவாய்
பசிய இலைகள் நடுவினிலே
        பார்த்துச் சிரிக்கும் மஞ்சட்பூ
வசியம் செய்து  கவர்ந்திடுமே
        வாடிய போதும் பொலிவுறுமே
ஒசிந்து கவிழ்ந்து செவ்விதழால்
        உலகை மயக்கும் வனப்புடையாய்




( வாடிய பூவரசம்பூ! இந்த படம் வலையில் சுட்டது).







Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (37):

1) 6:02:30 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:42 மீனாக்ஷி கணபதி
3) 6:04:29 ராமராவ்
4) 6:06:00 ரமணி பாலகிருஷ்ணன்
5) 6:08:54 சாந்திநாராயணன்
6) 6:13:17 இரா.செகு
7) 6:13:54 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8) 6:16:43 சுபா ஸ்ரீநிவாசன்
9) 6:17:12 கி. பாலசுப்ரமணியன்
10) 6:17:50 சங்கரசுப்பிரமணியன்
11) 6:23:47 வி ன் கிருஷ்ணன்
12) 6:25:02 ரவி சுப்ரமணியன்
13) 6:28:30 மு.க.இராகவன்.
14) 6:33:22 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 6:36:00 லக்ஷ்மி ஷங்கர்
16) 6:44:43 லக்ஷ்மி ஷங்கர்
17) 6:45:07 பானுமதி
18) 6:45:51 முத்துசுப்ரமண்யம்
19) 6:50:52 கு.கனகசபாபதி, மும்பை
20) 6:59:21 லட்சுமி மீனாட்சி
21) 7:39:28 மைத்ரேயி சிவகுமார்
22) 7:41:58 ராஜி ஹரிஹரன்
23) 7:54:39 Thi Po Ramanathan
24) 7:56:58 கேசவன்
25) 8:46:08 ராஜா ரங்கராஜன்
26) 8:56:39 சதீஷ்பாலமுருகன்
27) 9:19:34 அம்பிகா
28) 9:25:54 மீனாக்ஷி
29) 10:33:58 விஜயா ரவிஷங்கர்
30) 11:08:25 ஆர். பத்மா
31) 11:10:43 மீ பாலு
32) 12:11:27 நங்கநல்லூர் சித்தானந்தம்
33) 14:54:50 மீ கண்ணன்
34) 15:01:00 சித்தன்
35) 16:15:50 கோவிந்தராஜன்
36) 17:41:30 வானதி
37) 20:34:37 ரா. ரவிஷங்கர்
************************
பூவரசங்காயை ஒரு ஈர்க்குச்சியில் செருகி பம்பரம் ஆக்கலாம்
விளையாடலாம் --ஹி ஹி
எங்கள் கிராமத்து வீட்டின் பின்புறம் வாய்க்கால் ஓரத்தில் வரிசையாக பூவரச மரங்கள் நாளைக்கு ஒரு நிறமாக பூக்களை பார்ப்பது கண் கொள்ளாக்காட்சி.

https://plus.google.com/115856975959973507894/posts/JCGmzv1jv2W

இளமை ஞாபகங்கள் பற்றிய பாட்டில் இப்பம்பரம் இடம்பெற்றுள்ளது

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்