Skip to main content

விடை 3269

இன்று (06/04/2018) காலை வெளியான வெடி

இவ்விடத்திலிருக்காத பேருந்து பாதி போன நாடு ஒன்று (6)
இதற்கான விடை: இங்கிலாந்து = இங்கு + இலா +   (பேரு) ந்து

பாரதியார் சிங்களத் தீவுக்கோர் பாலம் அமைப்போம் என்றார். நம் புதிருலகில் பல படிகள் மேலே சென்று தொலைவிலுள்ள இங்கிலாந்து தீவுக்கு ஒரு, இல்லை, அரைப் பேருந்தையே போக விட்டோம். இப்பேருந்து ஏர்பஸ் வகையென்பதால் பாலமே தேவையில்லை.

இதைத்தான் அன்றே சொன்னான் வள்ளுவன்:

எண்ணி நடக்காத(து)   ஏதுமிலை பேருந்தில்
கண்ணயர்ந்தால் இங்கிலாந்து காண்

(அதிகாரம்: 135: பிறன்நாடு விழைதல்,  குறள்: 1342)

நரிமேற்கிழார் உரை:

 நம் மனம் தீவிரமாக ஒன்றை விழைந்தால் அதை அடைவதை  எதுவும் தடுக்க முடியாது.  பெரிய உந்து சக்தி (பேருந்து) இருக்கையில் கண்மூடி தியானித்தால்    இங்கிலாத, அதாவது பூவுலகில் இல்லாத, மேலுலகில் உள்ளோரைக் காணலாம்.  கண்மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடும்போது காரியம் கைகூடும்.   (குறிப்பு: கண்ணயர்ந்தால் என்பதைத் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்று சில உரையாசிரியர்கள் சொல்வது பொருந்தாது.  வள்ளுவப் பெருந்தகை, உலகை ஆழ்ந்து நோக்கிய அவர் இத்தகைய நகைப்புக்கிடமான விஷயத்தைக் கூறுவாரா?  கண்மூடி தியானத்தில் இருக்கும்போது என்று பொருள் கொள்வதே  சாலச் சிறந்தது. )

Comments

Ambika said…
This comment has been removed by the author.
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (61):

1) 6:01:20 லட்சுமி சங்கர்
2) 6:02:50 முத்துசுப்ரமண்யம்
3) 6:02:51 எஸ்.பார்த்தசாரதி
4) 6:03:29 ராமராவ்
5) 6:03:51 கேசவன்
6) 6:04:50 எஸ் பி சுரேஷ்
7) 6:05:24 சங்கரசுப்பிரமணியன்
8) 6:05:56 ரா. ரவிஷங்கர்..
9) 6:07:34 கி. பாலசுப்ரமணியன்
10) 6:11:28 கு.கனகசபாபதி , மும்பை
11) 6:13:06 ரரங்கராஜன் யமுனாச்சாரி
12) 6:14:21 ஶ்ரீவிநா
13) 6:49:44 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 6:56:25 மு.க.இராகவன்.
15) 6:58:27 அம்பிகா
16) 7:02:54 மைத்ரேயி சிவகுமார்
17) 7:04:03 லதா
18) 7:05:05 சுபா ஸ்ரீநிவாசன்
19) 7:05:27 சித்தன்
20) 7:09:26 வி ன் கிருஷ்ணன்
21) 7:10:19 ரவி சுந்தரம்
22) 7:10:36 சுந்தர் வேதாந்தம்
23) 7:10:51 ருக்மணி கோபாலன்
24) 7:15:15 விஜயா ரவிஷங்கர்
25) 7:17:00 இரா.செகு
26) 7:18:41 சதீஷ்பாலமுருகன்
27) 7:19:11 ஏ.டி.வேதாந்தம்
28) 7:19:39 பத்மாசனி
29) 7:20:53 ஆர். பத்மா
30) 7:23:07 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
31) 7:24:09 ராஜா ரங்கராஜன்
32) 7:24:46 வீ.ஆர் பாலகிருஷ்ணன்
33) 7:25:12 வானதி
34) 7:28:19 வி சீ சந்திரமௌலி
35) 7:28:21 ஆர்.நாராயணன்.
36) 7:29:05 லக்ஷ்மி ஷங்கர்
37) 7:31:21 கோவிந்தராஜன்
38) 7:33:27 மீனாக்ஷி கணபதி
39) 7:39:02 லட்சுமி மீனாட்சி
40) 7:42:52 ரமணி பாலகிருஷ்ணன்
41) 7:46:18 ரவி சுப்ரமணியன்
42) 7:46:43 நங்கநல்லூர் சித்தானந்தம்
43) 7:49:21 மீ பாலு
44) 8:00:07 பானுபாலு
45) 8:00:25 அனந்தா
46) 8:02:59 எஸ் பி சுரேஷ்
47) 8:40:21 பா நிரஞ்சன்
48) 8:43:21 மு க பாரதி
49) 9:14:09 மீனாக்ஷி
50) 9:21:24 நாதன் நா தோ
51) 10:04:28 ராதா தேசிகன்
52) 10:26:15 மீ கண்ணன்
53) 10:56:47 பானுமதி
54) 11:48:25 தி பாெ இராமநாதன்
55) 11:58:18 வித்யா ஹரி
56) 12:29:20 ராஜி ஹரிஹரன்
57) 14:25:12 கல்பனா
58) 17:08:08 கல்யாணி தேசிகன்
59) 18:17:06 சாந்திநாராயணன்
60) 19:15:09 கே.ஆர்.சந்தானம்
61) 20:17:50 பாலா
************************
Sundar said…
அட..! இன்பத்துப்பாலின் இறுதியில் பகையடக்கல், பிறன்நாடு விழைதல் என்றெல்லாம் அதிகாரங்கள் ஒளிந்திருந்தது இதுவரை தெரியாமல் போய் விட்டதே! சபாஷ்!
Vanchinathan said…
தமிழ்த் தாத்தா உ வே சா பதிப்பிக்காமல் வைத்திருந்த ஓலைச் சுவடிகளில் கிளியனூர் திருக்குறள் என்று வைத்திருந்தார். கிளியனூரில் கிடைத்த மூலப்பிரதிகளில் 170 அதிகாரங்கள் இருந்தன. அதிலிருந்துதான் இங்கே வெளியிடுகிறேன்!
என்ன நூத்தி எழுபதே நூத்தி எழுபது தானா, இன்னும் அதிகம் இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
உரையாசிரியரும் திருவிளையாடல் செய்கிறார், பரி யை நரியாக்கிய சொக்கநாதர் போல.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்