Skip to main content

விடை 3273

இன்று (10/04/2018) காலை வெளியான வெடி:

இறுதிக் கட்டு நீக்கிய விடுதலை ஆட்டத்தில் அகத்திணை நாயகி (3)

இதற்கான விடை:  தலைவி   = விடுதலை - டு

பொருளதிகாரத்தில் அகப்பொருள் பற்றி பேசும்போது, பெயர் குறிப்பிடக் கூடாது என்று சொல்கிறது.   அதனால் தலைவன் தலைவி என்றே உரையாசிரியர்கள் பெயரின்றி எழுதிவார்கள்.

நல்ல வேளை மார்க் சுக்கர்பர்க் அல்லது  கூகிள் நிறுவத்தினர் போன்ற ஆசாமிகள் அகத்திணை நூல்களுக்கு உரையெழுதவில்லை. எழுதியிருந்தால் கூடவே, இது இவராயிருக்கும் என்று எழுதியிருப்பார்கள்.   தலைவனைப் பற்றிய  வர்ணனையிலிருந்து அவன் இப்படி இருப்பான் காவல் துறையினர் கொலையாளியைக் காண படம் வரைவது போன்று செய்திருப்பார்கள்.

 ஓடைக் கரையோரம் வேங்கை மரத்துக்குக் கீழ் பொழுது சாயும் நேரம் தலைவியைச் சந்தித்த  நூறு பேரில் 83 பேர்   அவளுக்கு கொடுக்காப்புளி  வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். நீங்களும் வாங்கிக் கொடுக்கிறீர்களா?  வாங்க விருப்பமென்றால்  வாய்க்காலில் ஒரு கல்லை எறியுங்கள்.  காத்திருக்கும் எங்கள் சேவகர்கள் வாய்க்காலின் அக்கரையிலிருந்து ஓடி வந்து ஒரு கூடை நிறைய தேர்ந்தெடுக்கப்பட்ட  சோடை போகாத கொடுக்கப்புளியை அளிப்பார்கள். ஒரு கூடை அரைக்க்கால் வராகன்தான். ஜி எஸ் டி தனி.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (51):

1) 6:01:47 ராமராவ்
2) 6:02:17 ரவி சுப்ரமணியன்
3) 6:03:25 கி. பாலசுப்ரமணியன்
4) 6:04:02 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 6:04:11 நாதன் நா தோ
6) 6:04:53 லட்சுமி சங்கர்
7) 6:04:55 ராதா தேசிகன்
8) 6:05:06 ரங்கராஜன் யமுனாச்சாரி
9) 6:06:14 வானதி
10) 6:06:55 மைத்ரேயி சிவகுமார்
11) 6:06:57 சங்கரசுப்பிரமணியன்
12) 6:09:49 மரு.ப. சந்திரமொளலி
13) 6:10:59 சுபா ஸ்ரீநிவாசன்
14) 6:15:29 கேசவன்
15) 6:15:44 எஸ்.பார்த்தசாரதி
16) 6:16:17 விஜயா ரவிஷங்கர்
17) 6:16:29 வி ன் கிருஷ்ணன்
18) 6:19:00 ரவிஷங்கர்
19) 6:20:32 ஆர்.நாராயணன்.
20) 6:21:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
21) 6:24:06 மு.க.இராகவன்.
22) 6:27:29 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
23) 6:29:14 கே.ஆர்.சந்தானம்
24) 6:29:57 எஸ் பி சுரேஷ்
25) 6:32:35 வித்யா ஹரி
26) 6:37:04 லதா
27) 6:38:14 மீனாக்ஷி கணபதி
28) 6:38:34 சுந்தர் வேதாந்தம்
29) 6:41:31 கல்பனா
30) 6:54:14 Thi Po Ramanathan
31) 6:56:44 சாந்திநாராயணன்
32) 6:59:05 மீ கண்ணன்
33) 7:03:15 சித்தன்
34) 7:07:17 ரவி சுந்தரம்
35) 7:07:37 ருக்மணி கோபாலன்
36) 7:09:04 கு.கனகசபாபதி , மும்பை
37) 7:24:23 அம்பிகா
38) 7:38:31 ராஜி ஹரிஹரன்
39) 8:15:32 செந்தில் சௌரிராஜன்
40) 9:32:35 ரமணி பாலகிருஷ்ணன்
41) 9:38:38 ராஜா ரங்கராஜன்
42) 9:51:47 கி மூ சுரேஷ்
43) 10:33:45 ஆர். பத்மா
44) 10:42:18 புவனா சிவராமன்
45) 10:44:23 சதீஷ்பாலமுருகன்
46) 16:40:01 பானுபாலு
47) 17:31:05 கல்யாணி தேசிகன்
48) 17:38:40 ஏ.டி.வேதாந்தம்
49) 17:39:13 பத்மாசனி
50) 18:02:14 கோவிந்தராஜன்
51) 19:23:20 பாலா
************************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்