Skip to main content

விடை 3279

இன்று காலை வெளியான வெடி:

 நூலின் தொடக்கத்தில் இருப்பது முழுமையடையாத பூண்டு (4)

முழுமையடையாத நூலின் தொடக்கத்தில் இருப்பது பூண்டு (4)


இதற்கான விடை:  அணிந்து. ஒரு நூலின் தொடக்கத்தின் இருப்பது அணிந்துரை, முழுதாக வராத போது அணிந்து அதாவது பூண்டு.

இந்த அணிந்துரை என்ற சொல் யாரோ அரைகுறை சென்ற நூற்றாண்டில் செய்ததாக இருக்கவேண்டும். முன்னுரை அல்லது முகவுரை சரி. வேறொருவர் அந்நூலைப் பற்றி எழுதுவதை
அணிந்துரை என்கிறார். அது அந்நூலுக்கு அணி போல் என்றால் அணியுரை என்றுதானிருக்க வேண்டும். நானும் எனக்குத் தெரிந்த பகுபத இலக்கணவிதிகளை எல்லாம் கொண்டு அலசினேன் எதற்கும் பொருந்தவில்லை. அணிந்துரை என்பது சரியென்றால், வாழ்த்துரை என்பதை வாழ்த்தியுரை என்று மாற்ற வேண்டும். இதே போல்தான் தூய்மை இந்தியா என்று அரசு விளம்பரத்தில் வருகிற‌து. தூய இந்தியா என்று ஏன் அதைச் சொல்ல மாட்டேனென்கிறார்கள்?
அவர்கள் இளமைப்பையனாக இருக்கும்போது, வெண்மை நிலவில் நனைந்து  இனிமைப் பண்டத்தை அதிகம் சாப்பிட்டு தனிமை மனிதனாக இருந்திருப்பார்களோ?

விடையளித்தவர்கள்:
  6:13:11        கி. பாலசுப்ரமணியன்      
  6:41:47        மீனாக்ஷி கணபதி   
  6:46:26        கே.ஆர்.சந்தானம்      
  7:05:53        ரவி சுப்ரமணியன்    
  7:16:33        எஸ் பி சுரேஷ்     
  7:20:31        எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்   
  10:50:33    லதா   
  11:09:01    வித்யா ஹரி   
  11:09:33    ரமணி பாலகிருஷ்ணன்    
  11:30:48    கேசவன்   
  12:38:10    வானதி   
  13:45:23    தி பொ இராமநாதன்   
  15:45:11    ஏ.டி.வேதாந்தம்   
  15:45:43    பத்மாசனி   
  15:47:19    அனுராதா ஜெயந்த்   
  16:09:43    சங்கரசுப்பிரமணியன்   
  17:00:36    சுந்தர் வேதாந்தம்    

Comments

Unknown said…
பூண்டு = அணிந்து என்று தெரிந்தும், புதிருடன் இணைக்கத் தெரியவில்லை.
புதிரை பாதியில் மாற்றினால் பார்த்துக்கொண்டே இருப்பர்களா என்ன?
மாற்று முன் இருந்த புதிருக்கு இது சரியான விடை இல்லை. முடியாத பூண்டு என்றால் "அணிந்து" முடியவில்லை என்று பொருள்படும்.
பூண்நூல் என்பது தர்க்க ரீதியாக சரியாகிறது. நூலுக்கு முன் முடியாத பூண்டு = பூண்
தயவு செய்து விதண்டாவாதம் என்று நினைக்க வேண்டாம்
Vanchinathan said…
சரிதான். தொடர்ந்து பார்ப்பது சாத்தியமில்லை. ஒரு திருத்தம். ஒருமுறை மாற்றினேன். எனக்கு தினமும்வாசகர்கள் மூன்று நான்கு பேராவது இரண்டு முறையோ மேலுமோ விடையை மாற்றி அனுப்புகிறார்கள்
The whole day, I was away in a meeting; returned only at about 9 pm. I did'nt have a chance to check again.
Unknown said…
அதே அதே ... சுபா பதே 🤣
I learnt in the process the significance of பூண்நூல். நன்றி
Muthu said…
<> அதாவது, அது துணிந்துரை (நூலைப் பற்றிய கருத்தைத் துணிவுடன் எழுதப்பட்ட உரை); அச்சுக் கோர்க்கும் பையன் அதை அணிந்துரை என்று படித்துக் கோர்த்து விட்டார்.
https://annaiyogacenter.wordpress.com/2016/09/14/%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-107/

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...