Skip to main content

விடை 3279

இன்று காலை வெளியான வெடி:

 நூலின் தொடக்கத்தில் இருப்பது முழுமையடையாத பூண்டு (4)

முழுமையடையாத நூலின் தொடக்கத்தில் இருப்பது பூண்டு (4)


இதற்கான விடை:  அணிந்து. ஒரு நூலின் தொடக்கத்தின் இருப்பது அணிந்துரை, முழுதாக வராத போது அணிந்து அதாவது பூண்டு.

இந்த அணிந்துரை என்ற சொல் யாரோ அரைகுறை சென்ற நூற்றாண்டில் செய்ததாக இருக்கவேண்டும். முன்னுரை அல்லது முகவுரை சரி. வேறொருவர் அந்நூலைப் பற்றி எழுதுவதை
அணிந்துரை என்கிறார். அது அந்நூலுக்கு அணி போல் என்றால் அணியுரை என்றுதானிருக்க வேண்டும். நானும் எனக்குத் தெரிந்த பகுபத இலக்கணவிதிகளை எல்லாம் கொண்டு அலசினேன் எதற்கும் பொருந்தவில்லை. அணிந்துரை என்பது சரியென்றால், வாழ்த்துரை என்பதை வாழ்த்தியுரை என்று மாற்ற வேண்டும். இதே போல்தான் தூய்மை இந்தியா என்று அரசு விளம்பரத்தில் வருகிற‌து. தூய இந்தியா என்று ஏன் அதைச் சொல்ல மாட்டேனென்கிறார்கள்?
அவர்கள் இளமைப்பையனாக இருக்கும்போது, வெண்மை நிலவில் நனைந்து  இனிமைப் பண்டத்தை அதிகம் சாப்பிட்டு தனிமை மனிதனாக இருந்திருப்பார்களோ?

விடையளித்தவர்கள்:
  6:13:11        கி. பாலசுப்ரமணியன்      
  6:41:47        மீனாக்ஷி கணபதி   
  6:46:26        கே.ஆர்.சந்தானம்      
  7:05:53        ரவி சுப்ரமணியன்    
  7:16:33        எஸ் பி சுரேஷ்     
  7:20:31        எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்   
  10:50:33    லதா   
  11:09:01    வித்யா ஹரி   
  11:09:33    ரமணி பாலகிருஷ்ணன்    
  11:30:48    கேசவன்   
  12:38:10    வானதி   
  13:45:23    தி பொ இராமநாதன்   
  15:45:11    ஏ.டி.வேதாந்தம்   
  15:45:43    பத்மாசனி   
  15:47:19    அனுராதா ஜெயந்த்   
  16:09:43    சங்கரசுப்பிரமணியன்   
  17:00:36    சுந்தர் வேதாந்தம்    

Comments

Unknown said…
பூண்டு = அணிந்து என்று தெரிந்தும், புதிருடன் இணைக்கத் தெரியவில்லை.
புதிரை பாதியில் மாற்றினால் பார்த்துக்கொண்டே இருப்பர்களா என்ன?
மாற்று முன் இருந்த புதிருக்கு இது சரியான விடை இல்லை. முடியாத பூண்டு என்றால் "அணிந்து" முடியவில்லை என்று பொருள்படும்.
பூண்நூல் என்பது தர்க்க ரீதியாக சரியாகிறது. நூலுக்கு முன் முடியாத பூண்டு = பூண்
தயவு செய்து விதண்டாவாதம் என்று நினைக்க வேண்டாம்
Vanchinathan said…
சரிதான். தொடர்ந்து பார்ப்பது சாத்தியமில்லை. ஒரு திருத்தம். ஒருமுறை மாற்றினேன். எனக்கு தினமும்வாசகர்கள் மூன்று நான்கு பேராவது இரண்டு முறையோ மேலுமோ விடையை மாற்றி அனுப்புகிறார்கள்
The whole day, I was away in a meeting; returned only at about 9 pm. I did'nt have a chance to check again.
Unknown said…
அதே அதே ... சுபா பதே 🤣
I learnt in the process the significance of பூண்நூல். நன்றி
Muthu said…
<> அதாவது, அது துணிந்துரை (நூலைப் பற்றிய கருத்தைத் துணிவுடன் எழுதப்பட்ட உரை); அச்சுக் கோர்க்கும் பையன் அதை அணிந்துரை என்று படித்துக் கோர்த்து விட்டார்.
https://annaiyogacenter.wordpress.com/2016/09/14/%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-107/

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்