Skip to main content

விடை 3279

இன்று காலை வெளியான வெடி:

 நூலின் தொடக்கத்தில் இருப்பது முழுமையடையாத பூண்டு (4)

முழுமையடையாத நூலின் தொடக்கத்தில் இருப்பது பூண்டு (4)


இதற்கான விடை:  அணிந்து. ஒரு நூலின் தொடக்கத்தின் இருப்பது அணிந்துரை, முழுதாக வராத போது அணிந்து அதாவது பூண்டு.

இந்த அணிந்துரை என்ற சொல் யாரோ அரைகுறை சென்ற நூற்றாண்டில் செய்ததாக இருக்கவேண்டும். முன்னுரை அல்லது முகவுரை சரி. வேறொருவர் அந்நூலைப் பற்றி எழுதுவதை
அணிந்துரை என்கிறார். அது அந்நூலுக்கு அணி போல் என்றால் அணியுரை என்றுதானிருக்க வேண்டும். நானும் எனக்குத் தெரிந்த பகுபத இலக்கணவிதிகளை எல்லாம் கொண்டு அலசினேன் எதற்கும் பொருந்தவில்லை. அணிந்துரை என்பது சரியென்றால், வாழ்த்துரை என்பதை வாழ்த்தியுரை என்று மாற்ற வேண்டும். இதே போல்தான் தூய்மை இந்தியா என்று அரசு விளம்பரத்தில் வருகிற‌து. தூய இந்தியா என்று ஏன் அதைச் சொல்ல மாட்டேனென்கிறார்கள்?
அவர்கள் இளமைப்பையனாக இருக்கும்போது, வெண்மை நிலவில் நனைந்து  இனிமைப் பண்டத்தை அதிகம் சாப்பிட்டு தனிமை மனிதனாக இருந்திருப்பார்களோ?

விடையளித்தவர்கள்:
  6:13:11        கி. பாலசுப்ரமணியன்      
  6:41:47        மீனாக்ஷி கணபதி   
  6:46:26        கே.ஆர்.சந்தானம்      
  7:05:53        ரவி சுப்ரமணியன்    
  7:16:33        எஸ் பி சுரேஷ்     
  7:20:31        எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்   
  10:50:33    லதா   
  11:09:01    வித்யா ஹரி   
  11:09:33    ரமணி பாலகிருஷ்ணன்    
  11:30:48    கேசவன்   
  12:38:10    வானதி   
  13:45:23    தி பொ இராமநாதன்   
  15:45:11    ஏ.டி.வேதாந்தம்   
  15:45:43    பத்மாசனி   
  15:47:19    அனுராதா ஜெயந்த்   
  16:09:43    சங்கரசுப்பிரமணியன்   
  17:00:36    சுந்தர் வேதாந்தம்    

Comments

Unknown said…
பூண்டு = அணிந்து என்று தெரிந்தும், புதிருடன் இணைக்கத் தெரியவில்லை.
புதிரை பாதியில் மாற்றினால் பார்த்துக்கொண்டே இருப்பர்களா என்ன?
மாற்று முன் இருந்த புதிருக்கு இது சரியான விடை இல்லை. முடியாத பூண்டு என்றால் "அணிந்து" முடியவில்லை என்று பொருள்படும்.
பூண்நூல் என்பது தர்க்க ரீதியாக சரியாகிறது. நூலுக்கு முன் முடியாத பூண்டு = பூண்
தயவு செய்து விதண்டாவாதம் என்று நினைக்க வேண்டாம்
Vanchinathan said…
சரிதான். தொடர்ந்து பார்ப்பது சாத்தியமில்லை. ஒரு திருத்தம். ஒருமுறை மாற்றினேன். எனக்கு தினமும்வாசகர்கள் மூன்று நான்கு பேராவது இரண்டு முறையோ மேலுமோ விடையை மாற்றி அனுப்புகிறார்கள்
The whole day, I was away in a meeting; returned only at about 9 pm. I did'nt have a chance to check again.
Unknown said…
அதே அதே ... சுபா பதே 🤣
I learnt in the process the significance of பூண்நூல். நன்றி
Muthu said…
<> அதாவது, அது துணிந்துரை (நூலைப் பற்றிய கருத்தைத் துணிவுடன் எழுதப்பட்ட உரை); அச்சுக் கோர்க்கும் பையன் அதை அணிந்துரை என்று படித்துக் கோர்த்து விட்டார்.
https://annaiyogacenter.wordpress.com/2016/09/14/%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-107/

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.