Skip to main content

அனந்தத்தை அறிந்தவன் (ராமானுஜன்)

ராபர்ட் கனிகல் (www.robertkanigel.com) என்ற  அமெரிக்கர் விஞ்ஞானியில்லை, அவர் ஓர் எழுத்தாளர்.  பல ஆய்வுகள் செய்து அறிவியல் தொடர்பான செய்திகள் கொண்ட புத்தகங்கள் பல எழுதியுள்ளார்.

இந்தியாவின் கணித மேதை ராமனுஜன் சரிதையை  1991ல் அவர்  The Man Who Knew Infinity   என்ற  400 பக்கங்களுக்கும் மேற்பட்ட நூலாக  எழுதினார். அது  பிரெஞ்சு, ஜெர்மனி, இதாலி, கொரியா, ஜப்பான், சீனா,  தாய்லாந்து நாட்டினர்  மொழிகளில் மொழிபெயர்த்து பெரிதும் போற்றப்பட்டது.  (இரண்டாண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் திரைப்படமாகவும் வந்தது).





ஐந்து வருடங்களுக்கு முன் இந்திய மொழிகள் பத்திலாவது (அஸ்ஸாமி, ஒதிஷா, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்கம் , தமிழ் ...) மொழிபெயர்க்கப்பட்டது.

தமிழாக்கம் செய்யும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. எல்லா மொழிகளிலும் நேஷனல் புக் ட்ரஸ்ட் என்னும் அரசு நிறுவனத்தால்  வெளியிடப்பட்டது.
இப்போது பச்சையப்பன் கல்லூரி எதிரேயுள்ள பள்ளியில் நடை பெற்று வரும்   சென்னைப் புத்தக்கக் கண்காட்சியில் அதை வாங்கலாம்.

கடை எண் 207,208. ஜனவரி 22 வரை.


முதல் அத்தியாயத்தின் முதற்பக்கம் இதோ:




அந்த மொழிபெயர்ப்பின் முகவுரையில் எழுதிய அகவற்பாவை இங்கே அளிக்கிறேன்:

காவிரி யாற்றின் கரையூர் இளைஞன்
ஏவிய கேள்விக் கணைகள் யாவும்
ஆவியை உலுக்க அறிஞர் திணறிடும்
தாவிப் பாய்ந்திடும் அறிவின் வீச்சாம்
நாவினில் எழுதினாள் நாமகிரித் தாயென
சேவித் துரைத்த சீரியோன் சரிதை
தூவிய நிகழ்ச்சித் தொகுப்பென இன்றிக்
காவியச் சுவையொடு  கதையாய்க் கோத்து
மேலை நாட்டோர் மெச்சிடச் செய்த
நூலைத் தமிழில் நுகர்வோம் வாரீர்

Comments

Raghavan MK said…

அனந்தத்தை அறிந்தவன் (ராமனுஜன்)

ஒர் அரிய பொக்கிஷத்தை மொழிபெயர்க்க தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, ஒரு வரப்பிரசாதம்!

முதல் பக்கம் படித்தேன்.
காவிரிக்கரையின் எழிலை கண் முண்ணே கொணர்ந்து நிறுத்தியுள்ளீர்.

ஒரு கணிதப்பேராசியரால் இப்படியும் எழுதமுடியுமா என ஆச்சரியடைந்தேன்!
தங்கள் தமிழ்நடை, மற்றும் அகவற்பா நன்கு போற்றுதற்குரிய வகையில், இயல்பாகவும் உள்ளது!

உதிரிவெடியைத் தவிர்த்து, தங்களின் மற்றுமொறு ஆற்றலைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.

வாழ்க! வளர்க!

வாழ்த்துக்கள்!
Sundar said…
சென்ற வருடம் இரு வேறு நண்பர்களின் தயவில் இந்தப்புத்தகத்தின் ஆங்கிலம் (The Man Who Knew Infinity) மற்றும் தமிழ் (அனந்தத்தை அறிந்தவன்) பிரதிகள் எனக்கு இலவசமாகவே கிடைத்து விட்டன. முன்பே புத்தகத்தின் தலைப்பையே பெயராகக் கொண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படத்தை பார்த்துவிட்டேன் என்பதால், முதலில் கிடைத்த ஆங்கிலப் புத்தகத்தை அப்புறம் படிக்கலாம் என்று படிப்பதற்கு எடுத்து வைத்திருக்கும் புத்தக வரிசையில் பின்னால் எங்கேயோ செருகி வைத்திருந்தேன். ஆனால் வாஞ்சியின் தமிழ் வடிவாக்கம் கிடைத்த உடன் புத்தகத்தின் தலைப்பில் தெரியும் வாஞ்சியின் குறுக்கெழுத்து சுருக்கத்திறமையே என்னை கிரங்க அடித்தது. உடனே புத்தகத்தை வரிசையின் முன்னுக்கு நகர்த்தி விட்டேன். :-)

புதினங்களைப் படிப்பதைக்குறைத்து கொஞ்ச வருடங்கள் ஆகி விட்டதால், தமிழில் உருப்படியான நல்ல புத்தகம் ஒன்றைப் படித்து நிறைய வருடங்கள் ஆகி விட்டது என்பது ஒரு சங்கடப்படுத்தும் உண்மை. எனவே வாஞ்சியின் தமிழை நிறையவே சுவைத்துக்கொண்டிருக்கிறேன். திரைப்படத்தில் வெட்டப்பட்டுவிட்ட நிறைய விஷயங்கள் புத்தகத்தில் இருப்பதால், படத்தைப் பார்த்து விட்டதால் புத்தகத்தை படிக்க வேண்டாம் என்று நினைப்பது தவறு. இன்னும் ஓரிரு பிரதிகளாவது வாங்கி என் குடும்பத்தினரையும் நண்பர்களையும் இந்நூலைப் படிக்க ஊக்குவிக்க முயற்சிக்கிறேன். தமிழில் இப்படிப்பட்ட தரமான புதினங்கள்ளலாத புத்தகங்களை வெளிக்கொணருவது அவ்வளவு சுலபமல்ல. வாஞ்சியில் இருந்து ஆரம்பித்து தமிழில் இந்த நூலைப் பதிப்பிக்க காரணமாய் இருந்த அத்தனை உள்ளங்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் நன்றி.

-சுந்தர் வேதாந்தம்.
Raji said…
Vanchi Sir, Solla vaarthaigale illai. Didn't know you have translated the book.
Really feeling blessed sir. Will send you a detailed message after reading the book!
ஆரியத்தமிழன் said…
வணக்கம் , தங்கள் மொழிபெயர்பு அனந்தத்தை அறிந்தவன் இப்போது கிடைக்கிறதா? நேஷனல் புக் டிரஸ்ட்டில் ? தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்
ஆரியத்தமிழன் said…
aariyaththamizhan@gmail.com

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.