Skip to main content

போகிக்கான குறள் புதிர் விடை இதோ



இன்று போகி விசேஷத்திற்கான இலவச வெடி, குறளாக அமைக்க வேண்டும்   என்று வலிந்து  செய்ததால் இயல்பான புதிரின் சுருக்கம் இருக்காது.

எரித்த கரியில் எழுந்தாடும் காற்றில்
முறித்துண்பது கையில் முடி (5)


இதன் விடை:  கரும்புகை.
முதல் வரியை  "எரித்த கரியில் எழுந்து காற்றில் ஆடும்" என்று சற்றே மாற்றி அமைத்துக் கொண்டால்
"கரும்புகை" என்பது தெளிவாகும்.
இச்சொல்லையே கரும்பு + கை என்று முறித்தால் இரண்டாம் அடிக்கு விளக்கமாகும்.

கரும்புகை ஏந்தி கடித்ததன் சாறுண்டு
கரும்புள்ளைக் கூவிக் கவளங்கள் ஈந்து
கரும்புகை தோன்றிடக் கந்தலைத்தீக் கிட்டோர்க்
கரும்பும் அகத்தில்  களிப்பு


சுயமாக எழுதிய கோனார் உரை:
முதலடியின் கரும்பு  முறித்துத் தின்பது.
இரண்டாமடியின் கரும்பு (கரும்புள்) கரிய பறவையான காகம்.  விசேஷ நாட்களில்  மனிதர்கள் கூவியழைத்து காக்கைக்கு  உணவிடுவதைச் சொல்கிறது.
மூன்றாமடியில் இருக்கும் கரும்பு  (கரும்புகை) போகிக்கு எரிக்கும் போது தோன்றும்  கரிய புகை மண்டலத்தைக் குறிக்கிறது.

நான்காமடியில் இருப்பது போலியான கரும்பு:  உகரத்தில் முடியும் சொல்லைத் தொடர்ந்து உயிரெழுத்துடன் தொடங்கும் சொல் சேரும்போது உண்டான காட்சிப் பிழையான கரும்பு அது.
கந்தலைத் தீக்கிட்டோர்க்கு  அரும்பும் நெஞ்சில் களிப்பு என்பதில் தீக்கிட்டோர்க்கு + அரும்பும் = தீக்கிட்டோர்க் கரும்பும் என்றானது.

ஒரு கணு கரும்பைத் தின்பதற்கே சிரமப்பட்டு பச்சை மிளகாய் அளவுக்குத் துண்டாக்க்கிச் சாப்பிடும் இக்காலத்தில் நான்கு கரும்பைத் திணித்து விட்டேன். நாற்றிசையும் இனிமை பொங்கட்டும்.


 போகிக்கே இந்தப் படையல் என்றால் நாளைய தினம் பொங்கலுக்கு  உதிரிவெடியில் இன்னும்  எவ்வளவு பெரிய கொண்டாட்டம் இருக்கும் என்று சொல்ல வேண்டுமா?

விடை கண்டுபிடித்தவர்கள் 30 பேர்:
லக்ஷ்மி ஷங்கர், ரங்கராஜன் யமுனாச்சாரி,  ரவி சுப்ரமணியன் , வீ.ஆர்.  பாலகிருஷ்ணன், ரா. ரவிஷங்கர்,  இரா.செகு,  கி மூ சுரேஷ், ராஜி ஹரிஹரன்,
வி ன் கிருஷ்ணன்,  அம்பிகா, செந்தில் சௌரிராஜன், சங்கரசுப்பிரமணியன்,
விஜயா ரவிஷங்கர், சித்தன், சாந்திநாராயணன்,  மீனாக்ஷி கணபதி, மு.க.இராகவன்,  எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், பாரதி,  தேன்மொழி, ஶ்ரீதரன் ,
ஜீவமோகன், முத்துசுப்ரமண்யம், ஆர்.நாராயணன்.,  லதா, பினாத்தல் சுரேஷ்,
சுந்தர் வேதாந்தம்,  நங்கநல்லூர் சித்தானந்தம் , எஸ் பி சுரேஷ், நாதன் நா தோ, கனகசபாபதி


Comments

Raghavan MK said…

https://m.timesofindia.com/city/chennai/pongal-smog-caused-by-bhogi-bonfires-disrupts-flight-operations-at-chennai-airport/articleshow/62482569.cms

சென்னையில் கரும்புகை மண்டலம்!
💨💨💨
விமானசேவைகள் இரத்து!✈🛬🛩🛫✈

போக்குவரத்து பாதிப்பு!🚗🚚🚎🚌🛵🏍🚎🚌🚙


உதிரிவெடியின் குறள்வெடி வெடித்ததே இந்த புகைமண்டலத்துக்குக் காரணம் என நம்பதகுந்த வட்டாரங்களில் செய்தி! 🎉🎊🎆

😄😃😄
நானும் இதற்கான விடையை சரியாக அனுப்பியிருந்தேன் இரண்டாவது முறையாக அனுப்பியதில் (இரு விடையும் சேர்த்து ); ஏனோ என் பெயர் இடம் பெறவில்லை !
Vanchinathan said…
தவற விட்டுவிட்டேன் கனகசபாபதி அவர்களே. திருத்திவிடுகிறேன்.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்