Skip to main content

விடை 3651

இன்று காலை வெளியான வெடி
ஒரு விலங்கிடம் கருணை காட்டும் குணம்  (4)
இதற்கான விடை: மானிடம்

மானுடம் என்றும் என்றும் இது எழுதப்படுகிறது.  நம் புதிர் மான் இடம் போயிருப்பதால்  அதுதான் பொருத்தம். (இன்னொருநாள் மானுடம்தான் சரியான விடையென்று அது போல் புதிராக்கும் உரிமையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்!)

பாகுபாடில்லாமல் மனிதர்கள் தெரியாதவர்களுக்கும் கருணை காட்டி உதவும்போது  மானிடம் (மனிதத்தன்மை)  அங்கே வெளிப்படுகிறது என்கிறார்கள். மதம், இனம், மொழி போன்ற பாகுபாடில்லாமல் செய்யப்படும் காரியத்திற்கே இச்சொல் பயன்பட்டாலும்,  அது கருணையினால் உதவும்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ("நானும் மனிதன்தானே எனக்கும் எல்லோரையும் போல் ஆசையிருக்காதா" என்று சொல்லும்போது அதை மனிதத்தன்மை/மானிடம் என்று  குறிப்பிடுவதில்லை).
 வலையில் தேடிய போது ஒரு கவிதை அகப்பட்டது, உதாரணத்துக்கு என்னுடைய வெண்பாவையே அளிப்பதற்கு பதிலாக ஒரு மாறுதலுக்கு இது.

கவிஞர் ஹரிகிருஷ்ணன் நடத்தும் ஈற்றடி என்றும் இனிப்பு என்ற  வாட்ஸப்குழுவில் முணுக்கென்றால் முப்பது வெண்பாவை வடிக்கும் ஆஸாத், சங்கரசுப்ரமணியன், சின்னக் கண்ணன், மாலா  போன்ற வல்லவர்கள்  இருக்கிறார்கள். அவர்கள் வெண்பாவில் புதிருக்குப் பொருத்தமானது  இருந்தால் தேடியெடுத்து அவர்கள் அனுமதியுடன்  வெளியிடுகிறேன்.

இன்று காலை வெளியிட்ட வெடிக்கு விடையளிக்கும் படிவத்திற்கும் கீழே சென்று பார்த்தால் பல ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளைக் கூறியிருப்பதைக் காணலாம்.   உங்கள் ஆர்வம் எனக்கும் பற்றிக் கொள்கிறது நன்றி.

இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இதைச் சொடுக்கவும்.




Comments

சங்கரசுப்பிரமணியன் said…
நன்றி வாஞ்சி சார்! இன்றைய புதிர் விடை விளக்கத்தில் வெண்பாக் குழுவையும் அதிலும் எங்களை ஊக்குவித்துக் கூறிய உங்கள் ஊக்க மொழிகளுக்கும் மிக்க நன்றி!
Raghavan MK said…
நீர் உதிர்க்கும் வெடிகளில்
சதிராடும் கூட்டம் நாங்கள்
ஈரடி வைத்து நடை பயின்று
முற்றத்தில் முத்தாடி பின்
மூவர் உலா காண வரும்
வாஞ்சியின் குழவி உதிரிவெடி
வாழ்க வளர்க என வாழ்த்துகிறேன்!
Vanchinathan said…
@ சங்கர சுப்பிரமணியன்: நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எப்போதாவது விடைச் சொல் கொண்ட வெண்பா அகப்பட்டால் இங்கே பயன்படுத்த அனுமதியாய் உங்கள் பதிலைக் கொள்கிறேன்,ர

@ மு.க.ராகவன்: நன்றி. முற்றத்தில் வீட்டில் இருப்பவர் மட்டும் பார்க்கும்படி வாட்ஸப்பில் நடை பயின்ற உதிரிவெடி இன்னமும் தெருவெங்கும் பலரும் பார்க்க உலாவும்படி வளர வைக்கும் நோக்கத்தில் இணையத்தில் வலைப்பதிவாய்க் கொண்டு வந்தேன்.

அதனால், குழு உறுப்பினரன்றி எவரும் ரசிக்கலாம். புதியதாய் நான் அறியாதவர்கள் வந்துகொண்டிருப்பதிலிருந்து தெரிகிறது.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்