Skip to main content

விடை 3620

பக்தி பல விதங்களில் வெளிப்படுவதை பக்தர்கள் எழுதிய இலக்கியங்களைப் படித்தால் சட்டென விளங்கும்.  "கருணையின் கடலே,  எல்லையில்லாதவனே, எங்கும் நிறைந்திருப்பவனே" என்று பலர்  கடவுளின் குணத்தைப் பாடுகிறார்கள்.   "இப்படியெல்லாம் மோசமாயிருந்த என்னை நல்லவழிப் படுத்தியவனே" என்று கடவுள் மனிதனுக்குச் செய்ததை வேறு சிலர் பாடுகிறார்கள். இன்னமும் சிலர் சிலையழகு,  அலங்கரிக்கும் பூமாலைகள், பட்டாடைகள், ஜொலிக்கும் வைர மூக்குத்தி, சந்தனக் காப்பு என்று   விவரித்து  மனிதர்கள் கடவுளுக்கு அணிவித்த ஆடை ஆபரணங்களில்  மனதைப் பறி கொடுத்துப் பாடுகிறார்கள்.

இன்றைய புதிரில் வந்த சிவனடியார்  நிர்க்குணனே என்று பாடுபவர் போலிருக்கிறது. இப்படி அலங்கார உடை தரித்த‌ இறைவனை தரிசிப்பதில் நாட்டமின்றி ஓடிப் போய்விட்டார்.
உடையணிந்த இறைவனைக் கண்ட சிவனடியார்களின்  முதல்வர்  ஓடினார் (4)
இதன் விடை:  தரித்த = தரிசித்த ‍- சி

அப்படி ஓடிப்போன ஒருவர் எழுதிய‌ ஒரு தத்துவப் பாடல் நாட்டுப்புற இலக்கியத்தில் வந்ததா, இல்லை சித்தர்கள் எழுதியதா தெரியாது, இங்கே கொடுக்கிறேன்:
 உள்ள தெய்வம் கல்லடா
 உலாவும் தெய்வம் செம்படா
பேசும் தெய்வம் நீயடா, நானடா
எல்லாத்துக்கும் பெரிய தெய்வம் சோறுடா!


இப்பாடலை எனக்குச் சிறு வயதில் விளக்கிச் சொன்னவர்  வழியாகத்தான் கோயில்களில்
மூலவர், உற்சவமூர்த்தி  என்ற இருவேறான  வடிவ‌ங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
என் அப்பா அடிக்கடி தாலுக்கா அலுவலகம் செல்வார். ஏதாவது நில விஷயமாக அவருடைய கையெழுத்து கொண்ட சான்றிதழை ஏழை உழவருக்காக ஒரு வழக்கு தொடர்பாக நீதி மன்றத்தில் காட்ட வேண்டியிருக்கும்.  ஆனால் தாசில்தார் எங்காவது மாவட்ட ஆட்சியரைப் பார்க்கவோ, அல்லது வேறு எங்காவதோ போயிருந்தால் இது நடக்காது. அதனால் இன்னொரு தாசில்தார், எப்போதும் அதே அலுவலகத்தில் அமர்ந்து இருக்கும்படி நியமித்திருப்பார்களாம். அவரை  என் அப்பா மூலவர் என்றும் மற்றவரை உற்சவ மூர்த்தி என்றும் சொல்வார்!

இன்றைய விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கவும்.

Comments

Raghavan MK said…


கல்லூரி *முதல்வர்* , தமிழக முதல்வர், எனக் கேள்விபட்டிருக்கிறோம், கண்டிருக்கிறோம்!

இது யாரப்பா சிவனடியார்களின்  முதல்வர், புதிதாய் தோன்றியுள்ளாரே என குழம்பினேன்.

சைவசமயக்குரவர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். இவர்களை நால்வர் என்றும் நால்வர் பெருமக்கள் என்றும்
சைவ சமயத்தினர் அழைக்கின்றனர்.
இச்சிவனடியார்களில் முதல்வர் யார்? அவர் ஏன், எங்கு ஓடினார்? என்றெல்லாம் தேடி, நாடி ,ஓடி யலைந்தேன்.

நல்லநேரம் இன்று பள்ளத்தில் விழவில்லை! 😌

ஓடியலைந்த களைப்பு தீர்ந்த பின்னரே புரிந்தது, உடையணிந்த இறைவன் யார்,முதல்வர் யார், என்று !😄

உங்களுடன் பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே! 👇🏽
************************
_உடையணிந்த இறைவனைக் கண்ட சிவனடியார்களின்  முதல்வர்  ஓடினார் (4)_

_இறைவனைக் கண்ட_
= *தரிசித்த*

_சிவனடியார்களின்  முதல்வர்_
= *சி*

_ஓடினார்_

= _*தரிசித்த* விலிருந்து *சி* ஓடினார்_

= *தரிசித்த-சி*
= *தரித்த*

= _உடையணிந்த_
************************
Muthu said…
இப்படியெல்லாம் திசை திருப்பிக் கலங்கடித்தால், சிவனடியார் என்ன நாங்களும் ஓடித்தான் போய்விடுவோம்! சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைக்கும் உத்தி அருமை!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்