Skip to main content

விடை 3617

இன்று காலை வெளியான வெடி
தென்னை ஓலையாலான தேங்காயின் பகுதி ?! (3)
இதற்கான விடை: கீற்று. உடைத்த தேங்காயைக் கீறிப் பெறப்படும் துண்டு, கூரை வேய்வதற்காக ஓலையில் பின்னப்பட்ட பொருள், இவ்விரண்டின் பெயரும் கீற்று!

இன்று  அனுப்பப்பட்ட விடைகளைக் காணச் செல்ல வேண்டிய பக்கம்.

விதம் விதமான புதிர்களை விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய ஒரு தளம், ராமராவ் உருவாக்கிய பல புதிர்களடங்கிய திரைக்கதம்பம் வலைப் பதிவு. அவர் அபாரமாக ஒரு துறையிலுள்ள‌ சொற்களை மட்டுமே கொண்டு 69 வாரங்களாக உருவாக்கி வருகிறார்.




Comments

Muthu said…
சென்னையில் "பத்தை"!
Ambika said…

கீற்றுக்கு பத்தை சரி; ஓலையுடன் எப்படி பின்னி பிணைப்பது? :-)
காணாமல் போன காதலி திரும்ப கிடைத்தது போன்ற மகிழ்ச்சி இன்றைய புதிரை கண்ட போது! நன்றி வாஞ்சி சார்!
Ramarao said…
திரு வாஞ்சிநாதன் அவர்கள் என்னுடைய வலைத்தளம் (திரைக்கதம்பம் - திரை குறுக்கெழுத்துப் புதிர்). https://thiraijaalam.blogspot.com பற்றி, மற்ற புதிர் ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

இந்த திரை குறுக்கெழுத்துப் புதிர் கடந்த 6 வருடங்களாக, (மாதம் ஒரு புதிர்) ஒவ்வொரு மாதமும் 20 ந்தேதி வெளியிட்டு வருகிறேன். இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் தமிழ் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

இதுவரை வெளியிட்ட 69 திரை குறுக்கெழுத்துப் புதிர்களின் தனிக்கூறுகள். (SPECIALITIES)

1. விடைகள் அனைத்தும் தமிழில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பெயர்களே. .

2. திரைப்படங்கள் அனைத்தும் தமிழில் தயாரிக்கப்பட்டவையே. மொழி மாற்றுப் படங்கள் (dubbed films) கிடையாது.

3. புதிர்க் கட்டங்கள் அனைத்தும் 9 x 9 அளவுகளில் சரிசீரமைப்பில் (symmetrically) அமைக்கப் பட்டவை.

4. விடைகளில் எவையும் கட்டங்களில் நிரப்புகையில் மேலிருந்து கீழாகவோ, அல்லது வலமிருந்து இடமாகவோ அமையும்படி அமைக்கவேயில்லை.

5. விடைக்கான தமிழ் திரைப்படங்களின் தலைப்புகள் முழுமையாக விடைகளில் இருக்கும். எழுத்துக்களைக் கூட்டவோ குறைக்கவோ, மாற்றியமைக்கவோ இல்லை.

6. விடைகளில் ஆங்கில / வேற்று மொழி சொற்கள் இருப்பினும், அவையெல்லாமே தமிழில் வெளிவந்த திரைப்படங்களின் தலைப்புகளாக அமைந்துவிட்டன என்பதை அறியலாம்.

7. விடைகளில் ஒருமுறை பயன்படுத்திய தமிழ் திரைப்படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்தவே இல்லை. ( நான் ஒரு database வைத்துள்ளேன்)

8. முடிந்தவரை குறிப்புகள் அனைத்தும் பொருள் உள்ள வாக்கியங்களாகவே அமைக்கப் பட்டுள்ளன.

9. குறிப்புகளில் அதிகமாக பொது அறிவை பயன்படுத்த தேவையில்லாதவாறு அமைக்கப் பட்டுள்ளன. அப்படியிருப்பினும், விடைகள் கொடுத்துள்ள குறிப்புகளிலேயே மறைந்திருக்குமாறு அமைக்கப் பட்டுள்ளன.

​10. விடைகள் (தமிழ் திரைப்படங்களின் தலைப்புக்கள்) சரியானவை தானா என்பதை உறுதி செய்து கொள்ள http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

மேலே கண்ட தனிக் கூறுகளை (Specialities) ஆராய்ந்து பார்த்தால்,

ஒரே கருவை (தமிழ் திரைப்படங்களின் பெயர்கள்) கொண்டு குறுக்கெழுத்துப் புதிர்களை அமைப்பது எவ்வளவு கடினம் என்பதும் மேலும், திரைப்படத் தலைப்புகளுக்கு குறிப்புகள் அமைப்பது எவ்வளவு கடினம் என்பதும், புதிர் அமைப்பாளர்களுக்கும், புதிர் ஆர்வலர்களுக்கும் தெரிந்திருக்கும்.

அதிக புதிர் ஆர்வலர்கள் பங்கேற்றால் நான் மிகவும் மகிழ்வேன். எனது மின்முகவரி: sathyaapathi@gmail.com

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.