Skip to main content

விடை 3620

பக்தி பல விதங்களில் வெளிப்படுவதை பக்தர்கள் எழுதிய இலக்கியங்களைப் படித்தால் சட்டென விளங்கும்.  "கருணையின் கடலே,  எல்லையில்லாதவனே, எங்கும் நிறைந்திருப்பவனே" என்று பலர்  கடவுளின் குணத்தைப் பாடுகிறார்கள்.   "இப்படியெல்லாம் மோசமாயிருந்த என்னை நல்லவழிப் படுத்தியவனே" என்று கடவுள் மனிதனுக்குச் செய்ததை வேறு சிலர் பாடுகிறார்கள். இன்னமும் சிலர் சிலையழகு,  அலங்கரிக்கும் பூமாலைகள், பட்டாடைகள், ஜொலிக்கும் வைர மூக்குத்தி, சந்தனக் காப்பு என்று   விவரித்து  மனிதர்கள் கடவுளுக்கு அணிவித்த ஆடை ஆபரணங்களில்  மனதைப் பறி கொடுத்துப் பாடுகிறார்கள்.

இன்றைய புதிரில் வந்த சிவனடியார்  நிர்க்குணனே என்று பாடுபவர் போலிருக்கிறது. இப்படி அலங்கார உடை தரித்த‌ இறைவனை தரிசிப்பதில் நாட்டமின்றி ஓடிப் போய்விட்டார்.
உடையணிந்த இறைவனைக் கண்ட சிவனடியார்களின்  முதல்வர்  ஓடினார் (4)
இதன் விடை:  தரித்த = தரிசித்த ‍- சி

அப்படி ஓடிப்போன ஒருவர் எழுதிய‌ ஒரு தத்துவப் பாடல் நாட்டுப்புற இலக்கியத்தில் வந்ததா, இல்லை சித்தர்கள் எழுதியதா தெரியாது, இங்கே கொடுக்கிறேன்:
 உள்ள தெய்வம் கல்லடா
 உலாவும் தெய்வம் செம்படா
பேசும் தெய்வம் நீயடா, நானடா
எல்லாத்துக்கும் பெரிய தெய்வம் சோறுடா!


இப்பாடலை எனக்குச் சிறு வயதில் விளக்கிச் சொன்னவர்  வழியாகத்தான் கோயில்களில்
மூலவர், உற்சவமூர்த்தி  என்ற இருவேறான  வடிவ‌ங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
என் அப்பா அடிக்கடி தாலுக்கா அலுவலகம் செல்வார். ஏதாவது நில விஷயமாக அவருடைய கையெழுத்து கொண்ட சான்றிதழை ஏழை உழவருக்காக ஒரு வழக்கு தொடர்பாக நீதி மன்றத்தில் காட்ட வேண்டியிருக்கும்.  ஆனால் தாசில்தார் எங்காவது மாவட்ட ஆட்சியரைப் பார்க்கவோ, அல்லது வேறு எங்காவதோ போயிருந்தால் இது நடக்காது. அதனால் இன்னொரு தாசில்தார், எப்போதும் அதே அலுவலகத்தில் அமர்ந்து இருக்கும்படி நியமித்திருப்பார்களாம். அவரை  என் அப்பா மூலவர் என்றும் மற்றவரை உற்சவ மூர்த்தி என்றும் சொல்வார்!

இன்றைய விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கவும்.

Comments

Raghavan MK said…


கல்லூரி *முதல்வர்* , தமிழக முதல்வர், எனக் கேள்விபட்டிருக்கிறோம், கண்டிருக்கிறோம்!

இது யாரப்பா சிவனடியார்களின்  முதல்வர், புதிதாய் தோன்றியுள்ளாரே என குழம்பினேன்.

சைவசமயக்குரவர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். இவர்களை நால்வர் என்றும் நால்வர் பெருமக்கள் என்றும்
சைவ சமயத்தினர் அழைக்கின்றனர்.
இச்சிவனடியார்களில் முதல்வர் யார்? அவர் ஏன், எங்கு ஓடினார்? என்றெல்லாம் தேடி, நாடி ,ஓடி யலைந்தேன்.

நல்லநேரம் இன்று பள்ளத்தில் விழவில்லை! 😌

ஓடியலைந்த களைப்பு தீர்ந்த பின்னரே புரிந்தது, உடையணிந்த இறைவன் யார்,முதல்வர் யார், என்று !😄

உங்களுடன் பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே! 👇🏽
************************
_உடையணிந்த இறைவனைக் கண்ட சிவனடியார்களின்  முதல்வர்  ஓடினார் (4)_

_இறைவனைக் கண்ட_
= *தரிசித்த*

_சிவனடியார்களின்  முதல்வர்_
= *சி*

_ஓடினார்_

= _*தரிசித்த* விலிருந்து *சி* ஓடினார்_

= *தரிசித்த-சி*
= *தரித்த*

= _உடையணிந்த_
************************
Muthu said…
இப்படியெல்லாம் திசை திருப்பிக் கலங்கடித்தால், சிவனடியார் என்ன நாங்களும் ஓடித்தான் போய்விடுவோம்! சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைக்கும் உத்தி அருமை!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.