Skip to main content

விடை 3609

அசோகவனத்திலிருந்த சீதையை  "வெயிலிடை வைத்த விளக்கு போல" என்று கம்பர் குறிப்பிட்டதைப் பற்றி  எங்கள் பள்ளியின்  தமிழாசிரியர் நிறைய பேசுவார்.  ராமனருகில் இருந்தால்தான் சீதைக்குப் பிரகாசம், இல்லையென்றால் அது தெரியாது என்பதை எங்கள் ஆசிரியர் இப்படி மாற்றிக் கூறினார். ராமர்தான் பார்க்க எப்படி இருப்பார் என்பது தெரிந்த விஷயமாச்சே!  அதுதான் ராமர் கலர்ல இருப்பாரே. அப்படிப்பட்ட ராமன் பக்கத்தில் சீதை பளிச்சென்று தெரிபவள்,  நல்ல கலரான ராவணன் பக்கத்தில் இருக்கும்போது எடுபடவில்லையாம். அது ஞாபகத்தில்  நேற்றைய வெடியான‌  "வெயிலிடை வைத்த பாதி மீன் ஒன்று (3)"  உருவானது. சீதையும் காணும், விளக்கையும் காணும்,  வெறும் அயிரைமீன்தான் மிஞ்சியது.

சரி இன்றைய புதிருக்கு வருவோம்.
முதன் முதல் தோன்றாமல் உலகுக்கு வந்த பெண் (4)
வெடியை விரும்புதல் விட்டொழிக்க மாட்டோர்
அடிமுதலில் தேடீடுவீர் ஆழ்ந்து.

ஏவாளும் பார்வதியும் இப்புதிருக்  கேற்றதிலை
பாவால் உரைத்தேன் பணிந்து.

பெண்ணென்றால்  யாரென்று கேட்பீரேல் நீர்பெற்ற‌
கண்ணான பேதையாம் காண்.

சிக்கலான இவ்வெடிக்குச் சீராய் விடையளித்தோர்
பக்கமிதில் பட்டியலாய்க் காண்



Comments

Raghavan MK said…


A peek into today's riddle!
***********************
நல்ல கவிதை படைக்க நல்ல வாசிப்பு வேண்டும் . 9ம் நூற்றாண்டின் கடுமையான ஆணாதிக்க சட்டகத்துக்குள் இருந்து கொண்டு, பன்னிறு ஆழ்வார்களுள் ஒருவராக உயர்ந்ததற்க்கு, ஆண்டாளின் பக்தி மட்டுமே காரணம் அல்ல. பெரியாழ்வாரின் *புதல்வி* , அவரைப்போன்றே இலக்கணம் கற்றுச்சிறந்திருந்தது தான் காரணம்.
************************
_முதன் முதல் தோன்றாமல் உலகுக்கு வந்த பெண் (4)_

_முதன் முதல்_
= *( மு )தல்*
_தோன்றாமல்_
= *( ~மு~ )தல்*
= *தல்*
_உலகுக்கு_
= *புவி* க்கு
_வந்த_
= *தல் --> புவி*
= *புதல்வி*
= _பெண்_
************************
ஒரு தந்தை தன் பெண் குழந்தையைப் பார்த்துப் பாடுவது போல் பாரதிதாசனின் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

_தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட_
_சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை_
_சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ_
_சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்_
*_விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி_*
_வேளைதோறும் கற்று வருவதால் படியும்!_
_மலைவாழை அல்லவோ கல்வி? - நீ_
_வாயார உண்ணுவாய் போ என் *புதல்வி* !_

இந்தப் பாடலில் பாரதிதாசன் ‘விலை போட்டு வாங்கவா முடியும் - கல்வி?’ என்று கேட்டுள்ளார் பாருங்கள். காசு கொடுத்தால் கடையில் சென்று பொருள்களை வாங்க முடியும். கல்வியைக் கற்றால் தான் பெற முடியும் என்று விளக்கியுள்ளது அருமை அல்லவா?
💐🙏🏼💐
************************

வெடியும் அருமை, அதனை விளக்கும் குறள் வெண்பாக்களும் இனிமை

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.