Skip to main content

விடை 3599

இன்றைய வெடி:
நாரிடை வைத்த ஓராயுதத்தைச் சுழற்றும் பகுத்தறிவாளர் (5)

இதற்கான விடை:  நாத்திகர் =  நார் + கத்தி

இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*_பகுத்தறிவு என்பது என்ன?_*

“The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

“அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.
*********************
_நாரிடை வைத்த ஓராயுதத்தைச் சுழற்றும் பகுத்தறிவாளர் (5)_

_ஓராயுதம்_ = *கத்தி*

_ஓராயுதத்தைச் சுழற்றும்_
= *கத்தி --> த்திக*

_நாரிடை வைத்த_
= *த்திக* inside *நார்*
= *நாத்திகர்*
= _பகுத்தறிவாளர்_
*********************
*_பகுத்தறிவாளர் என்பவர் யார்?_*
இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.
💐🙏💐
நாத்திகரும் பகுத்தறிவாளரும் ஒன்றா?
பகுத்தறிவாளர் நாத்திகராக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே!
அப்படியானால், ஆத்திகர்கள் எல்லோருமே பகுத்தறியும் பண்பு அற்றவர்கள் என்று ஆகிறதே!!
நாத்திகர் என்பவர் இறை நம்பிக்கை அற்றவர். அவ்வளவே!
Vanchinathan said…
இதைத் தெரிந்தேதான் பயன்படுத்தினேன். பகுத்தறிவாளர்கள் என்ற சொல்லை கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மட்டுமே தங்களைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறார்கள். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அச்சொல்லைத் தவிர்க்கிறார்கள். பயன்பாட்டின் அடிப்படையில் இதைச் சொல்லலாம் என்றே செய்தேன்.
Raghavan MK said…


எனக்கும் இந்த ஐயம் எழுந்தது!

Well said 👇🏽
_அப்படியானால், ஆத்திகர்கள் எல்லோருமே பகுத்தறியும் பண்பு அற்றவர்கள் என்று ஆகிறதே!!_

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.