Skip to main content

விடை 3606


நிறைய‌ விஷயங்களைத் தெரிந்துகொள்ள அதீத ஆவலுடன் சிலர் இருப்பார்கள்.
அப்படி ஒருவரை நேற்று மாலை நான் சந்தித்து, பொழுதுபோவது தெரியாமல் நீண்ட நேரம் அளவளாவிக்கொண்டிருந்தேன். அவருக்கு நிறைய விஷயம் தெரியுமாதலால் சுவாரசியமாக நேரம் போய்க் கொண்டிருந்தது. அவர் கற்கால, தற்கால இலக்கியமெல்லாம் கற்றவர். எனக்கோ இதெல்லாம் தெரியாது.
ஏதோ எக்ஸ், ஒய் என்று மாணவர்களிடம் பினாத்திக் கொண்டு காலத்தை ஓட்டுபவன்.  இருந்தாலும் எனக்கும் இலக்கியம் கொஞ்சம் தெரியுமாக்கும் என்று சும்மா ஒரு கப்ஸாவிட்டேன் (நமக்குதான் உண்மையிலேயே விஷயம் தெரியாதே!)

அனுமார்  நெருப்பு வைத்த‌ இலங்கைத் தீவு அணைத்த பின் மிச்சமிருந்த வு க்கு முன்னே ராவணனின் துருப்பு பாதி ஓடிவிட்டது என்று அவ‌ரிடம் சொன்னேன். உடனே அவர் என்னை விடவில்லை.  கம்ப‌ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் எந்த படலத்தில் அப்படிச் சொல்லியிருக்கிறது, அல்லது வால்மீகி எந்த சுலோகத்தில் சொல்லியிருக்கிறார் என்று விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தார். அவருக்கு பதில் சொல் முடியாமல்  நான் "ஐயா, நான் உதிரிவெடி என்று ஒரு வலைப்பதிவில் தினம் புதிர் ஒன்று போட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த வாசகர்களுக்கு நாளைக்குக் காலை 6 மணிக்குள்ளே நான் புதிரைத் தயாரித்து வெளியிடவேண்டும், ஆனால் எனக்கோ ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிவரை தூங்கவேண்டும் இப்போது என்னை விட்டுவிடுங்கள்" என்று சொல்லி அந்தக் குடைவரின் துருவலிலிருந்து தப்பித்து இப்புதிரைச் செய்தேன்.

இப்புதிரை நேரத்துக் கொண்டு வருவதற்கு எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது பாருங்கள்! ஐந்தேகால் மணிக்குக் கொட்டக் கொட்ட விழித்துக் கொள்ளும் நானே என்னைப் பற்றித் தூங்கு மூஞ்சி என்று சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

Comments

Muthu said…
கதை ரொம்ப ஸ்வாரஸ்யம்! (புதிரும்தான்).
Chittanandam said…
GREAT, DE.VANCHINATHAN. YOUR PASSION AND DEVOTION.
Raghavan MK said…

A peek into today's riddle!
********************
*_குடை சாயாத கவிதைகள்!_* 😌
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_மழை வரும் நேரம் தலை சுமக்கும் பூக்கள்_ _நனையாமல் குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த மல்லிகைச் செடி நீ!_

அருட்பெருங்கோ (http://blog.arutperungo.com)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*_வானம் பார்த்த பூமியில் ஒரு குடையின் கதை.._*

ஈரத்தின் ஓரத்தை தொட்டு விட துடிக்கும் ஒரு வானம் பார்த்த தேசத்தில் குடைக்கு எங்கு கிடைக்க போகிறது மழையின் ஸ்பரிசம்..!!

இங்கு கோடை தவிர ஒரு பருவமும் வந்ததில்லை சூட்டை தவிர ஒரு உணர்வும் கண்டதில்லை…!!

குடைகள் தவமிருக்க படைகள் துயர் துடைக்க மழை வந்து கொண்டே இருக்கிறது நூற்றாண்டு காலமாக …!!

குடைக்கெதற்கு மழை..? வெயில் போதாதா..! விவாதங்கள் பல கடந்து.. நைந்து தான் போய் விட்டது அந்த குடை…

தூக்கி எரிய குப்பை தொட்டி தேடும் படலம்…!! வருந்துவதை தவிர செய்வதற்கென்ன இருக்க முடியும் குடை கொண்டானுக்கு….!!

ஈரத்தின் ஓரத்தை தொட்டு விட துடிக்கும் ஒரு வானம் பார்த்த தேசத்தில் குடைக்கு எதற்கு மழையின் ஸ்பரிசம்??!!!!
Bharathi Rajmadan
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_குடை நெருப்பை அணைத்துத் திட்டு முன் பட்டாளத்தில் பாதி ஓடிவிட்டது (3)_
திட்டு= தீவு
நெருப்பை அணைத்துத்
= தீவு-தீ=வு
பட்டாளத்தில் பாதி ஓடிவிட்டது
=துருப்பு-ப்பு
= துரு
குடை=துரு+வு!=துருவு
*************************
_எட்டும் தொலைவில் வானம், விண்மீனும்_ _கண் சிமிட்டும், வானவில் வந்து குடை_ _பிடிக்கும், நீ என் அருகில் இருந்தால்!_

கனவுசிற்பி
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*எதையும் தாங்குவோம்.* 

பட்டுப் பட்டு 
பழகிப் போனோம் .. 
திட்டு வாங்கி.. 
திகட்டிப் போனோம். 
சிட்டுக் குருவி 
வாழ்க்கை தேடி 
சிறுது சிறுதாய் 
அழிந்து போனோம்.. 
இடுக்கண் இனிமேல் 
எப்படி வரினும் 
எல்லாம் தாங்குவோம்  

நாச்சியாதீவு பர்வீன். 
இலங்கை
******&&&&*******&&&&
💐🙏🏼💐

புதிருக்கான சரடு ரொம்ப ஸ்ட்ராங் . எம்கே
ஆரின் விளக்கத்திற்கு வழக்கம் போல ஒரு ஷொட்டு
பலே!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.