Skip to main content

விடை 3606


நிறைய‌ விஷயங்களைத் தெரிந்துகொள்ள அதீத ஆவலுடன் சிலர் இருப்பார்கள்.
அப்படி ஒருவரை நேற்று மாலை நான் சந்தித்து, பொழுதுபோவது தெரியாமல் நீண்ட நேரம் அளவளாவிக்கொண்டிருந்தேன். அவருக்கு நிறைய விஷயம் தெரியுமாதலால் சுவாரசியமாக நேரம் போய்க் கொண்டிருந்தது. அவர் கற்கால, தற்கால இலக்கியமெல்லாம் கற்றவர். எனக்கோ இதெல்லாம் தெரியாது.
ஏதோ எக்ஸ், ஒய் என்று மாணவர்களிடம் பினாத்திக் கொண்டு காலத்தை ஓட்டுபவன்.  இருந்தாலும் எனக்கும் இலக்கியம் கொஞ்சம் தெரியுமாக்கும் என்று சும்மா ஒரு கப்ஸாவிட்டேன் (நமக்குதான் உண்மையிலேயே விஷயம் தெரியாதே!)

அனுமார்  நெருப்பு வைத்த‌ இலங்கைத் தீவு அணைத்த பின் மிச்சமிருந்த வு க்கு முன்னே ராவணனின் துருப்பு பாதி ஓடிவிட்டது என்று அவ‌ரிடம் சொன்னேன். உடனே அவர் என்னை விடவில்லை.  கம்ப‌ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் எந்த படலத்தில் அப்படிச் சொல்லியிருக்கிறது, அல்லது வால்மீகி எந்த சுலோகத்தில் சொல்லியிருக்கிறார் என்று விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தார். அவருக்கு பதில் சொல் முடியாமல்  நான் "ஐயா, நான் உதிரிவெடி என்று ஒரு வலைப்பதிவில் தினம் புதிர் ஒன்று போட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த வாசகர்களுக்கு நாளைக்குக் காலை 6 மணிக்குள்ளே நான் புதிரைத் தயாரித்து வெளியிடவேண்டும், ஆனால் எனக்கோ ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிவரை தூங்கவேண்டும் இப்போது என்னை விட்டுவிடுங்கள்" என்று சொல்லி அந்தக் குடைவரின் துருவலிலிருந்து தப்பித்து இப்புதிரைச் செய்தேன்.

இப்புதிரை நேரத்துக் கொண்டு வருவதற்கு எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது பாருங்கள்! ஐந்தேகால் மணிக்குக் கொட்டக் கொட்ட விழித்துக் கொள்ளும் நானே என்னைப் பற்றித் தூங்கு மூஞ்சி என்று சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

Comments

Muthu said…
கதை ரொம்ப ஸ்வாரஸ்யம்! (புதிரும்தான்).
Chittanandam said…
GREAT, DE.VANCHINATHAN. YOUR PASSION AND DEVOTION.
Raghavan MK said…

A peek into today's riddle!
********************
*_குடை சாயாத கவிதைகள்!_* 😌
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_மழை வரும் நேரம் தலை சுமக்கும் பூக்கள்_ _நனையாமல் குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த மல்லிகைச் செடி நீ!_

அருட்பெருங்கோ (http://blog.arutperungo.com)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*_வானம் பார்த்த பூமியில் ஒரு குடையின் கதை.._*

ஈரத்தின் ஓரத்தை தொட்டு விட துடிக்கும் ஒரு வானம் பார்த்த தேசத்தில் குடைக்கு எங்கு கிடைக்க போகிறது மழையின் ஸ்பரிசம்..!!

இங்கு கோடை தவிர ஒரு பருவமும் வந்ததில்லை சூட்டை தவிர ஒரு உணர்வும் கண்டதில்லை…!!

குடைகள் தவமிருக்க படைகள் துயர் துடைக்க மழை வந்து கொண்டே இருக்கிறது நூற்றாண்டு காலமாக …!!

குடைக்கெதற்கு மழை..? வெயில் போதாதா..! விவாதங்கள் பல கடந்து.. நைந்து தான் போய் விட்டது அந்த குடை…

தூக்கி எரிய குப்பை தொட்டி தேடும் படலம்…!! வருந்துவதை தவிர செய்வதற்கென்ன இருக்க முடியும் குடை கொண்டானுக்கு….!!

ஈரத்தின் ஓரத்தை தொட்டு விட துடிக்கும் ஒரு வானம் பார்த்த தேசத்தில் குடைக்கு எதற்கு மழையின் ஸ்பரிசம்??!!!!
Bharathi Rajmadan
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_குடை நெருப்பை அணைத்துத் திட்டு முன் பட்டாளத்தில் பாதி ஓடிவிட்டது (3)_
திட்டு= தீவு
நெருப்பை அணைத்துத்
= தீவு-தீ=வு
பட்டாளத்தில் பாதி ஓடிவிட்டது
=துருப்பு-ப்பு
= துரு
குடை=துரு+வு!=துருவு
*************************
_எட்டும் தொலைவில் வானம், விண்மீனும்_ _கண் சிமிட்டும், வானவில் வந்து குடை_ _பிடிக்கும், நீ என் அருகில் இருந்தால்!_

கனவுசிற்பி
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*எதையும் தாங்குவோம்.* 

பட்டுப் பட்டு 
பழகிப் போனோம் .. 
திட்டு வாங்கி.. 
திகட்டிப் போனோம். 
சிட்டுக் குருவி 
வாழ்க்கை தேடி 
சிறுது சிறுதாய் 
அழிந்து போனோம்.. 
இடுக்கண் இனிமேல் 
எப்படி வரினும் 
எல்லாம் தாங்குவோம்  

நாச்சியாதீவு பர்வீன். 
இலங்கை
******&&&&*******&&&&
💐🙏🏼💐

புதிருக்கான சரடு ரொம்ப ஸ்ட்ராங் . எம்கே
ஆரின் விளக்கத்திற்கு வழக்கம் போல ஒரு ஷொட்டு
பலே!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்