Skip to main content

விடை 3603

இன்றைய வெடி:
பணத்தில் வார இறுதி கழியும் வரை தூங்கு என்பது இயற்கையின் சட்டம் (3)
இதற்கான விடை: நியதி = நிதி + சயனி (தூங்கு) - சனி

இன்று அளிக்கப்பட்ட விடைகள் அனைத்தும் (8 மணிவரை) சரியே.
இங்கே சென்று அப்பட்டியலைப் பார்க்கவும்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
************************
திருமாலின் *சயனங்கள்*
10 வகைப்படும். அவைகள்:
1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்
🙏🏼
************************
_பணத்தில் வார இறுதி கழியும் வரை தூங்கு என்பது இயற்கையின் சட்டம் (3)_
_பணம்_ = *நிதி*
_வார இறுதி_ = *சனி*
_தூங்கு_ = *சயனி*
_வார இறுதி கழியும் வரை தூங்கு_
= *சயனி-சனி*
= *ய*
_பணத்தில் ய_
= *ய--> நிதி*
= *நியதி*
= _இயற்கையின் சட்டம்_
************************
_இயற்கையின் நியதி?_

தரையில் விழுந்த மீன்
துடி துடிக்குது,
தத்தளிக்குது
அதன் முடிவு நெருங்குது

தரையில் வீசிய மீனவன்
மனமோ...குதூகலித்தது
கும்மாளமிட்டது...!
மீனவனின் அன்றைய
வாழ்விற்கு பதில் அது

விற்று கிடைக்கும் பணத்தில்
என்ன பொருட்கள் கிடைக்கும்
என்றவன் மனம் கணக்கிட்டது,
மீனின் முடிவில் மீனவனுக்கு
அன்று வாழ்வு....!

_இது தானோ_ _இயற்கையின் நியதி?_
_இல்லை இது விதியின் அநீதி_ ?
(நிர்மலா மூர்த்தி)
************************
If interested to read full version of the "peek", whstsapp to 9008746624 💐🙏🏼💐
**********************
Raghavan MK said…


Dear Mr. Vanchi!
அழகான கட்டமைப்புடன் கூடிய அருமையான புதிர்!

பாராட்டுக்கள் 💐

காலையில் புதிரை படித்தவுடனே விடை மனதில் பளிச்சிட்டது. ஆனால் விடையை புதிர் சொற்களுடன் இணைக்க முடியவில்லை!

Then l decided to post the answer only if l were able to link it with the clues. And l could succeed only by afternoon
and sent the answer!

Indeed a nice puzzle!

Keep going!
Thank you!
MKR

வெட்டு, கொலை, குத்து போன்ற காட்சிகள் இல்லாமல் ஆபாசமற்ற அருமையான புதிர்.குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய உன்னத புதிர்.இருப்பினும், அனாவசிய ஆலாபனையைத் தவிர்த்திருக்கலாம்.MRK ஐயா அவர்களின் விளக்கம் கன ஜோர்! Deserves a pat on the back. ஒரு கேள்வி ஐயா..ஆள் இல்லாதக் கடையில் யாருக்காக இத்தனை ஸ்ட்ராங்காய் டீ
ஆத்துகிறீர்கள்?
Chittanandam said…
😄😄😄😄
Vanchinathan said…
தொடர்ந்து புதிரை முயன்று சரியான விளக்கத்தை அறியும்வரை பொறுமையுடன் இருந்த உங்கள் ஆர்வத்துக்கு நன்றி! பாராட்டு!.
உஷா said…
ஆளில்லாத கடையா? நானெல்லாம் கண்விழிப்பதே உதிரிவெடியில்தான்

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.