Skip to main content

விடை 3603

இன்றைய வெடி:
பணத்தில் வார இறுதி கழியும் வரை தூங்கு என்பது இயற்கையின் சட்டம் (3)
இதற்கான விடை: நியதி = நிதி + சயனி (தூங்கு) - சனி

இன்று அளிக்கப்பட்ட விடைகள் அனைத்தும் (8 மணிவரை) சரியே.
இங்கே சென்று அப்பட்டியலைப் பார்க்கவும்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
************************
திருமாலின் *சயனங்கள்*
10 வகைப்படும். அவைகள்:
1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்
🙏🏼
************************
_பணத்தில் வார இறுதி கழியும் வரை தூங்கு என்பது இயற்கையின் சட்டம் (3)_
_பணம்_ = *நிதி*
_வார இறுதி_ = *சனி*
_தூங்கு_ = *சயனி*
_வார இறுதி கழியும் வரை தூங்கு_
= *சயனி-சனி*
= *ய*
_பணத்தில் ய_
= *ய--> நிதி*
= *நியதி*
= _இயற்கையின் சட்டம்_
************************
_இயற்கையின் நியதி?_

தரையில் விழுந்த மீன்
துடி துடிக்குது,
தத்தளிக்குது
அதன் முடிவு நெருங்குது

தரையில் வீசிய மீனவன்
மனமோ...குதூகலித்தது
கும்மாளமிட்டது...!
மீனவனின் அன்றைய
வாழ்விற்கு பதில் அது

விற்று கிடைக்கும் பணத்தில்
என்ன பொருட்கள் கிடைக்கும்
என்றவன் மனம் கணக்கிட்டது,
மீனின் முடிவில் மீனவனுக்கு
அன்று வாழ்வு....!

_இது தானோ_ _இயற்கையின் நியதி?_
_இல்லை இது விதியின் அநீதி_ ?
(நிர்மலா மூர்த்தி)
************************
If interested to read full version of the "peek", whstsapp to 9008746624 💐🙏🏼💐
**********************
Raghavan MK said…


Dear Mr. Vanchi!
அழகான கட்டமைப்புடன் கூடிய அருமையான புதிர்!

பாராட்டுக்கள் 💐

காலையில் புதிரை படித்தவுடனே விடை மனதில் பளிச்சிட்டது. ஆனால் விடையை புதிர் சொற்களுடன் இணைக்க முடியவில்லை!

Then l decided to post the answer only if l were able to link it with the clues. And l could succeed only by afternoon
and sent the answer!

Indeed a nice puzzle!

Keep going!
Thank you!
MKR

வெட்டு, கொலை, குத்து போன்ற காட்சிகள் இல்லாமல் ஆபாசமற்ற அருமையான புதிர்.குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய உன்னத புதிர்.இருப்பினும், அனாவசிய ஆலாபனையைத் தவிர்த்திருக்கலாம்.MRK ஐயா அவர்களின் விளக்கம் கன ஜோர்! Deserves a pat on the back. ஒரு கேள்வி ஐயா..ஆள் இல்லாதக் கடையில் யாருக்காக இத்தனை ஸ்ட்ராங்காய் டீ
ஆத்துகிறீர்கள்?
Chittanandam said…
😄😄😄😄
Vanchinathan said…
தொடர்ந்து புதிரை முயன்று சரியான விளக்கத்தை அறியும்வரை பொறுமையுடன் இருந்த உங்கள் ஆர்வத்துக்கு நன்றி! பாராட்டு!.
உஷா said…
ஆளில்லாத கடையா? நானெல்லாம் கண்விழிப்பதே உதிரிவெடியில்தான்

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்