Skip to main content

விடை 3609

அசோகவனத்திலிருந்த சீதையை  "வெயிலிடை வைத்த விளக்கு போல" என்று கம்பர் குறிப்பிட்டதைப் பற்றி  எங்கள் பள்ளியின்  தமிழாசிரியர் நிறைய பேசுவார்.  ராமனருகில் இருந்தால்தான் சீதைக்குப் பிரகாசம், இல்லையென்றால் அது தெரியாது என்பதை எங்கள் ஆசிரியர் இப்படி மாற்றிக் கூறினார். ராமர்தான் பார்க்க எப்படி இருப்பார் என்பது தெரிந்த விஷயமாச்சே!  அதுதான் ராமர் கலர்ல இருப்பாரே. அப்படிப்பட்ட ராமன் பக்கத்தில் சீதை பளிச்சென்று தெரிபவள்,  நல்ல கலரான ராவணன் பக்கத்தில் இருக்கும்போது எடுபடவில்லையாம். அது ஞாபகத்தில்  நேற்றைய வெடியான‌  "வெயிலிடை வைத்த பாதி மீன் ஒன்று (3)"  உருவானது. சீதையும் காணும், விளக்கையும் காணும்,  வெறும் அயிரைமீன்தான் மிஞ்சியது.

சரி இன்றைய புதிருக்கு வருவோம்.
முதன் முதல் தோன்றாமல் உலகுக்கு வந்த பெண் (4)
வெடியை விரும்புதல் விட்டொழிக்க மாட்டோர்
அடிமுதலில் தேடீடுவீர் ஆழ்ந்து.

ஏவாளும் பார்வதியும் இப்புதிருக்  கேற்றதிலை
பாவால் உரைத்தேன் பணிந்து.

பெண்ணென்றால்  யாரென்று கேட்பீரேல் நீர்பெற்ற‌
கண்ணான பேதையாம் காண்.

சிக்கலான இவ்வெடிக்குச் சீராய் விடையளித்தோர்
பக்கமிதில் பட்டியலாய்க் காண்



Comments

Raghavan MK said…


A peek into today's riddle!
***********************
நல்ல கவிதை படைக்க நல்ல வாசிப்பு வேண்டும் . 9ம் நூற்றாண்டின் கடுமையான ஆணாதிக்க சட்டகத்துக்குள் இருந்து கொண்டு, பன்னிறு ஆழ்வார்களுள் ஒருவராக உயர்ந்ததற்க்கு, ஆண்டாளின் பக்தி மட்டுமே காரணம் அல்ல. பெரியாழ்வாரின் *புதல்வி* , அவரைப்போன்றே இலக்கணம் கற்றுச்சிறந்திருந்தது தான் காரணம்.
************************
_முதன் முதல் தோன்றாமல் உலகுக்கு வந்த பெண் (4)_

_முதன் முதல்_
= *( மு )தல்*
_தோன்றாமல்_
= *( ~மு~ )தல்*
= *தல்*
_உலகுக்கு_
= *புவி* க்கு
_வந்த_
= *தல் --> புவி*
= *புதல்வி*
= _பெண்_
************************
ஒரு தந்தை தன் பெண் குழந்தையைப் பார்த்துப் பாடுவது போல் பாரதிதாசனின் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

_தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட_
_சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை_
_சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ_
_சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்_
*_விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி_*
_வேளைதோறும் கற்று வருவதால் படியும்!_
_மலைவாழை அல்லவோ கல்வி? - நீ_
_வாயார உண்ணுவாய் போ என் *புதல்வி* !_

இந்தப் பாடலில் பாரதிதாசன் ‘விலை போட்டு வாங்கவா முடியும் - கல்வி?’ என்று கேட்டுள்ளார் பாருங்கள். காசு கொடுத்தால் கடையில் சென்று பொருள்களை வாங்க முடியும். கல்வியைக் கற்றால் தான் பெற முடியும் என்று விளக்கியுள்ளது அருமை அல்லவா?
💐🙏🏼💐
************************

வெடியும் அருமை, அதனை விளக்கும் குறள் வெண்பாக்களும் இனிமை

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்