தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
***********************
*போஷாக்கான உணவு*
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, கிட்டத்தட்ட எல்லா தேசத்திலும், பால் மனிதனுடைய முக்கிய உணவு. தாயிடம் இருந்து சிசுக்களுக்கு கிடைக்கும் *_போஷாக்கான_* உணவு பாலே. இருந்தாலும், மனிதன், வித்தியாசமான பல பாலூட்டிகளிடம் இருந்து இந்த மிகப் போஷக்கான உணவை பெறுகிறான்.. பாலோடு எந்தப் பொருளையும் கலக்காமல் அப்படியே குடிப்பதை மக்கள் விரும்புகின்றனர்.
***********************
_குறைவான போஷாக்கு முழுமையற்ற வயதின் கோளாறு இருந்தாலும் அரியணையேறிய மச்சக்காரி (5)_
_போஷாக்கு_ = *சத்து*
_குறைவான போஷாக்கு_
= *சத்( ~து~ )= சத்*
_முழுமையற்ற வயதின்_
= *வயதி( ~ன்~ )*
= *வயதி*
_கோளாறு இருந்தாலும்_
= *வயதி--> யவதி*
= *சத்+யவதி*
= *சத்யவதி*
= _அரியணையேறிய மச்சக்காரி_
***********************
*இராஜமாதா சத்யவதி*
சத்யவதி மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டி ஆவார். இவர் உபரிசரன் என்ற மன்னனின் மகள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டன் சந்தனுவின் இரண்டாவது மனைவி. வேதங்களையும் மகாபாரதத்தையும் தொகுத்தவருமான வியாசரை இளவயதில் பெற்றெடுத்தத் தாய். மிகப் பெரிய குரு வம்சத்தின் இராஜமாதா
***********************
💐🙏🏼💐