Skip to main content

விடை 36 11


இன்று காலை வெளியான வெடி:
குற்றம் புரிந்த கரம் இளந்தெங்கின் நீர் பருகியபின் சுரண்டுவது (4)

இதற்கான விடை ; வழுக்கை.

இன்று அனுப்பப்பட்ட  அனைத்து விடைகளையும் காண இங்கே செல்லவும்.

வழுக்கையென்றால் இளந்தேங்காயில் காணப்படும் மெல்லிய உண்ணக்கூடிய பகுதியாகும். தலையில் முடியுதிர்ந்த நிலையையும் வழுக்கைத் தலையென்று கூறுவர்.
 இதைப் பற்றி முழுக்கைச் சட்டைப் புலவர் எழுதிய இணையத்தில் கிடைத்தது இதோ:

அழுக்கை யறியாத வெண்பட்டுச் சட்டை
முழுக்கையுடன் நல்வைர‌ மோதிரங்கொண் டோனே
இழுக்கை யடைந்தாற்போல்   ஏன்வாட்டம் கொஞ்சம்
வழுக்கையால்  வந்த வினை.




Comments

Raghavan MK said…



A peek into today's riddle!
************************
இளநீரின் மருத்துவ பயன்கள்

**இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடைவதொடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.
** பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
** சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர்தான்.
** டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கபடும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
** அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகிப்பதால் அறுவைச் சிகிச்சைப்புன் விரைவில் குணமடையும்.
*********************
_குற்றம் புரிந்த கரம் இளந்தெங்கின் நீர் பருகியபின் சுரண்டுவது (4)_

_குற்றம்_ = *வழு*
_கரம்_ = *கை*
_இளந்தெங்கின் நீர் பருகியபின் சுரண்டுவது_
= *வழு+கை*
= *வழுக்கை*

(எ.கா :-
நல்ல வழுக்கையாக ஒன்று எடுத்துக் கொடுங்கள். இதில் இளநீர் மிகுதியாகக் காணப்படும்)
************************
வழுக்கையில் முடிவதல்ல வாழ்க்கை!
(வா. ரவிக்குமார் in Hindu தமிழ்திசை)

வழுக்கைத் தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிஸி…’ என்ற திரைப்படப் பாடலைக் கேட்டிருக்கிறோம். ‘எத்தனை பெரிய கிரவுண்ட வெச்சிருக்கே, நீ பெரிய பணக்காரம்பா’ என்று நண்பர்களால் சாதாரணமாகக் கேலிக்கு ஆளாகிறார்கள், தலையில் வழுக்கை இருப்பவர்கள். இந்தக் கிண்டல் கேலியையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் “போடா… ஆண்டவனே நம்ப பக்கம் இருக்கான்…” என்று சிரித்தபடி, பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து முன்பக்கம் இருக்கும் ஓரிரு முடிகளைக் கர்மசிரத்தையுடன் சீவிக்கொள்ளும் நம்பிக்கை மனிதர்களும் இருக்கிறார்கள்.
**************
ஊர்வசி ஊர்வசி - டேக் இட் ஈஸி ஊர்வசி
ஊசி போல உடம்பு இருந்தா - தேவைஇல்லை பார்மஸி
ஒளியும் ஒலியும் கரண்ட் போனா டேக் இட் ஈஸி பாலிஸி
வழுக்கைத் தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிஸி😄😄
*****************************
💐🙏💐

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்