Skip to main content

விடை 3508

இன்றைய வெடி

திருடரும் தென்னம்பாளை முனையை வெட்ட என்ன நடக்கும்?? (5)

இதற்கான விடை:  கள்வரும் (கள்  வரும்)


வெட்டிய பாளையிலிருந்து சொட்டிடும் கள்ளைச் சேகரிக்கிறார்.

(படம் : tamilwin.com என்ற வலைப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது).

Comments

Raghavan MK said…
A peek into today's Tamil riddle!
🌴🌴🌴🌴🌴🌴
தமிழகத்தில் வீசிய கஜா புயலினால் நாசமடைந்த தென்னை மரங்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கிறது! இந்த சமயத்தில் போய் தென்னம்பாளை முனையை வெட்ட என்ன நடக்கும்?
நம் தலையை வெட்டி விடுவார்கள்!
பிறகு யோசித்ததில் புரிந்தது , *முனையை வெட்டாமலேயே* விடையைப் பெறலாம் என்று.
🌴🌴🌴🌴🌴🌴🌴

*கள்* குடிப்பதனால் தீராத வலிகள், அழல் நோய்கள், இரத்தப்போக்கு, கரப்பான் ஆகிய நோய்களை தீர்க்க முடியும். குறிப்பாக அத்தி மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள்ளை குடித்து வந்தால் இறுதி வாழ்நாள் வரை இளைமையாகவே வாழ முடியும் என குறிப்பு கிடைக்கிறது. தாய்ப்பாலுக்கு இணையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கள் தமிழர்களின் வரலாற்றில் கற்பக விருட்சம் ஆகும்.
*************************
_திருடரும் தென்னம்பாளை முனையை வெட்ட என்ன நடக்கும்?? (5)_

_தென்னம்பாளை முனையை வெட்ட என்ன நடக்கும்??_

= *கள் வரும்*

_திருடரும்_
= *கள்வரும்*

*************************
_பிள்ளைய பெத்தா கண்ணீரு, தென்னைய வெச்சா இளநீருன்னு_ ஒரு பழமொழியே இருக்கிறது. இதில் இருந்தே தென்னையின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ளலாம். _ஆன்மிகத்துக்கும், தேங்காய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு._ _ஆன்மாக்களுக்கு ஆணவம், கன்மம், மாயை -_ _இந்த மூன்றும் நீங்கினால்_
_இறைவனை அடையலாம்_ _என்கிறது ஆன்மிகம்_ . இந்த தத்துவத்தை தேங்காயும் உணர்த்துகிறது.

அதாவது, தேங்காயின் மேலே உள்ள பச்சை மட்டை மாயை ஆகும். நார் பகுதி கன்மம். தேங்காய் ஓடு ஆணவம். தேங்காயை உடைக்கும்போது ஆணவம் என்னும் ஓடு உடைந்து வெண்மையான பருப்பு வெளிப்படுகிறது. அதுபோல், இறைவன் திருவடியை அடைய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் அகற்ற வேண்டும். இதனால்தான் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறோம்.

இளம் *தென்னம்பாளையை* வெட்டி, மடல் நீக்கி இடித்து சாறு பிழிந்து 100 மில்லி அளவு எடுத்து, அதனுடன் தயிர் 100 மில்லி சேர்த்து, எலுமிச்சை பழ ரசம் 50 மில்லியும் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு, நீர்சுருக்கு, ரத்தம் அல்லது சீழ் கலந்து வரும் கழிச்சல் குணமாகும்.
*************************
_நீயோ..._

_வெண்முத்துப் பதிந்த  வெள்ளைச் சிரிப்பை_ 

_இதழ் ஏட்டில் ஏந்திய  *தென்னம்பாளை* ..!_

🌴🌴🌴🌴🌴🌴
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:01:46 சதீஷ்பாலமுருகன்
2) 6:02:19 அம்பிகா
3) 6:03:35 முத்துசுப்ரமண்யம்
4) 6:04:13 Siddhan Subramanian
5) 6:05:01 பா நடராஜன்
6) 6:05:06 ரவி சுப்ரமணியன்
7) 6:05:27 எஸ்.பார்த்தசாரதி
8) 6:06:20 லதா
9) 6:06:25 இரா.செகு
10) 6:06:29 சங்கரசுப்பிரமணியன்
11) 6:10:15 K.R.Santhanam
12) 6:18:20 மடிப்பாக்கம் தயானந்தன்
13) 6:19:35 மீ கண்ணன்
14) 6:19:42 லக்ஷ்மி ஷங்கர்
15) 6:22:46 ரவி சுந்தரம்
16) 6:34:54 ராஜா ரங்கராஜன்
17) 6:40:41 ஆர்.நாராயணன்.
18) 6:41:02 KB
19) 6:48:11 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
20) 6:51:51 பாலு மீ
21) 6:52:02 உஷா
22) 6:58:02 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
23) 7:09:32 ஸௌதாமினி
24) 7:09:34 கோவிந்தராஜன்
25) 7:14:43 தி. பொ. இராமநாதன்
26) 7:47:18 சுந்தர் வேதாந்தம்
27) 7:52:51 மீனாக்ஷி
28) 7:53:46 வானதி
29) 7:59:38 ரமணி பாலகிருஷ்ணன்
30) 8:00:55 மு க பாரதி
31) 8:04:59 மீனாக்ஷி கணபதி
32) 8:17:58 பாலா
33) 8:21:25 ஶ்ரீவிநா
34) 9:03:32 பினாத்தல்
35) 9:07:12 ஆர். பத்மா
36) 9:26:38 மாலதி
37) 10:14:46 சந்திரசேகரன்
38) 10:55:52 ருக்மணி கோபாலன்
39) 11:29:50 விஜயா ரவிஷங்கர்
40) 11:47:30 மாதவ்
41) 11:51:21 ராமராவ்
42) 12:00:50 புவனா சிவராமன்
43) 12:35:16 மு.க.இராகவன்.
44) 14:41:22 தேன்மொழி
45) 16:30:48 பிரசாத் வேணுகோபால்
46) 18:58:35 பானுபாலு
47) 19:18:52 ஏ.டி.வேதாந்தம்
48) 19:19:13 பத்மாசனி
**********************
Ambika said…
பழங்கால விடுகதை வடிவம், "வீரர்கள் மடிவதேன்? சாம்பார் மணப்பதேன்?" இன்றைய புதிர் நினைவூட்டியது!

இந்த பாரம்பர வடிவத்திலேயே புதிராசிரியர் அமைத்த ஒரு விடுகதை "உருளைச் செடியை பறிப்பதேன்? ஊரெல்லாம் தாத்தா ஓடுவதேன்?
Guess... ;)
Ambika said…
பாரம்பரிய‌* வடிவத்திலேயே
Chittanandam said…
கள்வரும் என்கிற விடையை நானும் அனுப்பினேன். பட்டியலில் என் பெயர் இல்லை. பரவாயில்லை.

நல்ல புதிர்.
Senthil said…
This comment has been removed by the author.
Senthil said…
பூவேலி படப்பாடல் கேளுங்க.
Vanchinathan said…
பார்த்தேன். "கள்ளரும்" என்று உங்கள் விடை பதிவாகியிருந்தது.
நான் 20.45 அளவில் கள்வரும்! என்று கூறியிருந்தேன்
தென்னையப் பெத்தாலும் கண்ணீர் தான்...அதாவது
கள் + நீர்.
Vanchinathan said…
ரங்குடு, தினம் தென்னையப் பெத்தெடுத்தாலும் ஆனந்தமாகக் கண்ணீரை ஏற்பீர்கள் போலிருக்கிறதி!
Vanchinathan said…
ஆமாம் உங்கள் பெயர் விடுபட்டுப் போய்விட்டது. 8.52க்கு சரியான விடையை அளித்துள்ளீர்கள். இன்றிரவு விடையளிக்கும்போது திருத்திய அறிவிஅப்பை எல்லோரும் பார்க்கும்படி வெளியிடுகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.
M k Bharathi said…

👆வீரர்கள் மடிவதேன்
சாம்பார்மணப்பதேன்

காரணம்=பெருங்காயம்

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்