Skip to main content

விடை 3531

இன்றைய வெடி:
கடைசியாய் மெழுகி வைத்து வாசலில் விரிந்திருப்பது  ஒரு பறவை (4)
இதற்கான விடை:  கோகிலம் = கோலம் + கி

வாசலில் விரிந்திருப்பது கோலம்
"மெழுகி" என்பதன் கடைசி எழுத்து கி

Comments

Thirukumaran T said…
**** சரியான‌ விடை அளித்தவர்கள் ****

1) 6:01:24 லட்சுமி சங்கர்
2) 6:01:42 ராமராவ்
3) 6:01:52 KB
4) 6:10:52 முத்துசுப்ரமண்யம்
5) 6:12:10 அம்பிகா
6) 6:13:24 ரவி சுப்ரமணியன்
7) 6:19:11 சங்கரசுப்பிரமணியன்
8) 6:31:10 கேசவன்
9) 6:35:15 ஆர்.வானதி
10) 6:56:17 Siddhan
11) 7:06:08 ரவி சுந்தரம்
12) 7:21:42 பா நடராஐன்
13) 7:30:39 எஸ்.பார்த்தசாரதி
14) 7:32:58 மீனாக்ஷி
15) 7:34:19 மீனாக்ஷி கணபதி
16) 7:50:22 மீ கண்ணன்
17) 7:56:29 மாலதி
18) 8:11:21 மாதவ்
19) 8:14:29 பாலு மீ
20) 8:21:10 கோவிந்தராஜன்
21) 8:51:04 Suba Srinivasan
22) 9:04:36 நங்கநல்லூர் சித்தானந்தம்
23) 9:33:38 ஸௌதாமினி
24) 9:49:50 பிரசாத் வேணுகோபால்
25) 9:53:08 விஜயஸ்ரீ
26) 10:35:33 ராஜா ரங்கராஜன்
27) 11:04:15 ராஜி பக்தா
28) 11:37:43 ராஜி ஹரிஹரன்
29) 12:11:50 வி ன் கிருஷ்ணன்
30) 12:59:28 சதீஷ்பாலமுருகன்
31) 14:11:35 மு.க.இராகவன்.
32) 14:30:08 உஷா
33) 15:26:51 ரமணி பாலகிருஷ்ணன்
34) 16:45:44 ஆர். பத்மா
35) 16:57:35 பா நடராஐன்
36) 19:29:20 ஹரி பாலகிருஷ்ணன்
Thirukumaran T said…
A peek into today's riddle! by M K Raghavan

இந்தியாவின்
கோகிலம்
வானம்பாடி !

கவிக்குயில் சரோஜினி
அம்மையார்
🌸🌸🌸🌸🌸🌸🌸
சரோஜினி நாயுடு அம்மையார் 1879 ஆம் ஆண்டு, பிப்ரவரி 13 ஆம் நாள் , ஐதராபாத் நகரில் அவதரித்த கவியரசி. அவர்தம் இளம் வயதிலேயே விசேஷ குணங்கள் அமையப்பெற்ற அதிசயப் பிறவி. சுப்பிரமணிய பாரதிக்கு இணையாகத் தம் எழுச்சிமிகு கவிதைகள் மூலம் நாட்டு மக்களிடையே, சுதந்திர தாகத்தையும், விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியதோடு தாமும் அப்போராட்டத்தில் பங்கு கொண்டவர்.இந்தியாவின் , முதல் பெண் மாநில ஆட்சித் தலைவர் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவரும் ஆவார். கவிக்குயில், கவியரசி, இந்தியாவின் கோகிலம் , வானம்பாடி என்றெல்லாம் பல்வேறு பட்டங்களுடன் சிறப்பிக்கப்பட்டவர்.

ஒரு கவிஞர் என்பவர், கற்பனைச் சோலையுள், மலர்ப் பூஞ்சோலைகளின் நறுமணத்தினூடேயும், இயற்கையின் இன்பத் தேனைப் பருகிக் கொண்டு அம்மயக்கத்தில் இனிய கானங்கள் மட்டும் இசைத்துக் கொண்டு, மக்களைப் பரவசப்படுத்தும் ஒரு இசைக்கருவியாக மட்டும் இராது, சக மனிதர்களின் துயரங்களிலும் பங்கு கொண்டு அவர்தம் துயர் தீர்க்கும் முகமாக, போர்க்களத்தினிடையேயும் பரணி பாடும் வல்லமை கொண்டவனாக இருப்பவனே சிறந்த கவியாக இருக்க முடியும் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் கவியரசி சரோஜினி அம்மையார். ஓய்ந்து போன உழைப்பாளிகளுக்கும், துவண்டு போன மக்களுக்கும், தம் உரிமையைக் கூட உணராத பேதைப்பெண்டிருக்கும், சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் விழிப்புணர்வையும், எழுச்சியையும் ஊட்டும் உன்னத கவிஞர் கவிக்குயில் சரோஜினி தேவியார் என்றால் அது மிகையாகாது.
*********
கோகிலம்
பெயர்ச்சொல்
உயர் வழக்கு
குயில் .
*********
கடைசியாய் மெழுகி வைத்து வாசலில் விரிந்திருப்பது  ஒரு பறவை (4)

கடைசியாய் மெழுகி
= கி

வாசலில் விரிந்திருப்பது
= கோலம்

வைத்து,
= கி --> கோலம்
= கோ + கி+ லம்
= கோகிலம்

ஒரு பறவை
= கோகிலம்
*********
பிறப்பு

நான் ஒரு விசித்திரப் பிறவி என் தாய்க்கு!
சொந்த மனை கட்டத் தெரியாமல்.....
என்னை எண்ணிப் பார்க்காமல்......
என் இனம் சேர்க்காமல்....
மாற்றாள் மனையில் திருட்டுத் தனமாய்
என்னை இட்டவுடன் பணி விட்டதென்று
விரைந்து பறக்கும் விளங்காப் புதிர்.

குரல்களால் கொள்ளை கொள்ளும்
கொள்ளைக் காரிக்குதன் குழந்தைக்கு_
தாலாட்டுப் பாடத் தெரியாத கோகிலம்

என்னை இட்ட மனையில்நான்_
வளர்ந்து வரும் வேளையில்......_
வளர்ப்புத் தாய் 'இனம்' கண்டு
அவள் 'யாதி' இல்லையென்று..
குழந்தையென்று பாராமல்..
'கொத்தித்' துரத்திவிட.....

சே............என்ன? பிறப்பு அநாதையாய்.......
தரிசனம் காட்டா ......_
கரிசனமில்லாத் தாயை
கானகத்தில் கூவிக் கூவி அழைக்கின்றேன் .
🌸🌸🌸🌸🌸🌸🌸
சொந்தத்தாய் {குயில்}
வளர்ப்புத்தாய்{காகம்}

நன்றி
பீஷான் கலா,சிங்கப்பூர்

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்